இடுகைகள்

நாடகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

படம்
  தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள் 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.  இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.    தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில் அவர்களுக்கு எந்த உரிமை

மனிதர்கள் தங்களை எப்படி வெளியுலகத்தில் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்?

படம்
  கல்யாணம் என்றால் உற்சாகமான புன்னகை, சிரிப்பு இருக்கும். ஒருவர் இறந்துவிட்டார், அவரின் ஈமச்சடங்களில் வருத்தம், துயரம் இருக்கும். அங்கு போய் இறந்தவருக்கு மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூற முடியாது. இதெல்லாம் ஒருவர் அனுபவப்போக்கில் கற்றுக்கொள்வதுதான். கற்றபிறகு ஆக்சன் சொல்லாமலேயே நடிக்க வேண்டியதுதான்.  பிடிக்காது என்றாலும் கூட வாழ்க்கையில் நிறைய இடங்களில் டோண்ட் கொஷின் தி எமோஷன் என மனதிற்குள்  சொல்லிக்கொண்டு சில நாடக தருணங்களை செய்யவேண்டியிருக்கும். அதை தவிர்க்க முடியாது. சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்பதற்கென யூனிஃபார்ம் ஆடைகளை அணிந்த பெண்கள், ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் அணிந்துள்ள ஆடை, நகை, இவர்களை சுற்றியுள்ள பொருட்கள் அனைத்துமே கலை இயக்குநர் தோட்டாதரணி போடும் செட் போலவே இருக்கும். குறையே சொல்ல முடியாது. நட்சத்திர ஹோட்டல்களில் குறிப்பிட்ட பிரபல செஃப் வரும் தினங்களில் இதுபோல வரவேற்பும், மரியாதையும் இருக்கும். எதற்கு இதெல்லாம், இதெல்லாம் உண்மையா என்றால் கிடையாது. ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பணம் இன்னொருவரின் கையில் வரவேண்டும். அதற்காகத்தான்

தெரிஞ்சுக்கோ - இசை, நாடகம்

படம்
  தெரிஞ்சுக்கோ – இசை பியானோ கீபோர்டில் 88 கீகள் உண்டு. இதில் 52 கீகள் வெள்ளை நிறமானவை. கறுப்பு நிறமான கீகளின் எண்ணிக்கை 32 2019ஆம் ஆண்டு தனியிசை பாடல்களின் விற்பனையில் வினைல் ரெக்கார்டுகளின் பங்களிப்பு 26 சதவீதம். தனியிசை பாடல் ஒரு கோடி என்ற   எண்ணிக்கையில் விற்றால் அதற்கு பிளாட்டினம் என்ற அந்தஸ்தை அமெரிக்காவில் வழங்குகிறார்கள். ஜெர்மனியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புல்லாங்குழலின் வயது 43 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இசைக்கலைஞர் வோல்ஃப்கேங் மொசார்ட் தனது முதல் சிம்பொனி இசைக்கோவையை இயற்றியபோது அவருக்கு வயது எட்டு. முதல் ஓபராவை இயற்றியபோது   அவருக்கு பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. 2019ஆம் ஆண்டு, உலக இசைத்துறையின் மதிப்பு 20.2 பில்லியன் ஆகும். நொடிக்கு   4,186 மடங்கு வேகத்தில் வாசிக்கப்படும் பியானோ நோட் சி8 ஆகும். அடால்ஃப் சாக்ஸ், பதினான்கு வகையான சாக்ஸ்போன்களை உருவாக்கினார். அவர் 1846ஆம் ஆண்டு உருவாக்கி காப்புரிமைக்கு பதிந்தார். அதில் நான்கு மட்டும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.   நாடகம் பிரிட்டிஷ் நாட்டில் அரங்கேற்றப்படும் புகழ்பெற்ற நாடகத்தின் பெயர், தி பான்டம் ஆஃப் தி ஓபரா.

புற்றுநோயால் அவதிப்படும் ஹோட்டல் அதிபரின் பேரனாக நடிக்கும் நாடக நடிகர்! - கர்டைன் கால்

படம்
  கர்டைன் கால் - கே டிராமா   கர்டைன் கால் கே டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   நாக்வோன் ஹோட்டல் தலைவரான ஜேயும் என்ற பெண்மணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாத கெடு விதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அவர் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு வந்து ஹோட்டல் வைத்து வெற்றிபெற்று பணக்காரர் ஆனவர். வடகொரியாவில் அவருக்கு கணவரும், யுன் ஜூன் என்ற ஆண் குழந்தையும் உண்டு. அவர்களை தென்கொரியாவுக்கு கூட்டி வர நினைக்கிறார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பேரன் முன் சாங்கையேனும் கூட்டி வந்து நல்ல முறையில் வாழவைக்க நினைக்கிறார். இதற்காக அவரது மேனேஜர் முன் சாங்கை தேடுகிறார். முன் ஜாங் கிடைக்கிறார். ஆனால்,   அவர் வன்முறையான பணத்திற்கு எதையும் செய்யும் அடியாளாக இருக்கிறார்.   இதனால் மிரண்ட மேனேஜர் நாடக நடிகர் ஜேனை காசு கொடுத்து பேரனாக நடிக்க ஏற்பாடு செய்கிறார். அவரும் காசுக்காக நடிக்க ஒப்புக்கொள்கிறார். அவரது நாடகஅரங்கு தோழியான யுன் ஹூய்யும் சேர்ந்து கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். இவர்கள் போலியானவர்கள் என ஹோட்டல் தலைவர் பெண்மணி, அவரது பேரன், பேத்திகள் கண்டுபிடித்தார்களா என்ப

மாஃபியா கேங்கின் கொலை முயற்சியைத் தடுத்து காதலியைக் காக்கும் ராணுவ அதிகாரி! மிஸ்டீரியஸ் லவ் - சீன டிவி தொடர்

படம்
  மிஸ்டீரியஸ் லவ் (2021) சீன டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ருவான் நினான் சூ என்ற நாடக நடிகைக்கும், ராணுவ வீரனுக்கும் உருவாகும் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. ருவான் என்ற நாடக நடிகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி கனவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில், ருவான் மாஃபியா கும்பலால் கடத்தப்படுகிறார். அவரை, அந்த குழுவில் கருப்பு ஆடாக இருந்த ராணுவ அதிகாரி லீ, காப்பாற்றுகிறார். அதேசமயம் கப்பலில் நடைபெறும் விபத்தில் அவர் இறந்துபோகிறார். அதாவது, ருவான் அப்படி நினைத்துக்கொள்கிறார்.   ருவானுக்கு, ராணுவ அதிகாரி தன்னைக் காப்பாற்றிய காரணத்தால் அவரை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தனக்கு கொடுத்த பூச்செடியை தொட்டியில் வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கிறார். இறந்துபோய்விட்டார் என மனது சொன்னாலும், அதே மனதின் இன்னொருபகுதி அப்படி நடந்திருக்காது என கூறுகிறது. பின்னாளில் ருவான், தனது வெய் குழுவினரின் நாடகத்திற்காக முன்னணி விளம்பர மாடல் ஒருவரை அழைக்கப் போகும்போது அவருக்கு பாதுகாவலராக இருப்பவர், ராணுவ அதிகாரி லீ சாயலில் இருப்பதைப் பார்க்கிறாள்.

ஆதவற்றோரை கலைப்பாதையில் திருப்பும் கனடா நாட்டு பெண்மணி! - பைலிஸ் நோவக்

படம்
  பைலிஸ் நோவக் ஆதரவற்ற இளைஞர்களுக்கு கலைக்கல்வி இலவசம்!  1984ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பைலிஸ் நோவக், வாலஸ்பர்க்கிலிருந்து டொரன்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அவருக்கு திரைப்பட நடிகராகும் ஆசை இருந்தது. ஆனால் நாடக மேடை அனுபவம் இல்லாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீடற்ற சிறுவர்கள் தங்கியிருக்கும் மையத்தில் தன்னார்வலராக பணிபுரியத் தொடங்கினார். அங்குள்ள சிறுவர்களுக்கு,  கலைத்திறன் பயிற்சிகளை வழங்கத் தொடங்கினார். இதுவே இன்று அவரது முக்கிய அடையாளமாகும்.  1996ஆம் ஆண்டு நோவக்கும், நாடக கலைஞரான சூ கோஹென் ஆகிய இருவரும் இணைந்து ஸ்கெட்ச் வொர்க்கிங் ஆர்ட்ஸ் (Sketch working arts) என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பு வீடற்ற சிறுவர்களுக்கு (16-29 வயது) கலைத்திறன் பயிற்சியை இலவசமாக வழங்குகிறது.  ”கிரியேட்டிவிட்டியான பயிற்சிகள், வீடற்ற சிறுவர்களுக்கு உலகில் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. கருத்தை சுதந்திரமாக கூற உதவும் கலைகள் தான் என்னை இயக்குகின்றன” என்றார் பைலிஸ் நோவக். இவர், பெருந்தொற்று காலத்திலும் ஆன்லைனில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கலைப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.  Picture this -Phyll

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது.  இதையும் படத்தில் கிண்டல்

மகத்தான இலக்கிய எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர்!

படம்
  ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கு பெரிய மரியாதை உண்டு. அவரின் பல்வேறு நாடகங்கள்,கதைகளை வைத்து ஆங்கிலப் படங்களை உருவாக்கியுள்ளனர். இப்போது பார்க்கப்போவது அவரைப்பற்றித்தான்.  1564ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று, ஷேக்ஸ்பியர் பிறந்தார். ஜான் மற்றும் மேரி ஷேக்ஸ்பியர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்ட்ராபோர்ட் கிராமர் பள்ளியில் படித்தார். தனது பதினெட்டு வயதில் அன்னா ஹாத்வே என்ற பெண்ணை மணந்தார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சூசன்னா, ஜூடித் , ஹாம்னட் என்பதுதான் பிள்ளைகளின் பெயர். சில ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். இதற்குள்ளாகவே அவருக்கு கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர் என்ற அங்கீகாரம் கிடைத்திருந்தது.  இவர் எழுதிய வரலாற்று நாடகங்களில் ஜூலியஸ் சீசர், ஐந்தாம் ஹென்றி, ஓத்தெல்லோ, மெக்பத், ஆகியவை முக்கியமானவை. நகைச்சுவை நாடகங்களான ஏஸ் யு லைக் இட், எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், காதல் நாடகங்களான ரோமியோ ஜூலியட், ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகியவையும் முக்கியமானவை.  ஷேக்ஸ்பியர் கிளாசிக்கான எழுத்தாளர். இன்றும் கூட அவர் தேர்ந்தெடுத்த பாத்திர

நண்பன், காதலி தூரம் தள்ளிப்போக இசைவாழ்க்கையை தக்க வைக்க போராடும் கலைஞனின் கதை! டிக் டிக் பூம்

படம்
  டிக் டிக் பூம் ஆண்ட்ரூ கார்பீல்ட் படம் அமெரிக்க இசைக்கலைஞரான ஜொனாதன் லார்சன், வாழ்க்கையைப் பேசுகிறது.  ஜொனாதன் லார்சனாக ஆண்ட்ரூ கார்பீல்ட் நிறைய பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சி தொடங்கி படம் முடியும் வரை அவரின் அர்ப்பணிப்பு உணர்வு அசத்தலாக இருக்கிறது.,  ஜொனாதனுக்கு சில நாட்களில் 30 வயது தொடங்கவிருக்கிறது. அதுநாள் வரை அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என அவருக்கே கேள்வி எழுகிறது. எனவே, அவர் இத்தனை நாட்களும் பிராட்வே நாடகங்களுக்கு இசையமைப்பும் வாய்ப்பை பெற முயன்று வந்தார். ஆனால் ஏதோ ஒரு விஷயம் இசையில் வேலை செய்யவில்லை. எனவே, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் காதலியும் நடனம் சார்ந்த வேலைக்காக வேறு இடத்திற்கு போக நினைக்கிறாள். சிறுவயது நண்பன் நடிக்கும் வாய்ப்பு தேடி முயன்று தோற்று வேலை தேடி வேறு இடம் நோக்கி போகிறான்.  எனவே, தன் வாழ்க்கை சார்ந்து வேகமாக யோசிக்கும் நிலைக்கு ஜொனாதன் தள்ளப்படுகிறான். வாழ்க்கையை நடத்த இசை மட்டுமே போதாது அல்லவா? இதனால் துரித உணவகம் ஒன்றில் வெய்ட்டராக வேலை பார்க்கிறான்.  ஜொனாதனின் சிறப்பே, அவன் எழுதும் பாடல்கள் அனைத்துமே தினசரி வாழ்

நம்பிக்கை அளிக்கும் கலை நாயகர்கள் - கீர்த்தி சுரேஷ், சைதன்ய தம்கனே, பிரியங்கா சர்மா

படம்
  கீர்த்தி சுரேஷ் என்ன ஒரு சிரிப்பு! கீர்த்தி சுரேஷ் நடிகை மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார், நடிகை மேனகா ஆகியோருக்கு பிறந்த பெண். அப்பாவின் தயாரிப்பில் சில படங்களில் குழந்தையாக நடித்தார். சென்னையில் உள்ள பியர்ல் அகாடமியில் ஃபேஷன் டிசைனிங் படித்தார்.  பிறகு  நாம் நடிக்கலாமே என்று தோன்ற அதை அப்படியே மனதில் தோன்றியபடியே செய்தார். முதலில் மலையாளத்தில் நடித்தார். அப்படியே தமிழ், தெலுங்கிற்கு வந்தார்.  முதலில் தமிழில்  முகம் தென்பட்ட படங்களில் பெரிதாக நடிக்கும் வேலையே இல்லை. அந்தளவு தான் கீர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது. பாடலுக்கு வருவார். சிரிப்பார். இப்படித்தான் ரஜினி முருகன், ரெமோ, சர்க்கார். பைரவா படங்களில் இவரது பங்களிப்பும் இருந்தது.  2018இல் இவர் நடித்த மகாநடி என்ற படம் யாருமே எதிர்பார்க்காத வெற்றியாக அமைந்தது. நடிகை சாவித்ரியை உடல் அளவிலும் பிரதிபலித்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார். பலரும் நடிப்பை பாராட்டினர். இதில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் உண்டு.  பிறகுதான் பெங்குயின், மிஸ் இந்தியா, அண்ணாத்தே படங்களில் நடித்தார். இந்த படங்களின் முடிவு என்ன என்று கேட்க

கவனிக்கப்படாத ஆளுமைகள்

படம்
  கவனிக்கப்படாத ஆளுமைகள் அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதித்த ஆளுமைகளை கணக்கில் எடுத்தால் நூறு ஆளுமைகள் என்ற தலைப்பில் பட்டம் பதிப்பகத்தில் நூலே கொண்டு வரலாம். ஆனால் இதில் இடம்பெறுபவர்கள் யார்? ஐன்ஸ்டீன், காஸ், ஆர்க்கிமிடிஸ், கலீலியோ ஆகியோர்தான் இப்பட்டியலில் இடம்பெறுவார்கள். ஆனால் இவர்களைக் கடந்து புகழ்பெற முடியாத புத்திசாலிகள் உண்டுதானே? அவர்களின் வரிசைதான் இது.  அமேலியா எம்மி நோதர் (Amalie Emmy Noether 1882–1935) பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்து ஆற்றல் சேமிப்பு குறித்த வரையறையைக் கூறிய அறிவியலாளர். சார்பியல் தியரி சார்ந்த கணிதத்திலும், இயற்கணிதத்திலும் பங்களித்துள்ளார். பல்லாண்டுகள் புறக்கணிப்புக்குப் பிறகு கோட்டிங்கன் அறிவியலாளர்கள் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பாலின பாகுபாட்டினால் அமேலியாவின் திறமை மறைக்கப்பட்டது வேதனை.  எமிலி போரல் ((Emile Borel ( 1871–1956)) பிரான்சில் பிறந்த அறிவியலாளரான இவர், பதினொரு வயதிலேயே அறிவுதாகத்தில் பாரிஸ் சென்றார். நிகழ்தகவு தியரியில் பல்வேறு சாதனைகளை  நிகழ்த்தியவர் போரல். 1920 ஆம்ஆண்டு கேம் தியரியில் பல்வேறு அடிப்படை அம்சங்கள் உருவாக

மனிதநேயத்தை ஒட்டியதே கலை! - அனாதைப் பிணங்களை எரிக்கும் திண்ணைநிலாவாசிகள் நாடககுழு தலைவர் பக்ருதீன்

படம்
            அனாதைப் பிணங்களை எரிக்கும் தியேட்டர் குழு ! சென்னையைச் சேர்ந்த திண்ணை நிலாவாசிகள் எனும் நாடக குழு , தங்களது செயல்பாடு தாண்டி சமூகப்பணிக்காக பாராட்டப்பட்டு வருகிறது . இக்குழுவினர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனாதைப் பிணங்களை பெற்று அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர் . இதனை செய்யும் குழுவின் தலைவர் எம் . பக்ருதீன் . சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கலைஞர்களுக்கு தெரிவது அவசியம் . அதோடு சமூகத்திற்கான பணிகளிலும் அவர்கள் பங்களிக்கவேண்டும் என்று கொள்கையுடையவர் பக்ருதீன் . இங்கு யாரும் அனாதைகள் இல்லை . நாங்கள் எந்த சடங்குகளையும் பின்பற்றவில்லை . உடல்களை முறையாக பெற்று அதனை முறைப்படி அடக்கம் செய்கிறோம் என்றார் பக்ருதீன் . பொதுமுடக்க காலத்திலும் கூட நாறு பிணங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்த நாடக குழு . கோவில்படியில் செயல்படும் முருகபூபதியின் மணல் மகுடி நாடக குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றவர் பக்ருதீன் . 2015 ஆம்ஆண்டு சமூக செயல்பாட்டாளர் ஆனந்தி அம்மாளின் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறார் . ஆனந்தி அம்மாள் , அனாதைப் பிணங்களை பெற்று நல்லடக்கம் செய்து வந்தார் .

சினிமா, நாடகம், குறும்படம், ஓடிடி தளம் என எதில் நடித்தாலும் கதைதான் முக்கியம்! -ராதிகா ஆப்தே, நாடக, சினிமா நடிகை

படம்
           ராதிகா ஆப்தே நாடக, சினிமா நடிகை ஓடிடி தளம்தான் உங்களுக்கு பெரிய பிளாட்பாரமாக அமைந்தது . படத்தை விட ஓடிடி பெரியதாக உள்ளதாக நினைக்கிறீர்களா ? சினிமாவிலிருந்து ஓடிடி பக்கள் வெட்கப்ப்டாமல் சென்ற நடிகர்களில் நானும் ஒருத்தி . சேகர்டு கேம்ஸ் , ராட் அகேலி ஹை என்ற படங்கள் கொடுத்த பிரபலம் சினிமாவை விட அதிகம் என்பேன் . நான் நாடகம் , ஓடிடி , படம் , குறும்படம் என எதையும் தீர்மானித்து இயங்குவதில்லை . அதிலுள்ள கதைதான் முக்கியம் . ஓடிடி தளங்கள் நாம் படம் பார்க்கும் முறையை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா ?     பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் . ஆனால் சிறிய படங்களுக்கு அப்படி கிடைக்க அதிக வாய்ப்புகள் இல்லை . தியேட்டருக்கு சென்று பார்க்குமுடியாத மக்களுக்கு ஓடிடி தளங்கள் உதவுகின்றன . நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதற்கு பணம் கொடுத்தால் போதும் . எப்போது படம் பார்க்கவேண்டுமோ அப்போது பார்த்துக்கொள்ளலாம் . இதெல்லாம் உங்களுடைய தேவையைச் சார்ந்ததுதான் . அசாக்தா கலாமன்ச் மூலம் நடத்தப்பட்ட நாடகங்களில் உங்களை பார்த்தோம் . நாடக மேடை நடிப்பை இப்போது எப்படி பார்

நாடக மேடையிலிருந்து உருவாகி வந்தவன் நான். அதுதான் என்னை திரைப்படத்திற்காக உந்தியது! - அனுராக் பாசு

படம்
        anurag basu         அனுராக் பாசு இந்தி திரைப்பட இயக்குநர் உங்கள் திரைப்படம் பொதுவாகவே பெரிய கேன்வாஸ் கொண்டதாகவே இருக்கிறதே? லூடோ அந்த வகையைச் சேர்ந்ததுதானா? பெரிய படங்களாக எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுப்பதில்லை. நான் கதையை எழுதும்போது அதனை காட்சிரீதியாக யோசித்து பார்ப்பேன். அப்படி பார்த்து பிட்டு கதாபாத்திரத்திற்கு அபிஷேக் பச்சனையும், சட்டு பாத்திரத்திற்கு பங்கஜ் திரிபாதியையும் நடிக்க கேட்டு அணுகினேன். அவர்களும் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒகே சொல்லிவிட்டனர். சான்யா மல்கோத்ராவும், அபிஷேக் பச்சனும் நீங்கள் படத்தை இயக்கு வதால்தான் உள்ளே வந்தார்கள் என்று கூறப்படுகிறதே? நான் இதற்கு ஏதும் சொல்லமுடியாது. அப்படியும் இருக்கலாம். செட்டில் நான் உருவாக்கும் சூழல் அப்படி அவர்களை யோசிக்க வைத்திருக்கலாம். நீங்கள் தொடக்கத்தில் டிவி தொடர்களை இயக்கியது திரைப்படங்களை இயக்குவதற்கு உதவி செய்கிறது என்று கூறலாமா? டிவி என்று இல்லை. நான் நாடகத்திலிருந்து காட்சியை எப்படி ஒருங்கிணைக்கிறேன் என்று கற்று வந்திருப்பதாக நினைக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. நாடகமேடைதான் எனது ஒரே பள்ளி.