இடுகைகள்

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்!

பிஸினஸ் குரு! முகேஷ் அம்பானி தெற்கு ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக சீனர்களையும் மிஞ்சி வளர்ந்து நிற்கிறார் . பெட்ரோல் பங்கில் வேலை செய்து பட்டு துணிகளை இறக்குமதி செய்து , மசாலா பொருட்களை வெளிநாட்டுக்கு விற்று அரசியல்வாதிகளை லைசென்ஸ் ராஜ் கடந்து வசீகரித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கிய திருபாய் அம்பானியின் பெயரை காப்பாற்றியதோடு இன்று ரிலையன்ஸ் என்ற பெயர் ஒலிக்காத திசைகளே கிடையாது . 500 ரூபாய்க்கு சிடிஎம்ஏ போன்களை அறிமுகம் செய்வது , சல்லீசு விலையில் ஜியோ டேட்டா பிளான்கள் , தொடங்குவதற்கு முன்னால் அங்கீகாரம் பெற்ற ஜியோ பல்கலைக்கழகம் என முகேஷ் அதிகம் பேசாவிட்டாலும் அவரின் செல்வாக்கு உலகையே அவர் குறித்து பேசவைத்துக் கொண்டிருக்கிறது . தந்தை இறப்புக்கு பிறகு ஏற்பட்ட வணிக பாகப்பிரிவினை இரு சகோதரர்களை பிரித்தாலும் தாய் கோகிலாபென் இருவரையும் இணைக்கும் பாலமாக இருக்கிறார் . சீவிண்ட் எனும் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ள  பதினான்கு மாடி சொகுசு வீட்டில் முகேஷூம் , அனிலும் வசித்து வருகின்றனர் . திருபாய் அம்பானி பெட்ரோல் பங்கிலும் ஆபீஸ் கிளர்க்குமாக பணிசெய்தவர் மெல்ல தொடர்புகளை வ