இடுகைகள்

தனித்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடியை நகல் எடுக்க கூடாது!

படம்
          தனித்துவம் கொண்ட கொடி! வாகைப்பூவோ, தூங்குமூஞ்சி பூவோ உருவாக்கும் கொடி தனித்துவமாக சொல்ல வரும் கருத்தை தெளிவாக கூறவேண்டும். இணையத்தில் நிறைய கொடி வடிவமைப்புகள், டெம்பிளேட்டுகள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து இசைக்கலைஞர் அனிருத் போல சாம்பிள் பார்த்து கடன் வாங்கி வெற்றியடையலாம் என நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. நாட்டின் கொடி என்றால் அங்கு வசிக்கும் மக்கள், கலாசாரம், பெருமை, நிலப்பரப்பு என நிறைய விஷயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும். இன்னொரு நாட்டின் கொடியைப் பார்த்து அப்படியே நகல் எடுப்பது விபரீதத்தில்தான் முடியும். கானா நாட்டின் கொடியைப் பாருங்கள். இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களோடு நடுவில் கருப்பு நட்சத்திரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பிறநாட்டு கொடிகளை அடிப்படையாக கொண்டு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனித்தன்மையாக உள்ளது. இந்தோனேசியா நாட்டின் கொடியைப் பார்த்தால் அப்படியே மொனாக்கோ நாட்டு கொடியைப் போலவே உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கொடியை அப்படியே தலைகீழாக்கினால் ஸ்பெயின், போலந்த...

கொடிகளை வடிவமைப்பதில் நிறம், இலச்சினைக்கு முக்கிய பங்குண்டு!

படம்
      கொடிகளை வடிவமைப்பதில் நிறங்களுக்கு முக்கியப் பங்குண்டு! சிவப்பு, நீலம், பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை கொடிகளில் பயன்படுத்தும் முக்கியமான நிறங்கள். இவை தவிர, கருநீலம், ஆரஞ்சு, பழுப்பு ஆகிய நிறங்களையும் பயன்படுத்தலாம். ஆனால், நல்ல வடிவமைப்பு இருந்தால்தான் எடுபடும். மேற்சொன்ன நிறங்களை மென்மையான, அழுத்தமான இயல்பில் பயன்படுத்துவதும் உண்டு. சிறந்த கொடி கிரேஸ்கேல் முறையிலும் தெளிவாக தெரியவேண்டும். மூன்று நிறங்கள் போதுமானது. அதற்கு மேல் உள்ள நிறங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியான நிறங்களை பயன்படுத்தி கொடிகளை உருவாக்குவது நடைமுறையில் செலவையும் அதிகரிக்கும். நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் கொடியைப் பார்ப்போம். பின்னணியில் சிவப்புநிறம் உள்ளது. அதன்மேலே கருப்புநிறப்பட்டை. அதில் வெள்ளை நிற பெருக்கல் குறி. எளிதாக அடையாளம் காண முடிகிற இயல்பில் உள்ள கொடி. இதற்கு எதிர்மாறாக சைனீஸ் அட்மிரல் கொடி உள்ளது. ஐந்து நிறங்கள் கொண்டுள்ளதோடு இதில் இடதுபுறத்தில் இலச்சினை ஒன்று உள்ளது. நினைவுபடுத்திக்கொள்ள கடினமான கொடி. டொமினிய குடியரசு கொடி நீலம், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்டு...

உடல் மனதை பகிர்ந்தாலும் தனித்துவத்தை இழக்காமல் ஒருவரால் காதலிக்க முடியுமா?

படம்
வாழ்க்கையில் சோறு தின்பதற்கு தரித்திரம் துரத்தாமல் இருப்பவர்கள், நிச்சயம் தான் யார் என்பதற்கான தேடுதலை செய்வார்கள். இதற்காக சினிமா நடிகர்கள் படிக்கும் ஆன்மிக புத்தகங்களை தேடுவது, ஞான யோகியான ரமணரின் ஆசிரமத்தில் அடம்பிடித்து நுழைவது என செய்வார்கள். அடிப்படையான நோக்கம் தான் எதற்கு பிறந்திருக்கிறோம், என்ன செய்யப்போகிறோம், அதாவத நம் மூலம் என்ன நடக்கவிருக்கிறது என அறிவதுதான். ஒருவருக்கு கண்முன்னே இரு பாதைகள் உண்டு. ஒன்று மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த பாதை. அடுத்து, கடினமான அதிருப்தியான பாதை. வாழ்க்கைக்கான அர்த்தம் தேடுவது என்பதே மோசமான வாழ்க்கையை சமாளிக்கும் பொருட்டுதான் என்று உளவியலாளர் எரிக் ஃப்ரோம் கூறுகிறார்.  அன்புகொண்ட வாழ்க்கையே நல்ல மனிதனை உருவாக்குகிறது என எரிக் நம்பினார். வாழ்க்கை உணர்ச்சிகரமான விரக்தியைக் கொண்டது. ஒரு மனிதர் இயற்கையிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்கிறார். அவரின் இன்னொரு பகுதி, பிறரோடு தன்னை இணைத்துப் பார்த்து பொருத்திக்கொள்ள முயல்கிறது. இயற்கையிலிருந்து மனிதர்கள் வேறுபட்டு இருப்பதற்கான காரணம், அவர்களின் புத்திசாலித்தனம்தான். அறிவு கூடும்போது மெல்ல இயற்கை...

கண்டுபிடிப்புகள் வழியாக புவியியலைக் கற்க வேண்டும்! - ஜோனியா பாபெர்

படம்
  ஜோனியா பாபெர்  1862-1955) அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில், கிளார்க் கவுண்டியில் பிறந்த புவியியலாளர்.  மேல்நிலைப்பள்ளிப் படிப்பிற்காக, தொலைவில் உள்ள  எட்கர் கவுண்டியில் உள்ள பாரிஸ் எனுமிடத்திற்கு சென்றார்.  மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்த ஜோனியா, ஆசிரியர் பயிற்சியில் இணைந்தார்.   1886-88 காலகட்டத்தில்,  தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றினார். பிறகு,  குக் கவுண்டி நார்மல் ஸ்கூலில் (தற்போதைய சிகாகோ ஸ்டேட் பல்கலைக்கழகம்) , ஆசிரியராக கிடைத்த பணிவாய்ப்பை ஏற்றார். 1890 - 1899 காலகட்டத்தில் அங்கேயே  புவியியல் துறை தலைவராக உயர்ந்தார். ஜோனியா பாபெர், புவியியலின் பல்வேறு பிரிவுகளை (Meteorology, Mathematical Geography) மாணவர்களுக்குக் கற்றுத் தந்தார்.  மாணவர்கள் புவியியல் சார்ந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும், அதன் வழியாக பாடங்களைக் கற்க வேண்டும் என ஜோனியா விரும்பினார்.  1896இல் புவியியல் மாணவர்களுக்கான தனித்துவ மேசையை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 1898ஆம் ஆண்டு ஜோனியா துணை நிறுவனராக இருந்து புவியியல் சங்கத்தைத் தொடங்கினா...

க்ரௌன் ஷைனெஸ் -மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி

படம்
  மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி! பெருந்தொற்று தொற்றாமலிருக்க ஆறு அடி இடைவெளி அவசியம். இதுபோலவே, இயற்கைச்சூழலிலுள்ள மரங்கள்  இடைவெளி விட்டு வளருவதை கடைபிடித்து வருகின்றன. காட்டில் மரங்கள்  நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு மரத்தின் உயர்ந்த கிளைகள்  அருகிலுள்ள மரங்களை தொடுமளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அவற்றைத் தொட்டிருக்காது. சிறிய இடைவெளி இருக்கும். இதற்கு க்ரௌன் ஷைனெஸ் (Crown Shyness)என்று பெயர். அடர்ந்த காடுகளின் மேற்புறத்தைப் பார்த்தால் இதனை எளிதாக  புரிந்துகொள்ளலாம். மரத்தின் கிளைகளுக்கு இடையிலான இடைவெளி, ஜிக்ஸா புதிர்போலவே இருக்கும்.  1920ஆம் ஆண்டிலேயே அறிவியல் ஆய்வு அறிக்கைகளில் க்ரௌன் ஷைனெஸ் பற்றி எழுதப்பட்டுள்ளது. மரங்களின் இந்த இயல்பை அறிவியல் முறையில் தீர்மானித்து கூறியவர், தாவரவியலாளர் ஃபிரான்சிஸ் ஜேக் புட்ஸ் (Francis jack putz). 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஃபிரான்சிஸ் தனது குழுவினருடன் கள ஆய்வுக்காக சென்றார். அங்குதான் கருப்பு மாங்குரோவ் மரத்தைக் கவனித்தார். மேற்புறத்தில் கிளைகள் படர்ந்திருந்தாலும் அவை பிற மரத்தின் கிளைகளுடன் இணையவில்லை....

தனித்துவம் வாய்ந்த சாகச செயல்களை விரும்பும் பெண் காணாமல் போனால்... பேப்பர் டவுன்ஸ் 2015

படம்
        பேப்பர்டவுன்ஸ்        பேப்பர்டவுன்ஸ்  Directed by Jake Schreier , Based on Paper Towns by John Green, Music by Son Lux [a] Cinematography David Lanzenberg க்வென்டினுக்கு மார்கோ என்றால் ரொம்ப பிடிக்கும். மார்கோவுக்கு மனிதர்களை விட அட்வென்ச்சர் என்றால்  அவ்வளவு பிரியம். ஒருநாள் க்வென்டினை அழைத்துக்கொண்டு தன்னை ஏமாற்றிய ஆண்தோழனை அவமானப்படுத்தி, அவனது நண்பர்களுக்கும் பதிலடி கொடுக்கிறாள். அடுத்தநாள் பார்த்தால் மார்கோ அவள் வீட்டில் காணவில்லை. எங்கே போனாள் என்றே தெரியவில்லை. ஆனால் க்வென்டினுக்கு மட்டும் தெரியும் பல்வேறு க்ளூக்களை விட்டுச்செல்கிறாள். க்வென்டின் அதைத்தேடிக்கொண்டு நியூயார்க் வரை செல்கிறான். அங்கு அவனுக்கு  ஒரு அதிர்ச்சி காத்துக்கிடக்கிறது., என்ன அது என்பதுதான் கதையின் முக்கியமான பகுதி. படத்தில் மார்கோ என்ற டீனேஜ் பெண்ணின் கதாபாத்திரம்தான் மிகவும் முக்கியமானது. சுதந்திரம், காதல், நட்பு என அனைத்திலும் தெளிவாக இருக்கிறாள். பெற்றோரின் அடையாளத்தில் வாழாமல் சுயமாக வாழ விரும்பும் பாத்திரம். உண்மையில் இந்த பாத்திரம் யாருக்கும...