இடுகைகள்

மின்னல் முரளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேவனின் நீரோட்டம் போன்ற எழுத்து கொடுத்த ஆச்சரியம்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று முழுக்க அறையில்தான் இருந்தேன். நீரெல்லாம் கங்கை - கடித நூலை எழுதி தொகுத்து அமேசானில் வெளியிட்டேன். உங்களிடம் உள்ள கடிதங்களை மறுமுறை வரும்போது பெற்றுக்கொள்கிறேன். நான் வடிவமைத்த அட்டைப்படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.  ஃபேஸ்புக்கில் உள்ள உங்களது படங்களை எனது பிளாக்கில் பயன்படுத்தியுள்ளேன். இதற்கான தொகையை பிறகு தீர்ப்பேன். மிஸ்டர் வேதாந்தம் - தேவன் நாவலைப் படித்தேன். 44 வயதில் இறந்துபோன தேவனின் எழுத்து நீரோட்டம் போல செல்கிறது. கதை தஞ்சாவூரில் தொடங்கி, கும்பகோணம் சென்று பிறகு சென்னையில் மையம் கொள்கிறது.  தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தத்தின் வாழ்க்கைப்பாடுதான் கதை. அரவிந்த் குப்தா அவர்களின் வலைத்தளத்தை அண்மையில் பார்வையிட்டேன். அதில் ஏராளமான நூல்கள் உள்ளன. ஆச்சரியமாக இருந்தது.  போனில் தரவிறக்கி வைத்திருந்த மின்னல் முரளி மலையாளப்படத்தை பார்த்தேன். பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படத்தை இயல்பான முறையில் எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஷிபு பாத்திரத்தில் நடித்த குரு சோமசுந்தரம்தான் ஈர்க்கிறார். ஜெய்ஷன், ஷிபு என இரு நபர்களுக்கு கி

தனது காதலியை பறித்த ஊரை வேட்டையாடத் துடிகும் ஷிபு! - மின்னல் முரளி - பசில் ஜோசப் - மலையாளம்

படம்
  மின்னல் முரளி பசில் ஜோசப் மலையாளம்  ஜெய்சனை மின்னல் முரளியாக கண்டுபிடித்துப் பேசும் காட்சி ஒரு கிராமம். அங்கு ஏற்படும் வரலாற்று முக்கியமான கிரக சூழ்நிலையில் மின்னல் தாக்குகிறது. அதன் பாதிப்பில் கிராமத்திலுள்ள இருவர் மாட்டுகின்றனர். இருவரும் அதனால் சக்தி பெறுகிறார்கள். அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே கதை.  ஜெய்சன், ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கிறார். அவருக்கு ஒரே லட்சியம், பாஸ்போர்ட் வாங்கி அமெரிக்காவுக்கு போவதுதான். தனியாக அமெரிக்காவுக்கு போய் என்ன செய்வது என, அந்த கிராமத்து  இன்ஸ்பெக்டர் பெண்ணையும் காதலிக்கிறார். அதாவது, ஜெய்சனுக்கு அந்தப் பெண் மீது காதல் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கான பொழுதுபோக்குக்கு ஜெய்சன் உதவுகிறான். ஆனால் அவள், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை  திருமணம் செய்துகொள்ள இசைகிறாள்.  உஷாவை சந்தித்துப் பேசும் நெகிழ்ச்சியான காட்சி... இதனால், ஜெய்சன் கோபம் கொள்ளுகிறான். அதேநேரம், அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்பவன், ஷிபு. இவனை கிராமத்தில் யாருக்கும் பிடிப்பதில்லை. இதற்கு காரணமான காட்சி, தாசனுடன் ஷிபு பேசும் காட்சி.  ஷிபுக்கு ஒரே லட்சியம், பசியைச் சமாளிப்பது