இடுகைகள்

ஆல்பிரட் வாலஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சிகளின் மாதிரிகளை சேகரித்து ஆவணப்படுத்தியவர்! ஆல்பிரட் வாலஸ்

படம்
  ரெகுலர் வடிவம்  ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் (1823-1913) இங்கிலாந்தின் மான்மவுத்ஷையரில் பிறந்தார். தன் 14 வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்டார். பல்வேறு வேலைகளை செய்தவர், 1844ஆம் ஆண்டு ஹென்றி வால்டர் பேட்ஸ் என்ற  சூழல் ஆய்வாளரை சந்தித்தார். இவர் மூலம் பூச்சிகளை சேகரிப்பதில் ஆர்வம் உருவானது. 1848-52 காலகட்டத்தில்  பல்வேறு தீவுக்கூட்டங்களுக்கு சென்றார்.  அங்கு ஆய்வில் விலங்குகளின் படிமங்கள் மற்றும் தாவரங்களை சேகரித்தார். இயற்கை அறிவியல் சார்ந்த ஆய்வில், பரிணாம வளர்ச்சி பற்றி தானே சில கொள்கைகளை வகுத்தார். இதைப்பற்றி ஆய்வறிக்கையை எழுதினார். 1858ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினிடம்  தனது அறிக்கையை அனுப்பிவைத்தார். டார்வின் தனது ஆராய்ச்சி அறிக்கையோடு வாலஸின் அறிக்கையையும் இணைத்து அறிக்கையாக்கி லண்டன் லினியன் சங்கத்தில் வெளியிட்டார்.  மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணித்தவர், 1,25,000 உயிரின மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றில், 5 ஆயிரம் உயிரினங்களை அன்றைய அறிவியல் உலகம் அடையாளமே கண்டிருக்கவில்லை. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வாலஸ் சேகரித்த, 2500 பறவைகளின் உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு