இடுகைகள்

தீவிரவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு காலத்தில் பரவும் போலிச்செய்திகளும், நேர்மையான தேர்தலும் 2018ஆம்ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தோடு செய்த ஊழல் அனைவரும் அறிந்ததே. ஒருவர் எழுதும் பதிவுகளை வைத்து அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார் என அல்காரிதம் மூலம் கணித்தனர். இதைப் பற்றி மக்களுக்கு எந்த கவனமும் இல்லாமல் இரையாக மாட்டிக்கொண்டனர். இதில் பயன்பெற்றது, உலகம் முழுக்க உள்ள அரசியல் கட்சிகள்தான். இலவசம் என்ற பெயரில் ஃபேஸ்புக் உலகம் முழுக்க பரவலாகி அதில் இணைந்த பயனர்களாகிய மக்களையே நல்ல விலைக்கு விற்ற கதை அது.  செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிச்செய்திகள், வீடியோக்களை ஒருவர் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்து தடுப்பது உண்மையில் கடினமான ஒன்று. அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல் உதவும் என்று தெரியவில்லை. ஓப்பன் ஏஐ, கூகுள், அமேஸான் ஆகிய பெருநிறுவனங்களே பந்தயத்தில் முன்னணியில் உள்ளன.  வெறுப்பு, பிரிவினைவாத கருத்துகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றன. இதன் அடிப்படையில் போலிச்செய்திகளை வைத்தே கூட ஒரு கட்சி தேர்தலில் வெல்லலாம். செயற்கை நுண்ணற

சிபிஐ ஏஜெண்ட் வேலைக்கு பிக்பாக்கெட் ஒருவரை அவுட்சோர்சிங்கில் எடுத்து பணியாற்ற வைத்தால்..

படம்
  ஜேபுதொங்கா சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதா, சத்யநாராயணா பிக்பாக்கெட் ஒருவரை சிபிஐ அவருக்கே சொல்லாமல் பயன்படுத்த முயல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  தீவிரவாத இயக்கம் ஒன்று, இந்தியாவை அழிக்க முயல்கிறது. சிபிஐயில் கூட ஆட்களுக்கு காசு கொடுத்து அவர்களின் செயல்களை மோப்பம் பிடிக்கிறது. இதை அறிந்த மேல்மட்ட அதிகாரிகள், பிக்பாக்கெட் ஒருவரை தங்கள் அமைப்பில் சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதாக தகவல் உருவாக்குகிறார்கள். இதில்தான் சிட்டிபாபு எனும் பிக்பாக்கெட் திருடர் மாட்டுகிறார். அவரை தீவிரவாத இயக்கம், சிபிஐ அமைப்பு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய விஷயங்களைக் கேட்கிறது. ஆனால் சிட்டிக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. அவரும் அவரது காதலியான திருடியும் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். . இந்த நிலையில் சிட்டி மீது  ஒருவரைக் கொன்றதாக வழக்கு பதியப்படுகிறது. காவல்துறை, தீவிரவாத இயக்கம் இரண்டுமே சிட்டியைப் பிடிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். அவள் யார், எதற்கு சிட்டி பாபுவை காப்பாற்றுகிறாள் என்பதே கதையின் முக்கியப்பகுதி.  சிட்டிபாபுவுக்கு அம்மா, திருமணமாகாத தங்கை, கால் ஊ

தனது காதலியைக் கொன்ற தேசவிரோத கூட்டத்தை ஒழிக்கும் சுமார் போலீஸ் - சூப்பர் போலீஸ் - வெங்கடேஷ், நக்மா

படம்
  சூப்பர் போலீஸ்  வெங்கடேஷ், சௌந்தர்யா, நக்மா தேசவிரோதிகளை சப் இன்ஸ்பெக்டர் எப்படி பிடிக்கிறார், தனது காதலி பாரதி கொலைக்கு காரணமான சக்திகளை அழிப்பது எப்படி என கதை சொல்லுகிறது.  அப்பண்ணா என்ற தொழிலதிபர் இருக்கிறார். அவர் உள்துறை அமைச்சரோடு சேர்ந்து பாக் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வேலைகளை செய்துகொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரது மகள் ஏழை ஒருவரை காதலிக்கிறாள். இதற்கு உதவி செய்வதன் வழியாக வெங்கடேஷ், அப்பண்ணாவின் உலகில் உள்ளே வருகிறார். அப்பண்ணா, வெங்கடேஷ் தங்கியுள்ள வீட்டு உரிமையாளரான பத்திரிகையாளரை மதுபான புட்டியில் குண்டு வைத்து கொல்கிறார். அது வெங்கடேஷூக்கு வைத்ததுதான். ஆனால் தவறி பத்திரிகையாளர் இறந்துபோகிறார். இதனால் கோபம் கொள்ளும் வெங்கடேஷ் அப்பண்ணாவைக் கொல்ல சபதம் எடுக்கிறார். ஆனால் அதிகார சக்திகளுடன் மோதி தனது வேலையை இழக்கிறார். அப்பண்ணா நாயகனது காலை முறித்துப்போடுகிறார். இதிலிருந்து மீண்டு வரும்போது தனது முன்னாள் காதலி பாரதி காரில் அடிபட்டு இறந்துபோனதற்கு அப்பண்ணா காரணம் என அறிகிறார். பிறகு எப்படி பழிவாங்கினார் என்பதே கதை.  படத்தில் நாயகன் இறந்துபோவதே யதார்த்த படமாக இருக்கும். ஆனா

முஸ்லீம்களின் தேசப்பற்றை நிரூபிக்க கட்டாயப்படுத்தும் படம்- கட்கம் - கிருஷ்ணவம்சி

படம்
  கட்கம் தெலுங்கு இயக்குநர் – கிருஷ்ண வம்சி இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி ஒளிப்பதிவு எஸ்கேஏ பூபதி எடிட்டிங் - ஶ்ரீகர் பிரசாத் ரவிதேஜா, ஶ்ரீகாந்த் மேகா, பிரகாஷ்ராஜ், தேஜ். சங்கீதா, சோனாலி பிந்த்ரே முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது. அப்படி தீவிரவாதிகளாக இருந்தால் அவர்களை ஜெய் பஜ்ரங்பலி என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றால் தீவிரவாதத்தை அழித்தே விடலாம் என்று சொல்லியிருக்கிற படம். படத்தில் தொடக்க காட்சியே தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். இதனால் படம் எந்த கோணத்தில் போகப்போகிறது என புரிந்துகொண்டுவிடலாம். தீவிரவாதி மசூத், அவரை விடுவிக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை திட்டமிடுகிறார்கள். இதை தலைமை தாங்கி நடத்துபவர் அசார். அசார் யார் என்பது படத்தில் முக்கியமான திருப்புமுனை காட்சி. கோட்டி, சினிமா நாயகனாக முயல்பவர். அவரின் தொடக்க காட்சிகள் பல்வேறு சினிமா ஸ்டூடியோக்களிலிருந்து செக்யூரிட்டிகளால் வெளியே தள்ளப்படுவதிலிருந்து தொடங்குகிறது. கோட்டி நடிகர் என்றால் அவரது நண்பர் இயக்குநராக முயல்கிறார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வாடகை கூட கொடுக்க முடியா

கடல் தாண்டியும் பழிவாங்குவான் தெலுங்குவாடு!

படம்
              ஜெய் சிரஞ்சீவா சிரஞ்சீவி, பூமிகா சாவ்லா, சமீரா ரெட்டி     தனது தங்கை மகளை துப்பாக்கியை சுட்டு காண்பிக்கும் முறையில் கொல்லும் தீவிரவாத அமைப்பு தலைவனை தீர்த்துக்கட்டும் கிராமத்து விவசாயியின் கதை.  படத்தில் சிரஞ்சீவி, கிராமத்து விவசாயியாக வருகிறார். டிராக்டர் ஓட்டுகிறார். தங்கை பிள்ளையை கொஞ்சுகிறார். அதேவேகத்தில் அந்த சந்தோஷம் தொலைந்துபோக அதற்கு காரணமானவர்களை போட்டு பொளக்கிறார். இதுதான் கதை. இதற்குள் சிரஞ்சீவி இரண்டு பெண்களை காதலித்து அவர்களுடன் நிறைய பாடல்களை ஆடிப்பாடிமகிழ்விக்கிறார். கூடவே வேணு வேறு இருக்கிறார். காமெடிக்கு கேட்கவா வேண்டும்.  தொடக்க காட்சியில் அதிரடியாக இளம்பெண் ஒருவரை குழு வல்லுறவு பிரச்னையிலிருந்து அடி உதை மூலம் மீட்டு என்ட்ரி கொடுக்கிறார் ஆந்திரப் பிரதேச சூப்பர் ஸ்டார். பிறகுதான் ஹைதராபாத்திற்கு காப்பு கட்டுமளவு ரவுடிகளை அடித்து பிளக்கிறார். படத்தின் இறுதிவரை அவர் தனது தங்கை பிள்ளைக்காக மட்டுமே பழிவாங்குகிறார். வில்லனின் தீவிரவாத செயல்கள் மூலம் நிறையப் பேர் பாதிக்கப்படுவதை அழிவதைப் பற்றியெல்லாம் இயக்குநரும் கவலைப்படவில்லை. எனவே சிரஞ்சீவியும் கவலைப்படவில்

வடகிழக்கு பெண் என்பதால் எனது மொழி உச்சரிப்பை கிண்டல் செய்தனர்! - ஆண்ட்ரியா கெவிசூசா

படம்
  ஆண்ட்ரியா கெவிசூசா இந்தி சினிமா நடிகை - அனெக் திரைப்படம் ஆண்ட்ரியா கெவிசூசா உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்? நான் கோகிமாவில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. அதில் இளையவள் நான். எனது அப்பா அங்காமி பழங்குடியைச் சேர்ந்தவர். அம்மா ஆவோ பழங்குடியைச் சேர்ந்தவள். அப்பா காலமாகிவிட்டார். பெண்களான எங்களுக்கு எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என பெரிய லிஸ்ட்டே உண்டு. பெற்றோர் நிறைய கண்டிப்புடன் வளர்த்தார்கள். பத்தாம் வகுப்பு வரை லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதற்கு முன்னர் கத்தோலிக்க பெண்கள் பள்ளியில் படித்தேன். பிறகு மேகாலயாவின் சில்லாங்கிற்கு இடம்பெயர்ந்தோம். பிறகு படிப்பு அங்கே அமைந்தது. பதினைந்து வயதிலிருந்து நான் மாடலிங் செய்து வருகிறேன்.  நடிகர் ஆவது என்பது பற்றி கனவு கண்டீர்களா? எனக்கு சிறுவயதிலிருந்து இருந்தது ஒரே கனவுதான். மருத்துவம் படித்து மருத்துவராகி எனது கிராமமான கோகிமா சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமே எனது ஆசை. ஆனால் நான் படிக்கும்போது எனக்கு வந்த வாய்ப்புகளை பின்பற்றி இப்போது நடிகராகி இருக்கிறேன். இப்படி கிரியேட்டிவிட்டி கொண்ட த

இந்தியாவில் பரவும் வெறுப்பெனும் நச்சு! - நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

படம்
  வெறுப்பு மதவாத பேச்சு வாக்குவங்கி அரசியலுக்காக வெறுப்பு அரசியல் மக்களின் மனதில் செலுத்தப்பட்டு வருகிறது. மதவாத வெறுப்பு இந்தியாவை இதுவரை யாரும் பார்த்திராத முறையில் மாற்றி வருகிறது.  என்னை இந்தியா டுடே ஆசிரியர், பிரிவினை அந்தளவு ஆழமாக இருக்கிறதா என்று கேட்டார். மதவாத வன்முறை, படுகொலைகள், பசு பாதுகாப்பு தாக்குதல்கள் ஆகியவற்றை நான் உடனே நினைவுபடுத்தவில்லை. இப்போது கர்நாடகத்தில் நடைபெறும் ஹிஜாப், ஒலிப்பெருக்கி பிரார்த்தனைகள், ஹலால் முறை இறைச்சி ஆகியவற்றையும் கூட நான் நினைக்கவில்லை. பிரிவினை பாதிப்பை நேரடியாக எனது அனுபவத்தில் உணர்ந்த மூன்று சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.  சசிதரூர் 1 ஜெய்ப்பூரில் நான் தங்கநிற முடிக்கற்றை கொண்ட லெபனான் நாட்டுப் பெண்ணை சந்தித்தேன். அவர் இந்தியாவுக்கு கைவினைப் பொருட்கள் வணிகத்திற்காக 15  ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறார். வெளிநாட்டினராக இருந்தாலும் அவரை மக்கள் வரவேற்று பேசுவது வழக்கம். அவரது பெயர் நூர், இதற்கு வெளிச்சம் என்று பொருள். என்ன அழகான பெயர் என்று கூறி பேசியிருக்கின்றனர். ஆனால் இப்போது நூர் என்றால், நீங்கள் முஸ்லீமா என்று முதல் உரையாடலிலேயே வார்த்தையிலே

சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்கள்தான் மாறவேண்டும்! - டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்

படம்
  டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா வாய்ப்பாட்டு கலைஞர் இன்றைய மாணவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் மாணவனாக இருந்த காலத்தை விட இன்றைய மாணவர்கள் கவனத்துடன் சுயசிந்தனையுடன் இருக்கிறார்கள். நான் இந்தளவு கவனத்துடன் இருந்ததில்லை. என்னுடைய சக வயது உள்ளோர் பலரும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என புகார் கூறுகிறார்கள். குறிப்பாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம். இந்த வகையில் அவர்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக வாழ்க்கை, அரசியல் பற்றிய உறுதியான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். நான் இந்தளவு கருத்துக்களோடு இல்லை என்பதே உண்மை. நான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு இதனை வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த வகையில் நாம் கேட்க முடியாத பல்வேறு கேள்விகளை கேட்க முடியும். இந்த தளங்களை இந்த வகையில் சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் உள்ள சிக்கல், சிந்தனைகளில் உள்ள தடுமாற்றம்தான். நான் இருபது வயதில் இப்படித்தான் இருந்தேன்.  நீங்கள் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேசி வருபவர். கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் மாணவர்களிடம் எப்படி இருக்கிறது? அது வேறு வகையான இடம் என்று ந

முஸ்லீம் பெண்களின் மீது இறுகும் கட்டுப்பாடுகள்! - ஹிஜாப்பிற்குத் தடை

படம்
  ஹிஜாப்களை பொது இடத்தில் பயன்படுத்துவதை முதலில் அனுமதித்த மேற்கு நாடுகள், முஸ்லீம்கள் மீதான பயத்தின் காரணமாக அவர்களை இப்போது நெருக்கி வருகிறார்கள். அண்மையில் பிரான்சில் முஸ்லீம்களை முகத்தை மூடக்கூடாது என்று கூறியது நினைவு வருகிறதா?  பிரான்ஸ்   இங்கு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று முஸ்லீம்கள் நிகாப், பர்கா ஆகிய உடை வகைகளை அணியக் கூடாது என அரசு கூறியது. இதில் ஹிஜாப் மட்டும் விதிவிலக்கு. முகத்தை மறைக்காமல் அணியவேண்டும் என கூறப்பட்டது.  அமெரிக்கா 1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைத்து வகை முகத்தை மூடும் உடைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது.  2019ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது. ஏனெனில் இல்கான் ஓமர் என்ற பெண்மணி தேர்தலில் வென்று மன்றத்திற்கு வந்தார். அவருக்கான சட்டத்தில் மாறுதல்களை செய்தனர்.  பெல்ஜியம் இங்கு 2011ஆம் ஆண்டு நிகாப் முதற்கொண்டு முகத்தை மூடும் அனைத்து உடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன.  ஸ்விட்சர்லாந்து 2021ஆம் ஆண்டு இங்கு வாழும் மக்கள், பொது இடங்களில் முஸ்லீம் மக்கள் முகத்தை மூடும் உடைகளை அணிவதற்கு தடை விதிக்கலாம் பொது வாக்களிப்பு செய்

இந்தியாவை முன்னிலை பெற செய்த பெண் அதிகாரிகள்! - ஈனம் காம்பிர், ஸ்னேகா துபே, விதிஷா மைத்ரா, பௌலோமி திரிபாதி

படம்
  ஸ்னேகா துபே அதிகாரம் வாய்ந்த பெண்கள்  கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்கு இந்திய பெண்கள் இந்தியா சார்பாக ஐ.நாவில் பேசியுள்ளனர். ஸ்னேகா துபே, ஈனம் காம்பிர், விதிஷா மைத்ரா,  பௌலோமி திரிபாதி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இவர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நாவில் வெளிப்படையாக தெரிவித்து நாளிதழ் செய்திகளில் இடம்பெற்றனர். அவர்களைப் பற்றிய சின்ன அறிமுகம்.  ஈனம் காம்பிர் நியூயார்க்கில் உள்ள ஐ.நாவின் இந்தியாவிற்கான நிரந்தர திட்ட கமிஷன் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஐ.நாவின் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதி பிரிவில் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். கணிதப் பாடத்தில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். உலகநாடுகளில் பாதுகாப்பு பற்றியும் படித்துள்ளார். 2005இல் குடிமைத்துறை தேர்வு எழுதி வெளியுறவுத்துறைக்கு தேர்வான சாதனையாளர்.  ஸ்னேகா துபே கோவாவில் பிறந்து வளர்ந்த ஸ்னேகாவின் கனவே வெளியுறவுத்துறை அதிகாரி ஆவதுதான். தனது 12 ஆவது வயதிலேயே இதற்கான கனவு கண்டார் என்பதுதான் இவரைப் பற்றி நாம் இங்கே எழுத காரணம். 2011ஆம் ஆண்டு குடிமைத்தேர்வை முதல் முயற்சியிலேயே எழுதி வென்றார். வெளியுறவுத்துறைக்கு தேர்வானவரை வெளியுறவுத

வலிமையான சீர்திருத்தங்களை முன்னெடுத்த இந்திரா காந்தி! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  இந்திராகாந்தி பதில் சொல்லுங்க ப்ரோ? இந்திராகாந்தியை ஏன் வலிமையான தலைவர் என்று சொல்லுகிறார்கள்? இந்திரா பிரியதர்ஷின் காந்தியின் குடும்பமே, அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அவரது தாத்தா மோதிலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவரலாம் என்ற வாய்ப்பையும் மறுத்தவர். தனது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதில் உலக வரலாறையே கூறியிருப்பார்.  1917ஆம் ஆண்டு நவ.19 அன்று இந்திரா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்தியாவில் நடைபெறும் விஷயங்களை அவர் கவனித்து வந்தார். தனது ஐந்தாவது வயதில் மேட் இன் இங்கிலாந்து தயாரிப்பு பொம்மையை நெருப்பிட்டு எரித்தார். 1921ஆம் ஆண்டான அன்று, சுதேசி இயக்கம் தீவிரமாக இருந்தது. தனது பனிரெண்டாவது வயதில் வானர சேனை ஒன்றைத் தொடங்கி, அதில் மாணவர்களை இணைத்தார். இவர்களின் வேலை, சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டுபோய் கொடுப்பது, நோட்டீஸ்களை சுவரில் ஒட்டுவது, தேசியக்கொடிகளை தயாரித

வேறுபாடுகளை இணைக்கும் இணையம்!

படம்
  உகாண்டாவின் வடக்குப்பகுதி. அங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த காலம் கொடுமையானது. அடிக்கடி புரட்சியாளர்கள் அங்கு வந்து சிறுவர்களை கடத்திக்கொண்டு சென்று படைகளில் சேர்ப்பார்கள். டேனியல் கோமாகெச் அப்படி வீரர்கள் வரும்போது தப்பிப் பிழைத்து புதர்களில் மறைந்திருந்தவர்தான். இன்று 34 வயதாகும் அவர், தனது கல்வி தீவிரவாதம் உள்ளிட்ட எந்த விஷயங்களாலும் தடைபடாதபடி பார்த்துக்கொள்ள மெனக்கெட வேண்டியிருந்தது. இப்போது அவர், தனது கிராம மக்களுக்கு பாஸ்கோ எனும் வகையில் இணையத்தை வழங்கி வருகிறார். இணையம் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லுகிறார் இவர்.   பாஸ்கோ எனும் இணைய முறை இப்போது ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் இணையம் மற்றும் போன் நெட்வொர்க் முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது.  டேனியல் இணையத்தின் வழியில் படிப்புகளை படித்து ஆன்லைனில் வேலையைப் பெற்றுள்ளார். சமையல் ரெசிப்பிகளைக் கூட கற்றுக்கொண்டு பிள்ளைகளுக்கு சமைத்துக்கொடுக்கும் அளவுக்கு அவரது வாழ்க்கை மாற்றம் பெற்றுள்ளது. இணையம் என்பது எனது ஆசிரியர் என்றே சொல்லி வருகிறார்.  மக்களின் இனக்குழுவாக ஒன்றாக சேர்ந்து இணையத்தை  நடத்துவ

தீவிரவாத இயக்கத்தின் நிதியாதாரத்தை முடக்கும் உலக அமைப்பு!

படம்
பினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது சாதாரண காரியமல்ல. இதற்கு உலக நாடுகள் துணிச்சலான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதில் முக்கியமானது, தீவிரவாத காரியங்களுக்கு உதவும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. அமெரிக்கா, தனது வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதம் வளர்க்கும் பல்வேறு செயல்பாடுகளை கண்காணிக்க ஆரம்பித்து தடுத்தது.  இதில் முழுமையான வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதல்ல விஷயம். இந்த முயற்சியில் அமெரிக்கா தெரிந்துகொண்ட விஷயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்துபவை.  இருபதாண்டுகளாக அமெரிக்க தீவிரவாதத்தை தடுப்பது என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நிதியளித்து வருகிறது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த அதற்கு கிடைக்கும் நிதியுதவி ஆதாரங்களைக் கண்டுபிடித்து தடுக்கவேண்டும். அப்போதுதான் நாடுகளில் நடைபெறும் பல்வேறு தீவிரவாத செயல்களை தடுக்கமுடியும். ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற அமைப்புதான் மேலே சொன்ன விஷயங்களை கூறியது. உலகம் முழுக்க தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அம

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடத்தும் அரசியல் விளையாட்டு

படம்
  அரசியல் விளையாட்டு ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெரும்பாலான மக்கள் பழங்குடிகள் என்பதால் போர் என்பது எப்போதும் அங்கு நின்றது கிடையாது. நிற்கவும் போவதில்லை. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா என அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானை வளைத்து போட முயன்றுகொண்டே இருக்கின்றன.இதனை நேரடியாக, மறைமுகமாக என இரண்டு வகையாகவும் கூறலாம்.  இப்போது அதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.  அமெரிக்கா அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை இனி அவர்களின் வரிப்பணம் போருக்கு என்று செலவிடப்படாது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது சரியில்லை. இந்த வகையில் அமெரிக்க அதிபர், அடுத்த ஆபரேஷன் நமக்குத்தான் என்று சொல்லி பின்வாங்கியது நல்ல விஷயம்தான். அமெரிக்காவை தளமாக கொண்டு தீவிரவாதிகள் இயங்கிய நிலை இனி இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. இதனை ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகளே கூட நம்பாது. உலகின் சூப்பர் போலீஸ் நாடான அமெரிக்கா, இதனை நம்புகிறது. அதோடு அதன் பெருமைமிக்க அந்தஸ்து இருபது ஆண்டு போரில் தோற்று பின்வாங்கியதோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்லேடனை அழித்தது மட்டுமே சாதனை என அமெரிக்கா சொல்லிக்கொள்ளலாம்.

வன்முறையைக் கொண்டாடும் தீவிரவாத இயக்கங்கள்

படம்
  தாலிபன் ஆப்கானிஸ்தானை ஆளுகின்ற தீவிரவாதக் குழு. மதநம்பிக்கைப்படி ஆட்சி நடத்துபவர்கள். இவர்களுக்கு எதிராக இருந்த பஞ்ஷிர் பகுதியையும் நவீன ஆயுதங்களோடு, ராணுவப் பயிற்சியோடு கையகப்படுத்திவிட்டனர்.  இவர்களை ஊக்குவிப்பது பாகிஸ்தான் நாடு. தாலிபன் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் சுலபமாக சந்திக்கலாம்.  ஹபிபுல்லா அகுந்த்ஸாடா, மொகமது ஹசன் அகுந்த், அப்துல் கானி பாரதர் ஆகியோர் தாலிபன் அமைப்பின் முக்கியமான தலைவர்கள்.  ஹக்கானி குழு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற குழு. இப்போது தாலிபனில் முக்கியமான அங்கம்.  தாலிபன், அல்கொய்தா ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களையும் இக்குழு ஒருங்கிணைக்கிறது.  இதனை தொடங்கியவர் ஜலாலுதீன் ஹக்கானி. அவரின் மகன் சிராஜூதீன் இக்குழுவின் முக்கியமான தலைவர். புதிய தாலிபன் அரசில் இவரும் முக்கியமான அங்கம். அதாவது அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.  வடக்கு கூட்டணி தாலிபன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கூட்டணி. பஸ்துன் இஸ்லாமிய கூட்டணி. எப்போதும் தாலிபன்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். பஞ்சிர் பள்ளத்தாக்கிலிருந்து தாலிபன்களை எதிர்க்கிறார்கள். இவர்களை தாக்கி பகுதிய

தெருக்களில் பெண்களை தாலிபன்கள் அடிப்பது உறுதி! - ஸார்கோனா ராஸா

படம்
            ஸார்கோனா ராஸா பிரிட்டிஸ் ஆப்கன் பெண்கள் சங்கம் காந்தகாரில் பிறந்தவரான ராஸா , 1994 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இங்கிலாந்திற்கு அடைக்கலம் தேடி குடும்பத்தோடு இடம்பெயர்ந்துவிட்டார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கி ஆப்கானிஸ்தானுக்கு வந்து சென்றுகொண்டிருக்கிறார் . ஆப்கனிலுள்ள பெண்களின் நிலை இனி என்னவாகும் என்று அவரிடம் பேசினோம் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தாலிபன்கள் பெண்கள் விவகாரத்தில் முன்னர் நடந்துகொண்டது போல கடுமையாக நடந்துகொள்ளவில்லையே ? நீங்கள் இதனை நம்புகிறீர்களா ?   முன்னர் தாலிபன்கள் நடந்துகொண்டதை விட இப்போது மென்மையாக பெண்கள் விவகாரத்தில் நடந்துகொள்வதாக நான் நம்பவில்லை . காரணம் இன்று ஊடகங்கள் நிறைய வந்துவிட்டன . அவர்களிடம் நேர்மறையாக தங்களை காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது . முஸ்லீம் நாடுகளில் பெ்ணகள் தலையை மறைக்காமல் டிவியில் வந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள் . ஆண்களும் , பெண்களும் கலந்து படி்த்த பல்கலைக்கழகங்ளில் பெண்க்ள் மட்டும் தனியாக படிக்கவேண்டும் என தாலிபன்கள் கூறுவார்கள் . தாலிபன்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் பெண்கள் தலையை மறைக்காமல