இடுகைகள்

வினோதரச மஞ்சரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது!

படம்
            வினோதரச மஞ்சரி பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது! சில வாரங்களாகவே தனியார் செல்போன் நிறுவனங்களின் தடாலடி விலையேற்றம் பற்றி செய்தி ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தது. தனியார் நிறுவனங்களின் விலையேற்றத்தில் சிறுபான்மை ஒன்றிய அரசு தலையிட முடியாது என கைவிரித்தது. இது  அகண்ட பாரதத்தில் புதிய காட்சியல்ல. நாட்டின் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான நண்பர்தான் விலையேற்றிய செல்போன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாங்கிய நிதிக்கான விசுவாசம் இருப்பதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர், அம்பானியின் செல்போன் நிறுவனத்திற்கு இலவசமாக டேட்டா கொடுக்கிறார்கள் என்று மாறிய பெருங்கூட்டம், இப்போது விலையேற்றத்தால் புலம்பி புகார்களை வாசித்தபடி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், மகிழ்ச்சியுடன் கூறிய தகவல்படி வாடிக்கையாளர் எண்ணிக்கை இருபத்தெட்டு லட்சம் என கொள்வோம். இத்தனை பேர்களுக்கு பிஎஸ்என்எல் என்ன வசதிகளை செய்துதரும்? இப்போது உள்ள பெரும்பகுதி செல்போன் டவர்களை, அம்பானி நிறுவனத்திற்கு கட்டாய வாடகைக்கு தரவ...

பேக் டூ பேக் - உண்மையா? உடான்ஸா?

படம்
  சலிப்பு அல்லது பதற்றம் ஏற்படும்போது சில பழக்கங்கள் உருவாகின்றன! உண்மை.  இதனை மருத்துவத்தில் பிஹேவியரல் ரெஸ்பான்ஸ் என்று பெயர். ஒருவர் பதற்றமாக இருக்கும்போது அல்லது சலித்துப்போகும்போது தலைமுடியில் பிடித்து விளையாடுவது, விரல்களை மேசையில் தட்டுவது, கால்களை ஆட்டுவது என செய்துகொண்டிருப்பார்கள். இதை பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். எனவே, இதுபற்றி பதற்றப்பட அவசியமில்லை.  காலையில் இயல்பாக தூக்கம் கலைந்து எழுவது சிறந்தது! உண்மைதான். தூக்கத்தின் ஆழத்தைக் குறிக்க  ஐந்து நிலைகள் வரை உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரின் தூக்கம் இயல்பாக கலைந்து எழுவதே உடலுக்கும் மனதுக்கும் சிறப்பானது. ஆனால் இன்றைய சூழலில் அலாரம் வைத்து எழுவது அவசியமாகிவிட்டது. முடிந்தவரை இதை தவிர்க்கும் வகையில் சூழலை மாற்றிக்கொள்வது நல்லது.  நமது முடியின் வளர்ச்சி வயதாகும்போது மாறுபடும்! உண்மையல்ல. உடல்பாகங்களில்  உள்ள முடியின் (Hair follicles) வளர்ச்சி வேகத்தை ஒருவரின் மரபணுக்களே தீர்மானிக்கின்றன. இவற்றை அனைத்தையும் ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிடமுடியாது. தலையில் வளரும் முடியை விட அக்குளில் வளரும...

செம குறட்டை சாரே!

படம்
  எஸ்ஏபி தனது நூலில், உதவி ஆசிரியர் புனிதன் ஹோட்டல் அறையில் குறட்டை விட்டு தூங்கியதை தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி கிண்டல் செய்திருப்பதை எழுதியிருக்கிறார். பார்க்க குறட்டைதானே ப்ரோ என தோன்றினாலும், இரவில் எழும் குறட்டை பீதி எழுப்பும். எனது அலுவலகத்தில் கூட பேசிப் பேசியே களைப்பான அலுவலக சகாக்கள் சட்டென குட்டித்தூக்கம் போடும்போது எழும் குறட்டை ஜெனரல் ஏசியை விட அதிக சத்தம் எழுப்புகிறது. நமக்கும் கூட ஆவ்வ....வ்வ.. பாருங்க சொல்லும்போதே கொட்டாவி வந்துவிட்டது. அடுத்து தூக்கம், அதன் பின்னே குறட்டைதான்.  இப்போது குறட்டை தொடர்பான சமாச்சாரங்களைப் பார்ப்போம்.  உலகில் வாழும்  45 சதவீதம் பேருக்கு குறட்டை விடும் பிரச்னை உள்ளது. அதாவது வயது வந்தவர்களுக்குத்தான் சொல்கிறேன். நான்கு நபர்களில் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம். என்பது வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.  க்யூப் தொழில்நுட்பத்தில் உருவாகும் குர் முதல் ப்ர்... வரையிலான ஒலி கொண்ட குறட்டைகள் நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகள், மதுபானம் அருந்துவது, உடல் பருமன் ஆகியவை காரணமாக உருவாகிறது. ஒலியின் தொனி, லயம், ஸ்ருதிக்கு மூக்...