இடுகைகள்

உயிரிழப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிலிப்பைன்சின் போதைக்கு எதிரான போர்!

படம்
பிலிப்பைன்சில் மூன்று வயது பெண் குழந்தை,  போதைப் பொருள் ரெய்டில் சிக்கி பலியானது கடுமையான போராட்டத்தை உருவாக்கியுள்ளது. போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு என அதிபர் ரோட்ரிகோ தொடங்கிய திட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. ஏற்கனவே போலீசாரின், மூர்க்கமான ரெய்டுகளால் பல நூறுபேர் பாபாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மைகா உல்பினா என்ற பெண் குழந்தை போலீசாரால் சுடப்பட்டு இறந்துள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சிம்பிளாக, போதைப் பொருள் குற்றவாளிகள் அக்குழந்தையை கேடயமாக பயன்படுத்தினர் என்று கூறிவிட்டனர். இதுவரை பிலிப்பைன்சில் போதைப் பொருட்களை அழிக்கிறோம் என்று சொல்லி 6 ஆயிரத்து 600  பேர்களை போலீஸ் சுட்டுக்கொன்றுள்ளது. யுனிசெஃப் அமைப்பு, 2018 ஆம் ஆண்டு இறந்த ஸ்கைலர், டனிகா ஆகிய குழந்தைகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடங்கிய போருக்கு எதிரான திட்டத்தின் மூர்க்கமான நடைமுறையால் இதுவரை நூறு குழந்தைகள் இறந்துள்ளனர். நன்றி: ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு. 

அமெரிக்காவை அச்சுறுத்தும் லைம் நோய்!

படம்
காய்ச்சல் அடிக்கிறதா, குளிருகிறதா, நரம்புரீதியாக பிரச்னைகள் இருக்கிறதா? இதயத்துடிப்பு அடிக்கடி எகிறுகிறதா? அப்படியானால் கையைக் கொடுங்கள். அப்படியே குளுக்கோஸ் ஏற்றிவிடலாம். ஆம். உங்களுக்கு லைம் எனும் நோய் பாக்டீரியாக்களால் ஏற்பட்டுள்ளது. எலிகளிடமிருந்து பரவும் இந்த நோயை உண்ணிகள் நமக்கு பரப்புகின்றன. பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களை இந்த லைம் நோய் பாதிக்கிறது. இந்த நோயைத் தடுக்க ஜீன் ட்ரைவ் எனும் முயற்சியை எம்ஐடி நிறுவனம் முன்னெடுத்துள்ளது. எலிகளின் மரபணுக்களை மாற்றுவதே ஐடியா. இதனை கெல்வின் எஸ்வெல்ட் என்ற அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். நோக்கம் மலேரியா போன்ற தடுக்க சிர மான நோய்களை இம்முறையில் தீர்க்கலாம் என நம்பிக்கை தருகிறார் இவர். பாக்டீரியாக்களின் டிஎன்ஏவில் செய்யும் மாறுதல் சில தலைமுறைகளுக்கு நோய் பரவலைத் தடைசெய்யும் என்பது இவரது கூற்று. இதில் தவறுகள் நேர்ந்தால் அடுத்த தலைமுறையே இருக்காது என்று கூறுகின்றனர். இதற்கு அவரே அடுத்த திட்டமாக டெய்ஸி ட்ரைவ் என்பதையும் முன்வைக்கிறார். சாத்தியமோ இல்லையோ பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றலாம் என நம்பிக்கை தருகிறார் கெல்வின்.