இடுகைகள்

ஃபேஸ்புக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாலையில் வீசும் காற்று சற்று ஆறுதலாக உள்ளது!

படம்
  நரசிங்கபுரம் 28/3/2023 அன்பரசு சாருக்கு   அன்பு வணக்கம். நேற்று பேசிய உரையாடல் மகிழ்ச்சி தந்தது. அதில், கடிதமாக எழுதவேண்டியதை பேசிவிட்டேன். பேசத் தவறியதை கடிதத்தில் எழுதுகிறேன். சமீபத்தில் மெகா ஸ்டாரின் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று, கிரிஸ்டோபர். காம எண்ணமே ஒருவனை அழிக்கிறது. சாதாரண மனிதன் தவறான ஆசைகளை வெளிப்படுத்தினால் மரணமே வழி என்பதாக கதை அமைந்துள்ளது. மம்மூட்டியின் தர்ம செயல் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தது. கொடூரமான காட்சிகள் நெஞ்சை உலுக்கின. இரண்டாவது படம், ஒன். 2021இல் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சில காட்சிகளை யூட்யூபில் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். பார்க்க வேண்டிய படம். நான் ஃபேஸ்புக்கில் வங்கி மேலாளரைப் பற்றி புகார் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு எவ்வளவு மதிப்பு உள்ளதென வியந்தேன். இந்தப்படத்திலும் மம்மூட்டியின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது. நிதானமான பேச்சு, அதிரடி முடிவு என முதலமைச்சராக வலம் வந்து நம்மைத் தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் நம்பர் ஒன் என சொல்லி படத்தை முடிக்கிறார். முதலமைச்சர்கள் பார்க்க வேண்டிய படம். இன்று பிளாக்க

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - இரா.முருகானந்தம்- புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இரா.முருகானந்தம் (முருகானந்தம் ராமசாமி), சமூக வலைத்தளத்தில் எழுதும் பகிரும் கருத்துகள் முக்கியமானவை. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் வாழும் முருகானந்தம், தமிழ் இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் செயல்பாடு என பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். பல்வேறு டிவி சேனல், யூட்யூப் சேனல்களிலும் கலந்துரையாடல்களில் பங்கேற்று வருகிறார். சமூகம் சார்ந்து முருகானந்தம் வெளியிடும் பதிவுகளைக் கொண்டதே இச்சிறுநூல். இதில், சமூகத்திற்கு முக்கியமான நீங்காத இடம் பிடித்த ஆளுமைகள், எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறார். அதோடு, வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், அதற்கான எதிர்வினைகளையும் தீர்க்கமாக அவரால் சுட்டிக்காட்ட முடிகிறது. கொண்ட கொள்கையில் உறுதியும், நேர்மையும் முருகானந்தம் அவர்களின் சமூக வலைத்தள பதிவுகளில் எப்போதும் குறையாது நீக்கமற இடம்பெற்று வருகிறது. நூலை வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BTL6KJH1 இரா.முருகானந்தம்

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

டிஜிட்டல் அடிமைத்தனம் - அறிகுறிகளை அறிவது எப்படி?

படம்
  டிஜிட்டல் அடிமை கொரோனா காலம், நமக்கு டிஜிட்டல் பொருட்கள் மீது பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கலாம். இன்று நீங்கள் குறிப்பிட்ட நூல்களை கையில் எடுத்துச்செல்லவேண்டியதில்லை. அதற்கு பதிலாக போனை கையில் எடுத்துச்சென்றால்போதும். மடிக்கணினி கூட வேண்டியதில்லை. போனில் உள்ள இணைய வசதியை முடுக்கி, தேவையான நூல்களை நீங்கள் பெற்று படிக்கலாம். அதனை பல்வேறு தளங்களில் சோதித்து கூட பார்க்கலாம். புதிய நூல்களைக் கூட பணம் கொடுத்து தரவிறக்கிக்கொள்ளலாம். சுமை ஏதும் நம் தோளில் ஏறாது. புதிதாக கற்றுக்கொள்ள இணைய வழயில் ஏராளமான வழிகள் உள்ளன.  குறிப்பிட்ட ஒருவருக்காக காத்திருக்கிறோம் என்றால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் அல்லது இண்டர்நெட் ஆர்ச்சீவ் சென்று வாசிக்கலாம். இணையத்தில் வேறு ஏதாவது விஷயங்களைப் பார்க்கலாம். குறிப்பாக, யூட்யூபில் பிலிப் பிலிப், கிச்சடி மிஸ்டர் தமிழன் போன்ற சேனல்களைப் பார்க்கலாம். நேரத்தை வீண் என்று ஸ்மார்ட்போன் உள்ளவர் எப்போது சொல்ல மாட்டார்.  எதிர்மறை பக்கம் என்பது சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்

டெக் நிறுவனங்களுக்கு எதிரான எதிர்மறை விஷயங்கள்! - மைக்கேல் சொலானா

படம்
  மைக்கேல் சொலானா டெக் நிறுவனங்களின் மீதான வெறுப்பு, ஊடகங்களால் உருவாக்கப்பட்டதுதான் நேர்காணல் மைக் சொலானா முதலீட்டாளர்  பேச்சாளர் டெக்லாஷ் எனும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது மக்களுக்கு மோகம் குறைந்துள்ளது. அவர்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். தொழில்நுட்பம் அடுத்த பத்து ஆண்டுகளில் அது இப்போது உள்ள அங்கீகாரத்தை இழக்கும் என்று தோன்றுகிறது. எங்கு தவறு தோன்றியது என நினைக்கிறீர்கள்? ஓராண்டுக்கு முன்னர்தான் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. ஊபர், பேஸ்புக் ஆகியவற்றுக்கு எதிரான சில புகார்களை மக்கள் எழுப்பினர். பொதுவாக அமெரிக்கர்கள் இந்த நிறுவனங்களின் சேவைகளை எப்போதும் போல பெற்றுவந்தனர். அதில் அவர்கள் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. பேஸ்புக்கை குறிவைத்து பிரைவசி விஷயத்தை எழுப்பியவுடன், தாராளவாதிகள் அதனைக் கவனிக்கத் தொடங்கினர்.  சாதாரண பொதுமனிதர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவர்கள் வாங்க நினைத்த லெதர் ஷூக்களை பேஸ்புக்கில் பார்த்து அவர்களை பெரியளவு பாதிக்கவில்லை. டெக்லாஷ் எனும் தன்மை இயல்பானதல்ல. அதனை பெரிதாக உருவாக்கினார்கள். இடது பாப்புலிசவாதிகள், வலதுசா

2021 இல் இப்படி சொன்னார்கள்! - அரசியல், கிரிக்கெட், தொழில், சமூக வலைத்தளம், மருத்துவம்

படம்
  பிப்ரவரி 1  இப்போது விராட் அணியின் தலைவராக இருக்கிறார். நான் துணைக்கேப்டன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பின்புற இருக்கையில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறேன். ரகானே இந்திய கிரிக்கெட் வீரர் மார்ச் 8 இருபது இந்திய நிறுவனங்கள் மட்டுமே நூறுகோடிக்கும் மேல் மதிப்பு கொண்டவையாக உள்ளன. இவர்கள் எப்படி பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொண்டு போராட முடியும்? அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்? விஜய் சேகர் சர்மா நிறுவனர், இயக்குநர் பேடிஎம் மார்ச் 29 அடையாள அரசியல் இங்கே எப்போதும் உள்ளது. இதில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். மேற்கு வங்கத்தில் தலித்துகள் பங்களிப்பு முக்கியமானது. அவர்களே இம்முறை முக்கியமானவர்கள்.  பிரசாந்த் கிஷோர் அரசியல் நிலைப்பாட்டாளர் ஏப்ரல் 5 மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். இதற்கான கொள்கைகளை வகுத்து கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றாதபோது என்ன செய்வது என திட்டம் வகுப்பது முக்கியம் ரந்தீப் குலேரிலா எய்ம்ஸ் இயக்குநர் ஏப்ரல் 26 அனைத்து கட்சிகளும் தவறு செய்பவர்கள்தான். நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம். தீதியின் மீதுள்ள நம

சமூக வலைத்தளங்களின் சக்தியும், வருமானமும்! டேட்டா கார்னர்

படம்
                சமூக வலைத்தளம் டேட்டா கார்னர். இன்று சமூக வலைத்தளம்தான் புதிய புதுமையான செய்தி ஊடகமாக உள்ளது. இதில் வெறுப்பு அரசியல் முதற்கொண்டு  நடைமுறையிலான புதிய செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் மனநிலை பற்றி அறிய சமூக வலைத்தளங்களை பார்த்தாலே போதும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அதற்கேற்ப பல்வேறு நாடுகளில் நடைபெறும் முக்கியமாற பிரச்னைகளை சமூக வலைத்தளங்களில் அலசி பிழியப்படுகின்றன. இதைப்பற்றிய டேட்டாவை இப்போது பார்க்கலாம். உலகம் முழுவதும் செயலூக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்களின் எண்ணிக்கை 3.96 பில்லியன்.  உலக மக்கள்தொகையில் இது 46 சதவீதம். இந்தியாவில் 28 சதவீத மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 376. 1 மில்லியன். இந்தியர்கள் வாரத்திற்கு 17 மணிநேரங்களை சமூக வலைத்தளத்தில் செலவழிக்கிறார்கள். இது அமெரிக்கா, சீனா நாடுகளை விட அதிகம். 2019ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களின் எண்ணிக்கை 28%. இதன் மதிப்பு ரூ.13,683 கோடி. ஃபேஸ்புக்கின் 98 சதவீத வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் கிடைக்கிறது. டிவிட்டரின் வர

2020இல் நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்!

படம்
giphy 2020ஆம் ஆண்டு  நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்! இந்த ஆண்டு ட்ரோன் டெலிவரி செயல்படுமா? ஆப்பிரிக்காவில் ரத்தப்பைகளை எடுத்துச்செல்ல ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. எனவே இந்த ஆண்டு அரசின் அனுமதி பெற்று ட்ரோன் சேவைகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கலாம். அரசியல் விளம்பரங்கள், போலிச்செய்திகள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளதா? இதை மார்க் ஸூக்கர்பெர்க்தான் சொல்லவேண்டும். ஃபேஸ்புக் எங்கெங்கு வளர்கிறதோ அங்கெல்லாம் உள்நாட்டு கலகம், புரட்சி, போராட்டம் என வளர்க்கப்பட்டு நாட்டின் அரசியல் நிலைமை படுமோசமாகி வருகிறது. இதற்கு காரணம், ஃபேஸ்புக் நாட்டை ஆளும் சர்வாதிகார கட்சிகளுடன் சூயிங்கம்மும் வாயும் போல இணைந்து செயல்படுகிறது. இதன்காரணமாக, நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு பாசிச தன்மை வளர்ந்து வருகிறது. இதை நாமே தீர்க்கலாம். எப்படி என்றால் ஃபேஸ்புக் கணக்கை கைவிடுவதன் மூலம். ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு இடமில்லை என்று கூறிவிட்டனர். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்வி உள்ளது. நன்றி - வெப்

பாசிசத்தை தூண்டும் ஃபேஸ்புக்- முகநூலின் மறுபக்கம்!

படம்
ரியல் ஃபேஸ் ஆஃப் ஃபேஸ்புக் இன் இந்தியா பரன்ஜோய் - சிரில் சாம் இந்தியாவில் 2004 ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளத்தினால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அனைவரையும் இணைக்கிறோம் என்று ஃபேஸ்புக் சொன்னாலும், உண்மையில் மக்கள் இன்று தம்மைத் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை. அப்படியொரு பயத்தை ஃபேஸ்புக்கும் அதன் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப்பும் உருவாக்கியுள்ளன. இப்படி கூறிய சிரில் சாம், பரன்ஜோய் ஆகிய இருவரும் அதற்கான தகவல்களை அடுக்குகின்றனர். இவர்கள் கூறும் எதனையும் மறுக்க முடியவில்லை என்பது முக்கியமானது. எப்படி பாஜக, காசு கொடுத்து ஃபேஸ்புக் மூலம் திட்டமிட்ட பொய் செய்திகளை, போலி வீடியோக்களை உருவாக்கி மக்களின் மனதில் பயத்தை உருவாக்குகின்றன என்பதை விளக்கியுள்ளனர். இதில் பிரசாந்த் கிஷோர் என்ற டெக் நபரின் பங்கும் முக்கியமானது. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி நினைவிருக்கிறதா...... பிளான் பெத்த பிளான்தான். ஆனால் கொஞ்சமேனும் நம்பிக்கையை மக்களிடம் சம்பாதித்து வைப்பதில் அன்புமணி தடுமாறிவிட்டார். வீழ்ந்துவிட்டார். இதனால் முதல் கையெழுத்தை இன்னும் அவர் செக் புக்கில் மட்டும் போட்டுக்கொண்டிருக்கிற

ஃபேஸ்புக்கின் லிப்ரா புகழ்பெறுமா? - புதிய கிரிப்டோகரன்சி!

படம்
லிப்ரா கிரிப்டோ கரன்சி மக்களை ஈர்க்குமா?  சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், லிப்ரா எனும் புதிய கிரிப்ட்டோ கரன்சியை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.  நவீன உலகில் அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இணையத்தையே நம்பியுள்ளன. இதில் மக்கள் செய்யும் பணப்பரிமாற்றமும் கூட பல்வேறு வகையில் பாதுகாப்பானதாகவும் நவீனமாகவும் மாறிவருகிறது. இணையத்தில் கட்டற்ற வணிகம் செய்வதற்காக உருவானதுதான் கிரிப்டோகரன்சி. இதிலுள்ள பலமும் பலவீனமும் இதனை அரசும், மத்திய வங்கிகளும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான். பிளாக்செயின் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரிப்டோகரன்சிகள் இயங்கிவருகின்றன. இந்தியாவில் வணிகத்திற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இதனால், கிரிப்டோகரன்சிகளின் புழக்கம் குறையவெல்லாம் இல்லை. சட்டத்திற்கு புறம்பாகவும் பிட்காயின் கரன்சிகள், இணையம் வழியாக வணிகத்தில் புழங்கி வருகின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் லிப்ரா கரன்சி, கட்டற்றதல்ல. இதனை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள தன்னார்வ அமைப்பு கட்டுப்படுத்துகிறது. உலகெங்கும் உள்ள லிப்ரா அசோச

சமூக வலைத்தளங்கள் வலதுசாரித்துவத்தை ஊக்குவிக்கின்றன

படம்
Resume சமூக வலைத்தளங்கள் செய்திகளை உணர்ச்சிகரமாக்குகின்றன ஸ்வீடன் பத்திரிகையாளர் கரின் பீட்டர்சன் தமிழில்: ச.அன்பரசு இன்று மக்கள் தமது செய்திகளை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலிருந்து பெறுகிறார்கள். அதில் தவறான செய்திகள் நிறைய புழங்குகின்றன. ஊடகங்களுக்கு சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்கான முக்கிய ஆதாரமாக மாறியுள்ள நிலையில் இந்த போலிச்செய்திகள், வதந்திகளை எப்படி சரி செய்வது? தொடக்கத்தில் ஊடக நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களை கண்டுகொள்ளாமல் அமைதி காத்தன. காரணம், இதில் வெளியிடப்படும் செய்திகள் மற்று பிற விஷயங்களின் தாக்கம், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதில் தடுமாற்றம் இருந்தன. மக்களுக்கு செய்திகளை சரியான முறையில் வழங்குவதற்காக இன்று ஃபேஸ்புக்குடன் பல்வேறு செய்தி நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.  இதன் அடிப்படையில் சந்தா கட்டி படிக்கும்படியான திட்டங்களும், நன்கொடை பெற்று செய்திகளை வழங்குவதும் இன்றைய டிரெண்டிங்காக உள்ளது.  சமூக வலைத்தளத்திற்கு நீங்கள் தெரிவிக்கும் ஆதரவு என்பது கருத்தியல் சார்ந்ததா? சமூக வலைத்தளத்தில் வலதுசாரித்துவத்தின் வேகத்தை எளிதாக நீங்கள் கண்டுணர முட