இடுகைகள்

அறுவைசிகிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணாக மாறினால் சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயலும் இளம்பெண் - மைக் - மலையாளம்

படம்
  மைக் மலையாளம் இயக்கம்: விஷ்ணு சிவபிரசாத். இசை – ஹெசம் அப்துல் வகாப் தயாரிப்பு – நடிகர் ஜான் ஆபிரகாம் இருவிதமான கடந்த காலங்களைக் கொண்ட ஆண், பெண் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை. மைக் என்ற படம், எல்ஜிபிடியினருக்கான படம்போலவே உருவாகியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை எழுதிய ஆசிப் அலி அக்பர் இடையில் தடுமாறியதில் சாதாரண காதல் கதையாக மாறிவிட்டது. சாரா தாமஸ் என்ற பாத்திரத்தின் கதைதான் படம். இந்த டீனேஜ் பெண்ணுக்கு தான் ஆணாக இருந்தால் நிறைய நெருக்கடிகளை சமாளிக்கலாம் என்று எண்ணம். அவள் வீட்டில் அம்மாவும், தனக்கு ஆண் பிள்ளை பிறக்காமல் பெண் பிள்ளையாக பிறந்து இருக்கிறாளே என வருத்தம். அம்மா வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறாள். அப்பா, சுயதொழில் செய்து வந்து நஷ்டமாகிறது. இதனால் குடும்பத்தில் அவரை அம்மா ஊதாசீனப்படுத்துகிறார்.   பணம் இல்லாதவரை மனைவி வேண்டாவெறுப்பாக நடத்த அவர் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார். சாரா தாமஸின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு தேக்வாண்டோ சொல்லித் தரும் பயிற்சியாளர் ஒருவர் வருகிறார். அவர், மெல்ல சாரா தாமஸின் வளர்ப்

மாநில அரசுகள்தான் ஆயுர்வேத மருத்துவத்தின் புனித தன்மையை கெடுத்துவிட்டன! - தியோபுஜாரி, இந்திய மருத்துவத்துறை

படம்
            மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று கூறியுள்ளது . இதனை அலோபதி மருத்துவர்கள் எதிர்க்கி்ன்றனர் . கூடுதலாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யமுடியுமா என மக்களும் குழப்பத்தில் உள்ளனர் . இதுபற்றி மத்திய அரசின் இந்திய மருத்துவமுறைகள் கௌன்சில் தலைவர் வைத் ஜெயந்த் தியோபுஜாரி கூறுகிறார் . அறுவை சிகிச்சை பற்றிய மத்தி அரசின் புதிய அறிவிப்பு எதற்கு ? 1979 ஆம் ஆண்டு ஆயுர்வேத படிப்பின் முதுகலைதொடர்பாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டன . 2016 ஆம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான தெளிவிற்காக கூறப்பட்டது . விதிமுறைகள் முன்னமே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருபவைதான் . நாடெங்கும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை நடைமுறைப்படுபப்பட்டால் அதனை எப்படி கண்காணிப்பீர்கள் ? நாங்கள் கடுமையாக விதிகளை வகுத்துள்ளோம் . கல்லூரியில் குறிப்பிட்ட தர அளவுகோல் கடைப்பிடிக்கப்படாதபோது நாங்கள் அவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை . கடந்த ஆண்டு நாங்கள் இம்முறையில் 106 கல்லூரிகளுக்கு இளநிலைப்படிப்பிற்கான அனுமதியை வழங்கவில்லை . அறுவைசிகிச்சையாள

உறுப்பு மாற்ற சோதனைகளுக்கு உதவும் விலங்கு-மனித கலப்பு உயிரிகள்!

படம்
டாக்டர் எக்ஸ். விலங்கு மனிதர்கள் இணைப்பு சோதனைகளை ஏற்கலாமா? விலங்கு அணுக்கள், மனிதர்களின் அணுக்கள் இணைந்து உருவாக்கப்படும் உயிரிகளை சிமேரா என்று அழைக்கின்றனர். மனித ஸ்டெம் செல்களை விலங்குகளின் கருக்களுக்குள் செலுத்தி இந்த கலப்பு பரிசோதனையைச் செய்கின்றனர். என்ன பயன் என்று கேட்கிறீர்களா இருக்கிறது. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அரசின் அனுமதி பெற்று எலி - மனிதன் ஆகியோரின் செல்களைப் பயன்படுத்தி சோதனைகள் நடைபெற்றது. இதனை டாக்டர் ஹிரோமிட்சு நாகாச்சி என்பவர் தலைமையேற்று செய்தார். இது ஜப்பானில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சால்க் பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் - குரங்கு செல்கள் கொண்ட கலப்பின  பரிசோதனை நடைபெற்றதாக ஸ்பானிஷ் பத்திரிகை எல் பாரிஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செல்கள் பின்னர் அழிக்கப்பட்டன. விலங்கு - மனிதர்கள் கலப்பின உயிரிகள் உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், உறுப்புகள் போதாமைதான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஏராளமானோர் உறுப்பு பழுதாகி மாற்று உறுப்புக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அதிக காலம் காத்தி