பிகே எழுதும் சென்னை சீக்ரெட்ஸ் - நிறைவுப்பகுதி
சென்னை சீக்ரெட்ஸ்!- பிகே 1792 ஆம் ஆண்டு ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உள்ளாட்சி சட்டம் வழிகாட்ட, மேயரும் , நகர்மன்ற உறுப்பினர்களும் இல்லாமலேயே மெட்ராஸ் நகராட்சி சிறப்பாக செயல்படத் தொடங்கியது. இதன்படி நகரங்களில் , ‘ அமைதி நடுவர்கள் ’ நியமிக்கப்பட்டு தெருக்களின் பராமரிப்பு பற்றி முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இந்த அமைதி நடுவர்களுக்கு மதுபானங்களின் விற்பனை மீது வரி விதித்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இ வர்கள் நகரின் நீதி நிர்வாக விஷயங்களையும் கவனித்து வந்தனர். 1856 ம் ஆண்டில் அமைதிக் காவலர் முறை விலக்கப்பட்டு மூன்று ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். நகரத்தைப் பராமரிக்கவும் , அதற்கு சில வரிகள் வசூலிக்கவும் ஆணையர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ‘‘ நிலவரி அதிகமாக விதித்துக் கொள்ள சட்டம் இயற்றப்பட்டதால் வீட்டு வரி நூற்றுக்கு 5 சதவீதம் என்பதிலிருந்து ஏழரை சத விகி தமாக உயர்ந்தது. வண்டிகளுக்கும் , மாடுகளுக்கும் வரி போட்டது. 1863 ல் வர்த்தக வரி , உத்தியோக வரி , சுங்கவரி முதலியன போட்டுக் கொள்ளவும் சட்டம் இடம் தந்தது. அது வரையில் நகராட