இடுகைகள்

தேசம்- பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவைக் காக்கும் தேள்ப்படை!

படம்
இந்தியாவைக் காக்கும் ஸ்கார்பியன் படை ! - ச . அன்பரசு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது , மக்களின் உணர்ச்சி வெறியைத் தூண்டி அதில் மீன் பிடிக்கும் அரசியல்வாதிகளல்ல ; நாட்டுக்காக உயிரை துச்சமாக மதித்து தீவிரவாதிகளை களத்தில் நேருக்குநேராக சந்தித்து போராடும் வீர தீர ஜவான்களின் படைதான் . அதிலும் ஸ்பெஷலானவர்கள் டெசர்ட் ஸ்கார்பியன்கள் எனும் சிறப்புப்படை . நீர் , நிலம் , ஆகாயம் என மூன்று இடங்களிலும் பட்டையக் கிளப்பி பாடுபடும் பாரா கமாண்டோ பிரிவில் சீட் போடுவது நூறில் இருவருக்கு மட்டுமே ஆயுள் சாத்தியம் . ஏன் ? பயிற்சிகள் அவ்வளவு டஃப் ! கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்திய பாகிஸ்தான் எல்லையைக் கடந்து நடந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் ஒரு டஜனுக்கும் மேலான தீவிரவாதிகளை பரலோகம் அனுப்பியது ஸ்பெஷல் ஃபோர்ஸின் கைங்கரியம்தான் . சிறப்பு படையின் வீரதீரங்கள் அனைத்தும் தீவிரவாதிகளுடன் என்பதால் அனைத்தும் பிரேக்கிங் நியூஸ் ஆகாதபடி ரகசியம் காக்கிறார்கள் . ரௌத்திரம் பழகு ! அழிப்பது , வழிகாட்டுவது , தகவல்தொடர்பு , மருத்துவ உதவிகள் ஆகிய தகுதிகள் சிறப்புபடையில் இடம்பெற அடிப்படையானவை .