இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேராசிரியர் சுசி தாரு நேர்காணல்

படம்
உரையாடல் ஒன்றின் தொடக்கம் இந்தியாவில் முதல்முறையாக பால் வேறுபாடு குறித்த கல்விப்பாடம் ஒன்றினை ஹைதராபாத் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப கல்வி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து மற்ற கல்வி நிறுவனங்கள் கவனிக்கின்றனவா?                                       ஆங்கிலத்தில்: எஸ்.பி. விஜயா மேரி                                       தமிழில்: எம்.டி. ரிச்சர்ட் இந்த பாடப்புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களில் ஒருவரான சுசி தாரு அவர்களிடம் பேசினோம். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புத்தகத்திற்கு என்ன மாதிரியான விளைவு உள்ளது? நான் இவ்வளவு ஒருமித்த கருத்துகள் இருக்கும் இந்த விஷயத்துக்கு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாடப்புத்தகம் மக்களின் மனநிலையை மாற்றிவிடுமா? நான் இந்தக்கேள்வியை எனக்குள்ளேயே திரும்ப திரும்ப கேட்டுக்கொள்வதுதான். உண்மை இதுதான். ஒரு புத்தகம் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுத்திவிட முடியாது.  நாம் ம

மனித உரிமைப்போராளி சோனி சோரி நேர்காணல்

படம்
அரசமைப்பு சட்டத்தின் படி செயல்படும் அரசு, ஏன் வன்முறையைத் தூண்டிவிடுகிறது? சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டரைச் சேர்ந்த மனித உரிமை போராளியும், ஆம் ஆத்மியின் மாநில தலைவருமான சோனி சோரி அண்மையில் அவர் மீது நடந்த தாக்குதல் குறித்தும், மாநில ஐ.ஜி.பி. எஸ்.ஆர்.பி. கல்லூரிக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டம், காவல்துறை மற்றும் நக்ஸல்கள் இடையிலான சண்டை மற்றும் மாநிலத்திலுள்ள பழங்குடியினர் குறித்தும் நம்மிடையே விரிவாக உரையாடுகிறார்.                                   ஆங்கிலத்தில்: இஷான் மிடல்                                   தமிழில்: வின்சென்ட் காபோ அண்மையில் உங்களை சிலர் தாக்கினார்கள் அல்லவா?(பிப்ரவரி 21) தாக்கியவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் கிடைத்ததா? அவர்களின் முகம் எனக்குத் தெரியாது. பாஸ்தர் ஐ.ஜி.பி. எஸ்.ஆர்.பி. கல்லூரியின் இந்த விவகாரத்தின் பின் இருக்கிறார் என்று சந்தேகப்படுகிறேன். பாஸ்தரின் உள்ளே காவல்துறை அத்துமீறுவதை எதிர்த்து குரல் கொடுத்த விவகாரத்திலிருந்து  அவரும் நானும் போரிட்டு வருகிறோம்.  உங்களைத் தாக்கியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஆமாம்.

தமிழாக்க கட்டுரை: ஷோபா டே

படம்
மாற்றுக்கருத்தினை கண்டு ஏன் இவ்வளவு பயம்?                                             ஆங்கிலமூலம்: ஷோபா டே                                              தமிழாக்கம்: அன்பரசு சண்முகம் கடந்த இரவன்று நடந்த ஒரு விருந்தில் ரோஸ்நிற ஐஸ்க்ரீமை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் அருகில் வலதுபுறமாக வந்து சரி, ஜே.என்.யு பல்கலைக்கழகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அப்போதுதான் கன்னையா குமாருக்கு இடைக்கால பிணை கிடைத்திருந்த செய்தி கிடைத்தது .அவருக்கு அப்படி பிணை கொடுத்தது சரி/தவறு என நாடெங்கும் தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. என்னிடம் கேள்வி கேட்டவர் நான் பதில் கூறும்முன்னமேயே நான் ஜே.என்.யுவில்தான் படித்தேன். பின் கொல்கத்தா சென்றுவிட்டேன். நான் அங்கிருந்தபோது தங்கியிருந்தவர்கள் மாநில அரசோடு தினமும் சண்டையிட்டு கொண்டுதான் இருந்தார்கள். பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, சண்டையிடுவது, குடிப்பது, மறியல்களை நடத்துவது என்றுதான் இருப்போம். அது இயல்பானதாகவே இருந்து வந்தது. மாணவர்கள் நம்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்துக்கள் ஆவர். அவர்களின் செ

சீதாராம் யெச்சூரி நேர்காணல்

படம்
பி.ஜே.பி, இந்து வாக்குவங்கியைக் கைப்பற்ற பிரிப்பது, உடைப்பது, உருவாக்குவது என்றே இயங்கி வருகிறது                                                     ஆங்கிலத்தில் சஞ்சய் பஸக்,நம்ரதா பிஜி அகுஜா                                                      தமிழில் ரிச்சர்ட் மஹாதேவ், வின்சென்ட் காபோ ஜவஹர்லால் நேரு பல்கலையில் தேசத்திற்கு எதிரான வாசகங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்த விவகாரம் தொடங்கிய முதல்நாளிலிருந்து அந்த கோஷங்களை   எழுப்பியவர்களைக் கண்டறிந்து, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில்  அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க கோரி வருகிறோம். ஆனால் எந்த கைதும் இல்லை? என்னதான் நடைபெறுகிறது? உங்களிடம் தேசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்து ஆதாரங்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே? ஆனால் அதைவிட்டு விட்டு பல்கலைக்கழகத்திற்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் பிரசாரங்கள் எதற்கு எழுப்பப்படுகிறது? ஒன்றை மனதில் கொள்ளுங்கள். இது பல்கலைக்கழகத்தோடு நின்றுவிடாது. இது ஒரு தொடக்கம்தான்.  வேறு சக்திகள் அரசினை இயக்குவதாக கூறுகிறீர்களா?

லாலு பிரசாத் நேர்காணல்

படம்
நிதீஷூக்கு எனது ஆதரவு உண்டு .. ஆனால் அவரை எனது தலைவராக நான் ஏற்றுக்கொள்ளவில்லை                                                                                   லாலு பிரசாத் யாதவ் ராஷ்டிரிய ஜனதா தள் தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்தது , மதரீதியான கும்பல் அதிகாரத்தை வருவதைத் தடுக்கவும் கர்வாப்ஸி போன்றவற்றை செயல்படுத்தும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கவும் என்று கூறுவதோடு பல்வேறு விஷயங்களைக் குறித்தும் நம்மிடையே தனது இயல்பான தன்மையில் உரையாடுகிறார் .                                 ஆங்கிலத்தில்: நயீர் ஆஸாத்                                 தமிழில்: ரிச்சர்ட் மஹாதேவ், ஏ.எஸ். வரும் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ் குமாரை தேர்ந்தெடுக்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள நேர்ந்தது? நிதிஷ் குமாரை எனது தலைவராக இன்றும் சரி இதன் முன்பும் நான் ஏற்றுக்கொண்டதில்லை என்பதை உங்களிடம் முன்பே தெரிவித்திருக்கிறேன். திரு. குமார் பீகாரின் முதலமைச்சர் அவருக்கு எனது கட்சியின் ஆதரவு உண்டு. மதவாத கும்பல்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்தப்பட்டால் என்னவாகும்?

படம்
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்தப்பட்டால் என்னவாகும் ? – திரைப்பட இயக்குநர் ஆனிர் தேசிய விருது பெற்ற இந்தி திரைப்பட இயக்குநரான ஆனிர் விருதினை திருப்பித்தருவதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறுவதோடு மற்றவர்களை புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது என்றும் கூறுகிறார். ஷாருக்கான் இந்தியாவில் பெருகிவரும் சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் குறித்த சம்பவம் குறித்தும், தாராளமான கருத்துக்களை தெரிவிக்கும் தளம் சுருங்கி வருவது குறித்தும் நம்மிடையே விரிவாக பேசுகிறார்.                            ஆங்கிலத்தில் மெஹூல் தாக்கா                            தமிழில்: வின்சென்ட் காபோ \ நாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த தங்கள் புரிந்துகொள்ளல் என்பது என்ன?      இன்று நம் சமூகத்தில் எந்த உரையாடலையும் தொடங்குவதற்கு இடமே இல்லாமல் போய்க்கொண்டு இருப்பது என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது. வேறுபாடுகளை சரியென ஏற்றுக்கொள்வது என்பதில்லாமல் அவர்களிடத்தில் மௌனத்தை உருவாக்குவது சரியானதல்ல.ந இதற்கு முன்பு வேறு அரசின் ஆட்சியில் இருக்கும

நூல்முகம் - வின்சென்ட் காபோ, ரிச்சர்ட் மஹாதேவ்(2)

படம்
                                                                                                                                                                                                      6 நான் தமிழ் சினிமா பார்ப்பதில்லை  சுதேசமித்திரன் பாதரசம் வெளியீடு இந்நூல் திரைப்படம் குறித்த ஜெ.பிஸ்மியின் களவுத்தொழிற்சாலை நூலை ஒத்ததே. சுதேசமித்திரன் திரைப்படத்தின் தன்மை, அதன் தட்டையான வடிவம், திரைக்கதை, திரைப்பட அரசியல், திரைப்படத்தின் நீளம் என பல்வேறு விஷயங்களை பார்வையாளர் புறமிருந்து ஆதங்கத்தோடு பேசுகிறார்.  படங்களை பெரிதும் விரும்புகின்ற எளிய சராசரி சினிமா விரும்பியின் மனப்புழுக்கங்கள்தான் இவை இதை வாசிக்கும் எவரும் உணர முடியும். படங்கள் தம் மண்சார்ந்த தன்மையை இழந்தது காலத்தின் கட்டாயம்தான். உலகமயமாக்கலின் கால கட்டத்தில் மொழி, கலாச்சாரம், உணவு எல்லாவற்றையும் வணிகமாக்கும் நிறுவனங்கள் கலை குறித்த சிந்தனையில்லாமல் அனைத்தையும் உறிஞ்சி செரித்து செழுமையாகின்றன. பிற மொழி நாட்டு திரைப்படங்களைப் பார்த்து படமெடுத்து தமிழ்ப்பட