இடுகைகள்

வயது. இறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகையிலையாய் சுருங்கும் பெற்றோர்! - கடிதங்கள்

படம்
          புகையிலை இலையாய் சுருங்குகிற வாழ்க்கை! அன்புத்தோழர் சபாபதிக்கு , வணக்கம் . கையில் எலும்பில் ஏற்பட்ட காயம் குணமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் . எனக்கு அலுவலகத்தில் இருந்து ஓலை வந்துவிட்டது . நான் 8.2..21 அன்று அலுவலகத்தில் இருக்க வேண்டும் . இனிமேல் பரபர வாழ்க்கை தொடங்கிவிடும் . வீட்டில் நான் இத்தனை நாட்கள் இருக்க வாய்ப்பு கிடைத்ததே ஆண்டவனின் அருள்தான் காரணம் . அப்பாவுக்கு 68 வயது ஆகிவிட்டது . சர்க்கரை , ரத்த அழுத்தம் , கண்பார்வை மங்கல் என தடுமாறுகிறார் . ஆனால் என்னால் வேலை காரணமாக வீட்டில் இருக்க முடியவில்லை . இருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான் . ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை . நம்மை பெற்றவர்கள் , வளர்த்தவர்கள் கண் முன்னே காய்ந்து சுருங்கி புகையிலை போல மாறுவது மனதைப் பிழிவது போலவே உள்ளது . வீட்டில் இருந்த நாட்களில் அம்மாவுக்கு சமைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தேன் . அம்மாவுடன் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன் . அவள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் நான் பேசியது அவளது காதில் விழுந்திருக்குமா என்றே தெரியவில்லை . திருமண விஷயங்களுக்கு கூட கா