இடுகைகள்

பன் பட்டர் ஜ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசியை விமர்சிப்பவர்கள் தேச துரோகிகள்!- பன் பட்டர் ஜாம்

படம்
  எனதருமை மெகந்தியா நாட்டு மக்களே,  எனது உரையை பெருந்தொற்றையும் சமாளித்து வாழ்பவர்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எப்படி நோய்த்தொற்று என்பது அதிர்ச்சியை அளித்ததோ, எனக்கும் அதேபோல்தான் இருக்கிறது. இதனால் நோயுற்றவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், தொடர்புடைய மாநிலங்களே என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன்.  சில மாநில முதல்வர்கள் என்னுடைய பெருந்தன்மையைப் புரிந்துகொள்ளாமல்  தடுப்பூசி எங்கே, மருந்துகள் எங்கே என்று கேட்கின்றனர். அவை எங்களிடம் இருப்பு இருந்தாலும் அதிகபட்ச லாபத்திற்குத்தான் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்போம். அதுதானே சிறந்த வணிகமாக இருக்கமுடியும். இதை சிலர் விமர்சிக்கின்றனர். இவர்களுக்காகத்தான்  வீபா எனும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். அரசை குறைசொல்பவர்களை விசாரணையின்றி, ஆதாரங்களின்றி சிறையில் வைத்திருக்கும் சட்டம் இது. இதனால் அரசு, சிறப்பாக செயல்பட முடியும்.  செயல்பாடு என்பதை பேச்சு என்று புரிந்துகொள்ளுங்கள். நோய்த்தொற்று பாதிப்பால் வெளிநாடு செல்லும் விமானங்களை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, நேரத்தை எப்படி போக்குவது  என தெரியவில்லை. மருத்து