சடலங்களை மறைக்க சீரியல் கொலைகாரர்கள் மெனக்கெடுகிறார்களா?
சித்திரவதை தொடர் மற்றும் சைக்கோ கொலைகார ர்களை மோசமானவர்கள் என்று எப்படி பிரிப்பது , இதற்கு பலரும் பல்வேறு வித எடுத்துக்காட்டுகளை கூறுவார்கள் . ஆனால் எளிதான ஒன்று யார் உங்களையும் , உங்களது நண்பர்கள் , குடும்ப உறுப்பினர்களை கொல்கிறார்களோ அவர்கள்தான் என்று கூறலாம் . ஒரு கொலைகாரர் எந்தளவு மோசமானவர் என்பதை அவர் செய்யும் சித்திரவதையை வைத்து முடிவு செய்யலாம் . இந்த வகையில் டெப்ரி டாமர் , அனைத்து குற்றவாளிகளுக்கும் முன்னோடியான ஆள் . இவர் , தான் கொல்லும் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பிறகு தலையில் ட்ரில்லிங் மெஷி்ன் வைத்து துளையிடுவார் . பிறகு அமிலங்களை எடுத்து உள்ளே ஊற்றுவார் . இதனால் பலரும் மயக்கத்தில் இருக்கும்போது , இறந்துபோனார்கள் . எதற்கு இப்படி சித்திரவதை செய்தீர்கள் என்று விசாரித்தபோது , நான் செய்யும் விஷயங்களை வலியில்லாமல் செய்ய நினைத்தேன் என பேட்டி கொடுத்தார் டாமர் . பிரான்சில் குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்ற கில்லெ்ஸ் டி ரைஸ் , பதினைந்தாம் நூற்றாண்டில் முக்கியமான கொலையாளி . இதற்கு அடுத்து ஆல்பர்ட் பிஷ் உள்ளே வர