காரில் காணாமல் போன கவிஞர்!
காணாமல் போன கவிஞர் ! 1955 ஆம் ஆண்டு கோல்டன் பிரிட்ஜ் அருகே கார் ஒன்று நின்றிருந்தது . எஞ்சினின் சாவியோடு இருந்த காரில் யாருமில்லை . அமெரிக்க கவிஞர் கீஸ் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது தவிர இன்றுவரை அக்கவிஞர் எங்கு போனார் ? என்ன ஆனது அவருக்கு என காவல்துறையால் கண்டறிய முடியவில்லை . 1914 ஆம் ஆண்டு நெப்ராஸ்காவில் பிறந்த கீஸ் இன்றும் கவிதைகளுக்காக நினைகூரப்படும் ஆளுமை . எலிசபெத் பிஷப் , ராபர்ட் லோவெல் உள்ளிட்டோரோடு ஒப்பிடும் அளவு பெரிய கவிஞர் அல்ல இவர் . இவர் பற்றிய இரங்கல் குறிப்பு தவிர பெரியளவு தகவல்கள் இலக்கிய வட்டாரங்களில் கிடைக்கவில்லை . பல்வேறு கவிஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்தார் கீஸ் என்கிறார் சக கவிஞரான கியோயா . 1940 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்படாத நாவல் ஒன்றையும் எழுதியிருந்தார் கீஸ் . மதுவுக்கு அடிமையான மனைவி , ஆளுமை பிறழ்வு குறைபாடு என தவித்தாலும் இவரின் நான்கு கவிதைகள் நியூயார்க்கர் இதழில் பிரசுரமாகியுள்ளது . காரிலிருந்து இறங்கிய கீஸ் பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் என யூகங்கள் நிலவினாலும் உறுதிப்படுத்த கீஸின்