இடுகைகள்

ஆதவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசிப்பு நோக்கத்தை பாழாக்கும் தேர்வு! - கடிதங்கள்

படம்
  காகித மலர்கள் - ஆதவன் அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறையைப் பிரார்த்திக்கிறேன்.  இன்றுதான் ஆதவன் எழுதிய காகித மலர்கள் நூலைப் படித்து முடித்தேன். நாவலில் வரும் கேள்விகளுக்கு இறுதியில் பதில் சொல்லியிருக்கிறார்  ஆசிரியர். வாசிக்க நல்ல நூல்தான் என்பதில் சந்தேகமில்லை.  அறையில் சமைத்து சாப்பிட முயற்சிகளைச் செய்து வருகிறேன். கடைகளில் அசைவப் பிரியர்களுக்கான விஷயங்களே அதிகம் உள்ளன.  ஹிட் ரெஃப்ரெஷ் - சத்யா நாதெள்ளா எழுதிய நூலைப் படித்து வருகிறேன். கணினித் துறை வளர்ச்சி, தனது மூளைவாதம் கொண்ட குழந்தையின் பராமரிப்பு, தொழில் தடைகள் என பல்வேறு விஷயங்களை நூலில் தெளிவாகப் பேசியுள்ளார். அலுவலகத்தில் இப்போது மாதம்தோறும் ஒரு நூலைப் பற்றி பேச சொல்லுகிறார்கள். அந்த வரிசையில் சத்யாவின் நூலைப்பற்றி பேசலாம் என யோசித்து வருகிறேன். எதைப்படித்தாலும் சரி, அதைப்பற்றி தேர்வு வைத்தால் வாசிப்பு நோக்கம் பாழாகப் போய்விடும் என்பது எனது கருத்து.  சாவி எழுதிய நவகாளி யாத்திரை, இந்திய சுயராஜ்யம் ஆகிய நூல்களை வாசிக்கவேண்டும். தேசியம் பற்றிய கட்டுரையில் உங்கள் உதவி தேவை என்று நினைக்கிறேன்.  ஜோ

மனிதர்களின் உதவியின்றி பூத்துக்குலுங்கும் காகித மலர்கள்! - ஆதவன்

படம்
pinterest காகித மலர்கள் ஆதவன் உயிர்மை ரூ.190  தாராளமய உலகிலும் பொருந்தும் கதை என்பது ஆதவனின் எழுத்துச் சிறப்பு. நிறையப்பேருக்கு இந்த நாவல் பிடிக்காமல் போகலாம். காரணம், இது இன்றைய நான்லீனியர் சினிமா போல கட் செய்து ஜம்ப்பாகி கதை செல்கிறது. குறிப்பாக இறுதிப்பகுதியை எட்டும்போது. பக்கம் 300க்கும் மேல் கதை சொல்லும் வடிவமே, ஒருவர் பேசி முடிக்கும் வார்த்தைக்கு,  மற்றொரு கதாபாத்திரத்தின் பதில் கூறுவதாக அடுத்த கதை தொடங்கும். இரண்டும் வேறுவேறு என்பதால் கவனமாக நீங்கள் படிக்கவேண்டியிருக்கும். ரைட். காகித மலர்கள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என எழுதப்பட்டபோதே பஞ்சாயத்து நடந்திருக்கிறது. நாம் இக்கதையில் வரும் பசுபதி, மிஸஸ் பசுபதி, விசுவம், செல்லப்பா, பத்ரி, கணேசன், தாரா, பத்மினி என யாரை வேண்டுமானாலும் காகித மலர்கள் என்று  வைத்துக்கொள்ளலாம். ஆசிரியர் இதனை வேரற்ற என்று கூட சொல்லலாம் என்கிறார். அத்தனை வாய்ப்புகளும் இதில் உள்ளன. ஆனால், கதையில் இக்கதாபாத்திரங்களை மிக இயல்பாக சித்தரித்தது கதையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் படிக்கலாம் என்று சொல்ல வைக்கிறது. அரசு பணியில்