இடுகைகள்

சச்சின் பைலட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் தளத்தில் இருந்தாலும் கண்ணியமாக நாகரிகமாக பேசிப்பழக வேண்டும்! -சச்சின் பைலட்

படம்
      சச்சின் பைலட்       மொழிபெயர்ப்பு நேர்காணல் சச்சின் பைலட், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் நீங்கள் கடந்த ஒரு வாரமாகவே ஜெய்ப்பூரில் இல்லை. உங்களது மீது ஆளும் அரசு புகார் செய்துள்ளதே? அரசு செய்த புகாரை நாங்கள் கட்சி தலைமையிடம் கொண்டு சென்றோம்.அவர்கள் அதைக் குறித்து விசாரிப்பதற்கு முன்னரே மாநில அரசு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையை எடுக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் மீது சபாநாயகர் புகார் அளித்தார். பதவி நீக்க நடவடிக்கை வரை எடுக்கப்பட்டது.மாநில முதல்வர் கொண்ட கருத்துகளுக்கு மாற்று கருத்துகள் எம்எல்ஏக்களுக்கு இருந்தது. அதற்கு உடனடியாக கட்சிக்கு துரோகம் செய்தார், நாட்டிற்கு துரோகம் செய்தார் என்று கோஷங்கள், பேட்டிகள் அளிக்கப்பட்டன. இவையெல்லாம் இதற்கு தேவையில்லாதவை. அந்த நேரத்திலும் கூட நான் கட்சிக்கு எதிராக, மாநில முதல்வருக்கு எதிராக எந்த வார்த்தையும் பேசவில்லை. டில்லியில் பிரியங்கா, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசினேன். மூன்று மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்களோடு இணக்கமாக செல்ல சூழல் உந்துதல்தான் காரணமா? பிரச்சினைகளை அமர்ந்து பேசி தீர்ப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இர