அத்தையின் மந்திரி பதவியை அழித்து அவரின் மகளைக் கரம் பிடிக்கும் மருமகனின் கதை!
பொப்பிலி ராஜா வெங்கடேஷ்,திவ்ய பாரதி இயக்கம் பி கோபால், காட்டுக்குள் அம்மா, தாத்தாவுடன் சிறுவன் இருபது ஆண்டுகளாக வளர்ந்து பெரிதாகிறான். அவன்தான் பொப்பிலி ராஜா. அங்கு வரும் அமைச்சரின் பெண்ணுடன் நேசம் பிறக்கிறது. ஆனால் அமைச்சரோ, ராஜாவின் அம்மா, தாத்தாவை கட்டி வைத்து அடிக்கிறாள். காவல்துறை மூலம் சித்திரவதை செய்ய முயல்கிறாள். ஏன் அப்படி செய்கிறாள் என்பதே கதையின் முக்கியப் பகுதி. தேர்தல் அரசியலுக்காக கொலை செய்யப்பட்டு, குணநலன்கள் களங்கப்படுத்தப்பட்டு காட்டுக்கு செல்ல நேருகிற சூழல் ராஜாவின் அம்மாவுக்கு நேருகிறது. ஆனால், அவர் பழிவாங்குவதை முக்கியமாக கருதவில்லை. தனது மகனை அவன் இயல்புப்படி வளர்க்கிறார். அவன் அரசு வனத்துறையோடுசேர்ந்து வேலை செய்கிறான். இந்த நேரத்தில் அங்கு வரும் அமைச்சரின் மகளை சந்திக்கிறான். இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டிக்கொள்கிறது. பிறகு இருவரும் மெல்ல மனதால் நெருங்கி வருகிறார்கள். அவன் யார் என அடையாளம் தேடும்போது, அவளின் அப்பா, அவன் உன் மாமன் முறைதான். கட்டிக்கொள்ளலாம் என வெளிப்படையாக சொல்கிறார். அதாவது, மனைவியின் தம்பி மகன். பழிவாங்குதலை தொடங்க வேண்டாமா? மந்திர