நூல்வெளி 2: புகழ்பெற்ற சிறுகதைகள்
உலகம் உங்கள் கையில் உலகப்புகழ் சிறுகதைகள் பேரா.கி.நடராஜன் பாவை பப்ளிகேஷன்ஸ் விலை ரூ. 70 இந்நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. அதனை டால்ஸ்டாய் செகாவ், மாப்பசாந், டாஸ்டாவ்ஸ்கி, சோமர்செட்மாம், ஓ ஹென்றி, ஆஸ்கார் வைல்ட், ஜேம்ஸ் தர்பர்,ஆர்.கே. நாராயணன் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். முதல் கதையான மூன்று துறவிகள் கதை அனைவருமே வாசித்திருக்கக்கூடிய கதைதான். சடங்குகளை ஒழித்து தூய மனதோடு இறைவனை நினைத்திருந்தால் போதும் என்னும் டால்ஸ்டாய் எழுதிய கதை. தன்னலமிக்க அரசன், மேகிக்களின் அன்பளிப்பு போன்றவற்றை நீங்கள் நிச்சயம் உங்களது ஆங்கில துணைப்பாடத்திலேயே வாசித்திருக்கலாம். அதைப்பற்றி மாங்கு மாங்கு என்று பரீட்சையிலே விளக்கு விளக்கு என்று விளக்கிவிட்டதால் அக்கதைகள் குறித்து புதிதாக சொல்ல ஏதும் இல்லை. புள்ளிபோட்ட வளையம் - ஆர்தர் கானன்டாயில், நகைகள் - கைடி மாப்பசாந், தாயார் - சோமர்செட் மாம், ஜோஸியக்காரனின் வாழ்க்கையில் ஒரு நாள் - ஆர்.கே. நாராயணன் என இக்கதைகள் புதிதான வாசிப்பனுபவத்தை அளித்தன என்று கூறமுடியும். புள்ளி போட்ட வளையம் கதையில் சுவாரசியம் என்னவென்றால் ஷெர்லாக் ஹோம்ஸ் அக