இடுகைகள்

விவியன் மார்வாகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞர்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை சொல்லும் நூல்! - மொழிபெயர்ப்பு நேர்காணல்

படம்
  இளைஞர்களின் எண்ணம், சிந்தனை பற்றிய நூல் விவான் மார்வாகா எழுத்தாளர் மில்லினிய இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் சிந்தனை அரசியல், திருமணம், சமூக வலைத்தளம் ஆகியவற்றில் எப்படி இருக்கிறது என விவான் ஆய்வு செய்திருக்கிறார். அவரது நூல் வாட் மில்லினியல் வான்ட். இதைப்பற்றி பேசினோம். சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை மாற்றியுள்ளது என்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றபடி தங்களை வெளிக்காட்டுவதற்கான கருவிகளை வழங்கியுள்ளது. இதன் விளைவாக இணையத்தில் அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும், எழுத்துகள் எப்படி இருக்கவேண்டும், கருத்தியல் என கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்தை எந்த விதமான அலங்காரமும் இல்லாமல் பேசுகிறார்கள். ஆனால் இதுபோன்ற வாய்ப்பு, சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் கிடைப்பதில்லை.  விவான் மார்வாகா இந்த இளைஞர்கள் எந்த முறையில்  வாக்குகளை அளிக்கிறார்கள்? உலகம் மிக சிக்கலான நிலையில் உள்ளபோது  பிறந்தவர்கள் மில்லினிய தலைமுறை. அவர்கள் பிறக்கும்போது உலக மயமாக்கல் நடந்திருந்தது. நிறைய வேலைவாய்ப்புகள் இருந்தாலும் கூட தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது கடினமாக இருந்தது. மி