இடுகைகள்

கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாரம் முழுக்க காவல்துறை அதிகாரி, வார இறுதியில் கொலையாளி! விஜிலாண்டே

படம்
  விஜிலாண்டே மாங்கா காமிக்ஸ்  கொரியா இந்தக்கதையில் நாயகன், ரௌடி ஒருவனால் பாதிக்கப்பட்டு தாயை இழந்தவன்.அதாவது, அம்மாவை ரௌடி அடித்து உதைத்து படுகொலை செய்துவிடுகிறான். நீதிமன்றம் குற்றவாளிக்கு மெலிதான தண்டனை கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது. இது நாயகனை பாதிக்கிறது. சிறுவனாக இருப்பவன், பெரியவனாகி குற்றவாளிகளை அடியோடு அழிப்பதாக உறுதி எடுக்கிறான். அதற்கு காவல்துறையே சரியான வழி என அங்கு வேலைக்கு சேர்கிறான். அவனது வயதில் உள்ளவர்களில் கராத்தே, ஜூடோ, ஜிஜூட்சு ஆகியவற்றை சிறப்பாக கற்றவர்கள் யாருமில்லை என்று பெயரும் புகழும் எடுக்கிறான். உங்களுக்கு இப்போதே புரிந்திருக்கும். யார் விஜிலாண்டே என்று. நாயகன்தான் குற்றவாளிகளை ஹூடி அணிந்துகொண்டு சென்று கை முஷ்டிகளால் தாடையை பெயர்த்து குத்து குத்தென குத்தியே கொல்கிறான். வேறு எந்த ஆயுதங்களும் கிடையாது. ஒருவகையில் அப்படி கொல்வது நாயகனுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது.  கொரியாவில் நீதித்துறை கறைபடிந்த ஊழல் புரையோடியது. இதன் காரணமாக பள்ளியில் கேலி சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அடித்து உதைத்தல், குடும்ப வன்முறை என எவற்றுக்கும் நீதித்துறை கடுமையான த...

கள்ளக்காதல் கதையில் கொடூர கொள்ளை குழுவும் போதைப்பொருள் குழுவும் ஒன்றாக சேர்ந்தால்....

படம்
  தகத்தே லே தெலுங்கு நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை, அனன்யா ராஜ், ரவிசங்கர் க்ரைம் திரில்லர் பவானி மூவிஸ் - யூட்யூப் சேனல் ஏ பிளஸ் சான்றிதழ் வாங்கக்கூடிய பாலுறவு, தீவிர வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படம். படத்தில் மூன்று கதைகள் உள்ளது. ஒன்று இன்ஸ்பெக்டர் போதைப்பொருட்கள் குழுவை தேடி அலையும் கதை. இதில் அவர், சில டபுள் ஏஜெண்டுகளை போதைப்பொருள் கேங்கில் இருந்து விலைக்கு வாங்கி தகவல்களை வாங்கி அவர்களை பிடிக்க முயல்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் மூலம் இன்னொரு வழக்கும் வருகிறது. அது ஒரு கொலை வழக்கு.  இரண்டாவது கதை, கொலைவழக்கு.இதில் நாயகன் வீட்டில் கொலை ஒன்று நடக்கிறது. அவரது வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை செய்யப்பட்டு ஹாலில் கிடக்கிறார். வயிற்றில் அலங்காரப் பொருள் ஒன்று துளைத்து சென்றிருக்கிறது. நாயகன், கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு அங்குள்ள கைரேகைகளை துடைக்கிறார். தடயங்களை அழிக்கிறார். பிறகு போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுக்கிறார். போலீசாரும் வந்து பெண்ணின் உடலை மீட்டு செல்கிறார்கள். தகவல் கொடுத்த நாயகன் மீது சந்தேகம் தோன்ற அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார்...

எதிர்காலத்தை சொல்லும் சிறுவனால் தீரும் கொலை மர்மம்!

  மறுவாசிப்பு 2(2025) சித்திரமும் கொல்லுதடி டிடெக்டிவ் ராபின் - மார்ட்டின் முத்து காமிக்ஸ் க்ரைம் திரில்லர் காமிக்ஸ் விலை ரூ.10 கருப்பு வெள்ளை காமிக்ஸ். அமெரிக்காவின் நியூயார்க்கில் மழைபெய்யும் நாளன்று ஒரு பெண் கதவைத் திறக்கிறாள். யாரோ ஒருவர் உள்ளே நுழைகிறார். அத்தோடு அந்த காட்சி முடிந்துவிடுகிறது. மர்மக் கதைக்கு பொருத்தமான காட்சி. அடுத்த நாள், பின்னி என்ற கட்டை குட்டை தோற்றத்தோடு தொழிலதிபர், கிம் என்பவளைப் பார்க்க பூங்கொத்தோடு வருகிறார். லாஸ்கி என்ற கார் மெக்கானிக், கிம் காசுக்காக என்னவேண்டுமானாலும் செய்வாள், உங்களிடம் உள்ள காசுதான் அவளை மயக்குகிறது என வன்மத்தோடு பேசுகிறான். பின்னியைப் பொறுத்தவரை அவர் நியூயார்க்கிற்கு தொழில் விஷயமாக வந்தாலும் கிம் என்ற பெண்ணோடு கொண்டுள்ள காதல், பாலுறவு ஒரு போதையாக மாறியிருக்கிறது. அவளை மணந்துகொள்ளலாமா என்று கூட யோசித்துக்கொண்டே நடைபோடுகிறார்.  அவர் கிம்மின் வீட்டுக்கு படியேறுகிறார். லாஸ்கி பொறாமையில் பேசுவதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திறந்திருந்த கதவை தள்ளியபடி உள்ளே நுழைகிறார். படுக்கை அறைக்கு சென்று பார்த்தால் கிம் தலையில் அடிபட்டு இறந்து க...

நவீனத்துவ இந்தியாவையும், அதன் வளர்ச்சியையும் தடுக்கும் பெரிய எதிரி இந்துமதம்.

படம்
பெருமை மிக்க சூத்திரன் இந்துமதம், தனது கருத்தியலை பயன்படுத்தி எப்படி தீண்டத்தகாதவர்களை ஒடுக்கிறது என பார்ப்போம். முதலில் அவர்கள் தங்களை சூத்திர ர்களாக கருதவேண்டும். அப்படி இருக்க விரும்ப வேண்டும். இதுதான் அனைத்து மோசமான கருத்தியலின் அடிப்படையும் கூட. பெயர், புகழ், அடையாளம், மதம் இல்லாமல் இருப்பவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயரைக் கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். இதுகூட அவமானத்தை மறைக்க என்று கூறுகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் தங்களை சூத்திரர்களாக நினைத்துக்கொண்டாலும் அவர்கள் இந்துமதத்திற்குள்ளாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் இந்து கடவுள்களை வணங்க கூடாது. இந்துமத புனித நூல்களை தொடக்கூடாது. அவர்கள் கலாசாரமான மொழியை பேசக்கூடாது. தங்களுடைய பெயரைக் கூட கௌரவமாக வைத்துக்கொள்ளக்கூடாது. தீண்டத்தகாதவர்கள் தினசரி அடி, உதை, கொல்லப்படுவது, எரிக்கப்படுவது, வல்லுறவு செய்யப்படுவது ஆகிய அநீதிகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எதற்காக? அவர்கள் இந்து அல்ல என்பதற்காக. இந்து மனித பிரமிடின் வெளியேதான் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்துமத படிநிலைமுறையின் ஒட்டுமொத்த எடையையும் தூக்கி சு...

இந்து என்பதன் அர்த்தம் அனைத்தையும் தனித்தனியாக பிரிப்பது!

படம்
    இந்து மத அதிசய கொள்கை - ஒற்றுமை அல்ல பிரிவினையை ஊக்குவிக்கிறது! வெளிநாட்டிலுள்ள தோழர்களுக்கு, இந்தியா ஏன் இப்படி இருக்கிறது என்று மனதில் கேள்வி எழலாம். எதனால் இப்படி வினோதமாக நடந்துகொள்கிறார்கள், எதனால் இந்த நாடு அழிந்துகொண்டே வருகிறது என பல்வேறு கேள்விகள் எழலாம். அதற்கு எல்லாம் இந்து மதத்தில் பதில் இருக்கிறது இந்து மனம் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்துமதம் ஒற்றுமையை விட பிரிவினையை உருவாக்குகிறது. இந்து என்பதன் அர்த்தம், ஒன்றாக கலப்பது அல்ல, அனைத்தையும் தனியாக பிரிப்பது. அதன் முக்கியமான கொள்கையே பிரிப்பதுதான். பிரிவினைக்கு உதவுவதுதான் சாதி, தீண்டாமை ஆகியவை. பிரிவினையை தீவிரப்படுத்த தீண்டாமை உதவுகிறது. இந்த வகையில் பல்வேறு இனக்குழு மக்களையும் உள்ளுக்குள்ளேயே நாம் பிரித்து வைத்துவிட முடியும். இந்து இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது. அப்படி இருந்ததும் இல்லை. இனிமேலும் ஒரே நாடாக இருக்கவும் முடியாது. சாதி அல்லது அதன் துணைப்பிரிவு என்பது தனிப்பட்ட நாடாக மாறுகிறது. தேசியவாதிகளின் சிறை என்று கூட கூறலாம். மொழி மக்களை பிரிக்கிறது. இந்துக்கள், தீண்டத்தகாதவர்கள் கம்பி வேலியால் ...

ஜோசப் ஸ்டாலின், லெனின் கனவான சோவியத் யூனியனை எதிரிகளை களையெடுத்து கட்டமைத்த கதை!

படம்
  சர்வம் ஸ்டாலின் மயம் மருதன் கிழக்கு பதிப்பகம் ஜோசப் ஸ்டாலின், சோவியத் ரஷ்யாவை எப்படி வளர்த்தார், எதிரிகளை உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து ஒழித்தது எப்படி, உண்மையில் அவர் சர்வாதிகாரிதானா என்பதை நூல் விளக்கிச்சொல்கிறது. 139 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். நூலின் தொடக்கத்தில் ட்ராட்ஸ்கி என்பவரை உளவுத்துறை அதிகாரி, ஐஸ்கத்தியால் குத்திக் கொல்கிறார். ஏன் அப்படி கொன்றார் என்ற கேள்வியோடு தொடங்குகிறது கட்டுரைநூல், ஒரு புனைவு நூலைப்போல கட்டுரை நூலை கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், நூல் இறுதிவரை அப்படி செல்லவில்லை. நூலில் ஸ்டாலின் செய்த போராட்டங்கள் ஓரளவுக்கு கூறப்பட்டுள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதை தனியாக பிரித்து விவரித்திருக்கலாம். அவர் எழுதிய நூல்களோ, பேசிய உரைகளோ, அல்லவது அவரைப்பற்றி உள்நாட்டில், வெளிநாட்டில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியோ கூட எந்த குறிப்புகளும் இல்லை. ஸ்டாலின் மரணம் கூட சட்டென நடந்தது போன்று இருக்கிறது. எதற்கு இந்த அவசரம் என நூலாசிரியர் மருதன்தான் விளக்கி கூறவேண்டும். லெனின், துப்பாக்கியால் சுடப்பட்டு 1924ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். அதற...

எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி!

படம்
  எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி! மகான்காளி ராஜசேகர், மாதுரிமா இயக்கம் கார்த்திகேயன் இசை சின்னா என்கவுன்டர் சிறப்பு அதிகாரியான மகான்காளி, நாயக், இரு மாஃபியா தலைவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தனது குடும்பத்தை இழக்கிறார். பிறகு தனது குழுவை பலி கொடுக்கிறார். இறுதியாக தன்னையே தியாகம் செய்து எதிரிகளை அழித்தொழிக்கிறார். மேற்சொன்ன அம்சங்கள்தான் படத்தில் காட்டப்படுபவை. ராஜசேகரின் படங்கள் பெரும்பாலும் காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துபவை. நீதிமன்றத்திற்கு நியாயம் பெறும் சமயத்தில் சூது நிகழ்ந்துவிடும். பிறகு என்ன மீண்டும் துப்பாக்கியை தூக்கி நியாயத்தை நிலைநாட்டுவார். இவரது மகான்காளி என்ற இந்தப்படம் பார்த்து முடித்தபிறகு, மனதில் ஒரு அமைதியின்மை, விரக்தி பரவுகிறது. ஒருவகையில் காட்சி ரீதியாக சொல்ல நினைத்த விஷயங்களை கூறிவிட்டார் எனலாம். படத்தின் திரைக்கதையில் நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதாவும் பங்களித்திருக்கிறார். படத்தில் மாதுரிமாவின் பங்கு பாடல்களுக்கு மட்டும்தான். அவரை எப்படி பயன்படுத்துவது தெரியாமல், மானபங்கம் செய்யும் காட்சிகளில் ...

முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கும் அமைச்சர், காவல்துறை உயரதிகாரி, தீவிரவாதி ஆகியோரைக் கொன்றால் வாய்மை வென்றுவிடும்!

படம்
 சத்யமேவ ஜெயதே தெலுங்கு ராஜசேகர், சிவாஜி, சஞ்சனா, ஷெரில் பின்டோ இசை சின்னா இயக்கம் ஜீவிதா அரசு மருத்துவர் இக்பால் அன்சாரி என்பவர், தீவிரவாதி என குற்றம்சாட்டப்படுகிறார். அவரை குறிப்பிட்ட இடத்திலுள்ள நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதற்கு நாயகன் உட்பட சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து குழுவை தயாரிக்கிறார்கள். அக்குழு, இக்பாலை நீதிமன்றத்தில் சமர்பித்ததா இல்லையா என்பதே கதை. மீண்டும் என்கவுண்டர் அதிகாரியாக ராஜசேகர் நடித்திருக்கிறார். இம்முறை படத்தில் சிவாஜிக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் ஷெரில் பின்டோவுக்கும் பாடல் காட்சிகள், கிளு கிளு காட்சிகள், காமெடி ஆகியவை உண்டு. குழுவிலுள்ளவர்களின் குடு்ம்பங்களை காட்டும்போதே, இவர்களை கொத்துக்கறியாக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. அதேதான் அதேதான். படத்தில் பாஸ்டர்ட் என்ற கெட்ட வார்த்தையை மட்டும் நாயகன் எத்தனை முறை சொல்லியிருப்பார்  என்று எண்ண முடியாது. அத்தனை முறை விரக்தி அடைகிறார். கையாலாகாத்தனம், இயலாமையில் அலறிக்கொண்டே இருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கென இருக்கும் ஒரே ஆன்மா சிவாஜி மட்டுமே. காதல் என்ற பெயரில் மகாலட்சுமி...

தொடர்ச்சியாக கொல்லப்படும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் !

படம்
  பூட் சவுண்ட் சுரேஷ் கோபி, பாலா, ஹனி ரோஸ் மலையாளம் பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி, வீட்டுக்கு போகும் வழியில் கழுத்து அறுத்து கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க நாயகன் வருகிறார். கூடுதலாக, ஓய்வு பெற்ற இன்னொரு போலீஸ்காரரின் மகள் காணாமல் போகிறாள். இந்த வழக்கையும் நாயகனே விசாரிக்கிறார். அதில் அவருக்கு நிறைய உண்மைகள் தெரிய வருகிறது. கேரளத்தில் அவசரநிலை காலகட்டத்தில் காவல்துறை செய்த வல்லுறவு, கொலைகளை பின்னணியாக கொண்ட கதை. அவசர நிலையை சாதகமாக பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் குடும்பத்தை அழிக்கிறார்கள். பத்திரிக்கை நடத்துபவரின் மனைவியை வல்லுறவு செய்கிறார்கள். அவரது மகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்தில் கொல்லப்படுகிறாள். பத்திரிகையாளர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பல்வேறு போலி வழக்குகள் வழியாக இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. கல்லூரி படிக்கும் மகள் காணாமல் போன செய்தியை ஒய்வுபெற்ற அதிகாரி, நாயகனுக்கு கூறுகிறார். நாயகனும் அதை ஏற்று மகளை தேடித்தருவதாக குறிப்பாக உயிரோடு... என்று கூறுகிறார். மகளைப் பற்றிய தகவல்களை விசாரித்தால், எந்த துப...

வன்முறைப் போராட்டத்திற்கான மூல காரணம்!

      வன்முறையைக் கொண்டாடும் திரைப்படங்கள் உலகமெங்கும் உண்டு. ஆங்கிலத்தில் வந்த திரைப்படங்களை அடியொற்றி இப்போது இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட அத்தகைய படங்களை உள்ளூர் மொழிகளில் உருவாக்குகிறார்கள். பழிவாங்குவதை, தங்கத்தின் மீது கொண்ட பேராசையை தாயின் கனவு, அண்ணனின் லட்சியம், தம்பியின் வாழ்க்கை என ஏதோ கதை சொல்லி கோடரி, கத்தி, வாள், துப்பாக்கி என பயன்படுத்தி ரத்தம் தெறிக்க கொல்கிறார்கள். இதில் புராண கோட்டிங் அடித்து தாழ்த்தப்பட்ட மனிதர்களைக் கொன்று அவர்கள் மீது சிறுநீர் கழிப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில்லை. பார்ப்பனன் தொந்தி வைத்துக்கொண்டு விளையாட்டை விளையாடுகிறான் என்பதை எதிர்க்கட்சிக்காரர் கூறிவிட்டார் என அதை ஊடகங்கள் ஊதிவிட்டு வெறுப்பை வளர்த்து வருகின்றன. இங்கு இறப்பவன் யார், அவனுக்கு சமூகத்தில் என்ன அந்தஸ்து, என்ன மதத்தைக் கடைபிடிக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்தே அவன் சாவுக்கான சமதர்ம நீதி தீர்மானிக்கப்படுகிறது. இப்படியான நிலப்பரப்பில் நாம் வன்முறையை கையில் எடுப்பதைப் பற்றி பேசுகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனன், அவனுடைய ஆதரவு பெற்ற பொறுக்கித்தின்னும் இடைநிலை ச...

பழகும் பெண்களை சூனியக்காரியாக நினைக்கும் கொலைகாரனை பிடிக்க உதவும் பூச்சி வல்லுநர்!

படம்
  பழகும் பெண்களை சூனியக்காரியாக நினைக்கும் கொலைகாரனை பிடிக்க உதவும் பூச்சி வல்லுநர் இன்செக்ட் டிடெக்டிவ் 2 சீசன் சீன தொடர் யூட்யூப் பூச்சி வல்லுநர், தாய்லாந்துக்கு படிப்பதற்காக செல்கிறார். அங்குதான் அவரது காதலியும் கூட வேலை செய்வதற்காக வந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து வழக்குகளை புலனாய்வு செய்து தாய்லாந்து இன்ஸ்பெக்டரை சூப்பரிடெண்ட் லெவலுக்கு உயர்த்தி புரமோஷன் வாங்க வைப்பதே கதை. தொடரில் முக்கியமான கதை, தொடர்கொலைகளை செய்யும் சிசோபெரெனியா வந்த பிணக்கூராய்வு மருத்துவர் பற்றியது. அவர்தான் காவல்துறைக்கான பிணக்கூராய்வு செய்பவர். அவரை தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு கொலையாளி என காட்டிவிடுகிறார்கள். முதன்மை பாத்திரங்கள் அவரை கொலையாளி என எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே முக்கியமான திருப்புமுனை.  இந்த பாகத்திலும் நாயகன், நாயகிக்கு காதல் காட்சிகள் ஏதும் கிடையாது. முத்தம் கொடுக்கும்படி சூழல் இருந்தால், இன்ஸ்பெக்டர் நண்பன் அங்கு வந்துவிடுவான். நாயகன் ஜின்டாங் அல்ல ஜின்டியாங் என மாற்றி வாசியுங்கள். தவறாக தட்டச்சு செய்துவிட்டேன். ஜின்டியாங், ஜின்லிங் எப்போதும் போல காதல் வளர்க்க...

பூச்சி, தேனீக்களை வைத்தே கொலைவழக்கில் துப்புதுலக்கும் பூச்சி வல்லுநர்! - இன்செக்ட் டிடெக்டிவ் 1

படம்
    இன்செக்ட் டிடெக்டிவ் சீன தொடர் யூட்யூப் ஓவியத்தை அடிப்படையாக கொலை வழக்குகளை பார்த்தோம் அல்லவா.. அதேபோல, இந்த தொடர் பூச்சிகளை, புழுக்களை, எறும்புகளை அடிப்படையாக கொண்டது. நாயகனுக்கு மோசமான இறந்தகாலம் உள்ளது. அப்பா கார் விபத்தில் இறந்துபோகிறார். அம்மா, வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கிறார். பாட்டிதான் நாயகன் ஜின்டிங்கை வளர்க்கிறார். மாமா சூ, ஆதரவாக இருக்கிறார். உண்மையில் வங்கி நடத்திய அப்பாவின் விபத்துக்கு யார் காரணம், அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது எப்படி என்பதற்கான காரண காரியங்களை தொடர் தேடுகிறது. முதல் எபிசோடில், ராட்டினம் ஒன்றில் மாணவர் நாக்கை கடித்தபடி வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறார். அங்கு சென்ற காதலர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இறந்தவர் ஸ்மார்ட் வாட்ச் வழியாக நண்பர்கள் சிலருக்கு போன் செய்திருக்கிறார். அதில் ஒருவர்தான் பூச்சிகளை ஆராய்ச்சி செய்யும் நாயகன் ஜின். இன்ஸ்டிடியூட்டில் பிஹெச்டி படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ஜின் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது. விசாரிக்க போகும்போது அறையை மூடி தேனீக்களைப் பற்றிய ஆராய்ச்சியை செய்துகொண்டிருக்கிற...

ஓவியனின் பார்வையில் குற்ற உலகம்!

படம்
             அண்டர் தி ஸ்கின் சீன தொடர் 24 எபிசோடுகள மகத்தான திறமையான ஓவியன். கல்லூரி வயதில் போலீஸ்காரர் கொல்லப்படுவதற்கான ஓவியத்தை வரைந்து கொடுத்து சர்ச்சையில் சிக்குகிறான். நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றாலும் கொலைக்கும்பலுக்கு மறைமுகமாக போர்ட்ரைட் ஓவியம் வரைந்து கொடுத்தது, அவனுக்கு எதிர்பார்த்திராத துயரத்தை அளிக்கிறது. அதுவரையில் அவன் கண்காட்சிக்கென வரைந்த ஓவியங்களைக் கூட தீவைத்து எரித்துவிட்டு, காவல்துறையில் பணிக்கு சேர்கிறான். அங்கு ஸ்கெட்ச் ஆர்டிஸ்டாக வேலை செய்கிறான். தொடக்கத்தில் கொலைக்கும்பலுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்து கொடுத்தான் என்பதற்காக கேப்டன் டுசெங் அவனை மதிப்பதில்லை. ஆனால் கொலை வழக்குகளை கண்டுபிடிப்பதில் சென் யிக்கு உள்ள புத்திசாலித்தனம், ஈடுபாடு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. பல்வேறு வழக்குகளோடு, தனது வாழ்க்கையை மாற்றிப்போட்ட கேப்டன் லீ வெய் வழக்கிலுள்ள குற்றவாளிகளை எப்படி பிடித்தான் என்பதுதான் கதை. தொடரின் நாயகன் ஓவியன் என்பதால், வழக்குகள் அனைத்தும் ஓவியம் சார்ந்த அடிப்படையைக் கொண்டுள்ளன. அதாவது கொலையாளி உள் அலங்கார வடிவமைப்பாளர், க...

ஹீரோவும் நான்தான் வில்லனும் நான்தான் - எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த துயரச்சம்பவம்

படம்
  ஆன்சியன்ட் டிடெக்ட்டிவ் சீன தொடர் யூட்யூப் ஒருவர், தான் செய்யும் செயல் காரணமாக இன்னொரு தரப்பிற்கு மாபெரும் வில்லனாக மாறியிருப்பார். ஆனால், அப்படி செய்த செயலை குறிப்பிட்ட பாத்திரம் மறந்திருக்கும். அல்லது அதைப்பற்றி பெரிதாக கவனம்கொண்டிருக்காது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக விஷயம் தெரியவரும்போது, தன்னுடைய தவறை உணர்ந்து அதை சரிசெய்துகொள்ள முயலும். ரவி மரியா இயக்கிய மிளகா படத்தின் கதை இதையொட்டியது. ஆன்சியன்ட டிடெக்ட்டிவ் தொடரின் மையமும் கூட இத்தகையதே. முதல் காட்சியில், உணவகம் காட்டப்படுகிறது. அங்கு நால்வர் இருக்கிறார்கள். அதில் ஒருவரின் கைகளை கட்டி கைதி போல வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே அவரை தங்க புத்தர் சிலை எங்கே என விசாரிக்கிறார்கள். இவர்களது மேசை அருகே வெள்ளுடை அணிந்த இன்னொருவர் அமைதியாக நடப்பதை கவனித்தவாறே நூடுல்ஸ் உண்டுகொண்டிருக்கிறார். இந்த உணவகத்திற்கு ஆறடி உள்ள இன்னொரு வீரர் கத்தியோடு வருகிறார். விசாரணையில் கைகள் கட்டப்பட்டவர், நான் சிலையை திருடவில்லை என்று சாதிக்கிறார். அப்போது வெள்ளுடை அணிந்தவர், கைகளை கட்டப்பட்டவருக்கு ஆதரவாக பேசுகிறார். குற்றவாளி அவர்களில் ஒருவர் ...

பிச்சைக்காரன், பேராசையும் கொலைவெறியும் கொண்ட பணக்காரர்கள் வாழும் அரண்மனைக்குள் நுழைந்தால்....

படம்
      பிளடி பெக்கர் தமிழ் இயக்கம் சிவபாலன் பிச்சைக்காரர் ஒருவருக்கு மாளிகை ஒன்றில் சாப்பாடு இலவசமாக போடுவதைச் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைபவர், சொத்துப்பிரச்னையில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடுகிறார். உண்மையில் அவர் எதற்கு அங்கு சென்றார், உயிர்பிழைத்து வெளியே வந்தாரா என்பதே கதை. படத்தின் தலைப்பு பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. படத்தில் அனைத்தும் உள்ள பணக்காரர், எதுவுமே இல்லாத பிச்சைக்காரன் என இரண்டு அதீத நிலைகள் காட்டப்படுகின்றன. இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் தாக்கம் பெற்றது என ஒருசாரார் கூறினர். இருக்கலாம். மறுக்க முடியாது. படத்தை தயாரித்த இயக்குநர் நெல்சனே அமெரிக்க டிவி தொடர்களால் உந்துதல் பெற்று காட்சிகளை அமைப்பவர்தான். அப்போது அவரின் மாணவரான இப்பட இயக்குநர் எப்படி மாறுபட்டு இருப்பார்? கடினமாக உழைத்தால் பணக்காரராகிவிடலாம் என்று நினைப்பதையே படம் பகடி செய்கிறது. ஒருவர் உழைப்பது சரி. ஆனால், தான் செய்வது சரி. தனக்கு கீழே சிலர் இருக்கிறார்கள் என மனநிம்மதி பெறுகிறார். சிலசமயங்களில் அதை சொல்லிக்காட்டவும் வன்ம...