இடுகைகள்

அரிசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணுமாற்ற அரிசியால் மாட்டிக்கொண்ட இந்திய அரசு!

படம்
  மரபணுமாற்ற பயிர் அண்மையில் பிரான்சில் அரிசிமாவு வணிகர், இந்தியாவிலுருந்து நொய்யரிசி 500 டன்களை வாங்கியிருக்கிறார். அதில் மரபணுமாற்ற சமாச்சாரங்கள் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த அரிசியை ஏற்றுமதி செய்தவர், மகாராஷ்டிராவை சேர்ந்த வணிகர் ஒருவர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற பொருட்களை விற்பதற்கு பயன்படுத்த தடை உள்ளது. எனவே, இந்திய வணிகர் மரபணு மாற்ற பொருட்கள் இல்லை என்று சொல்லி அதற்கான சான்றிதழை வாங்கி இணைத்துத்தான் அனுப்பியிருக்கிறார். அப்படியிருந்தும் சோதனையில் மரபணுமாற்ற பொருட்கள் சிக்கியிருக்கின்றன.  அரிசியை அரைத்து மாவாக்கி அதனை மிட்டாய், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பேக்கரி உணவுகளை தயராக்கின்றனர்.  இந்தியா அரிசி விற்பனையில் முன்னிலை வகிக்கும் நாடு. கடந்த ஆண்டு 18 டன்களுக்கு தானியங்களை விற்று 65 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. இதில் வருமானம் பெற்றுத்தந்தது பாஸ்மதி அரிசிதான். இந்த அரிசியை மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்கள் நேபாளம், வங்கதேசம், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்கின்ற

உலகின் முக்கியமான நெற்பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள்!

படம்
நெற்பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆசிய நாடுகளில் பெருமளவு நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரிசி வகை உணவுகள் இங்கு அதிகம்.  ஆனால் காலப்போக்கில் பல்வேறு மரபு அரிசி வகைகளில் மகசூல் குறைவு , சத்துக்கள் பற்றாக்குறைவு, பருவநிலை வேறுபாடுகள் ஆகிய பிரச்னைகள் எழுந்தன. இதனால், பல்வேறு நாடுகளின் அரசும் இதற்கான ஆராய்ச்சிக்கு உதவின.  அரிசியில் பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளை மரபணு மாற்ற முறையில் சேர்க்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். இப்படி கிடைத்த அரிசி ரகங்களால் உணவு உற்பத்தி அதிகரித்தது. இன்றும் அரிசியில் பல்வேறு விட்டமின்களைச் சேர்க்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி ஆராய்ச்சி செய்து வரும் முக்கிய நிறுவனங்களைப் பார்ப்போம்.  சுவிட்சர்லாந்து ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Swiss Federal Institute of Technology (Zurich))  1855ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம்.  உணவுப்பயிர்களில் இரும்புச் சத்தைச் சேர்த்து அதனை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மாற்ற முயன்று வருகிறது. இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து மற்றும்  பீட்டா

எப்படி சாப்பிடுவது? - டயட் முறைகள்

படம்
pixabay எப்படி சாப்பிடுவது? காலை எட்டுமணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டுமணி என மூன்று வேளை உணவு சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகி இருக்கும். ஆனால் இப்படி சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை. இந்த சுழற்சியில் அனைவரது உடலும் இயங்குவதில்லை என்பது உங்களுக்கு நோய் வந்தபிறகுதான் தெரியவரும். இரவுப்பணிகளுக்கு செல்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு பிரச்னைகள் ஏற்படும். என்ன காரணம் தெரியுமா? நாம் ஆதிகாலத்தில் இருந்தே சூரியனை மையமாக கொண்டு வாழ்ந்து பழகிவிட்டோம். இரவு என்பது சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டைக்காலம். மனிதர்கள் பகலில் வேட்டையாடி உண்டுவிட்டு குகையில் பதுங்கிவிடுவதே வழக்கம். இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு ஐ.டி பணி, நாளிதழ் பணி என கிடைக்கும்போது அது முதலில் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் நாளடைவில் உடலில் வளர்சிதை மாற்றம் மாற்றமடையத் தொடங்கும். இதனால் கன்னம் லேஸ் பாக்கெட் போல உப்பலாக தோன்றும். வயிற்றில் பீர் பெல்லி உருவாகும். ஆளே நவரச திலகம் பிரபு போல நடக்கத் தொடங்குவீர்கள். இதெல்லாம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றின் தொடக்க நிலை ஆகும்.  க