இடுகைகள்

தேசத்தந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் முக்கிய பிரச்னைகளுக்கு காந்தியத் தீர்வுகள்!

படம்
பின்டிரெஸ்ட் இந்தியாவின் பிரச்னைகளும் - காந்தியத் தீர்வுகளும்! இந்தியா சுதந்திரமடைந்தபோது,  அதனுடன் பல்வேறு சமஸ்தானங்கள் ஒன்றாக இணைந்தன. பின்னர்தான் அரசியலமைப்புச் சட்டப்படி ,மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. இவையெல்லாம் நிர்வாகரீதியானவையே. அன்றிலிருந்து இன்றுவரை நிலப்பரப்பு, கலாசாரம், மக்கள் என்று பார்த்தால் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய மாநிலங்கள் பலவும் தமக்கிடையே உள்ள இயற்கை வளங்களை, பல்வேறு பூசல்களுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றன.  அரசியல்கட்சிகள், இதனைப் பயன்படுத்திக்கொள்வதால் மாநில பிரச்னைகள் தேசிய அளவிலான பிரச்னைகளாக மாறுகின்றன. ஆட்சியாளர்கள், மாநில நலன் சார்ந்த பார்வையில் முடிவு எடுக்க நேரிடுகிறது. அப்போது, மாநிலங்களுக்கிடையே கடும் பிரிவினை போராட்டங்கள் மூளுகின்றன. சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிரம்மபுத்திரா நதி மற்றும் கர்நாடகம், தமிழகத்திற்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு, இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கு காந்தியடிகள், நீதிமன்றத்தை நாடுவதும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்வதையும்  தனது தீர்வாக முன்வை