இடுகைகள்

மக்காவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி

படம்
  harry harlow ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.  இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.  ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்பது நிரூபணமானது
படம்
  இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய பாலூட்டி! இந்தியாவின் விலங்கியல் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் (ZSI), புதிய பாலூட்டி இனத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். வெள்ளைக் கன்ன மக்காவ் குரங்கு (White Cheeked Macaque)                                           தான் அது. சீனாவில் 2015ஆம் ஆண்டு இந்த மக்காவ் குரங்கினத்தைக் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவில், அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சா மாவட்டத்தில் மக்காவ் குரங்கினத்தை அடையாளம் கண்டிருக்கிறார்கள். சீனாவுக்கும் இந்த இடத்திற்குமான தொலைவு 200 கி.மீ. ஆகும்.  இதுபற்றிய கட்டுரை, சர்வதேச ஆய்விதழான அனிமல் ஜீனில் வெளியாகியுள்ளது.  ”இப்போது நடந்துள்ள கண்டுபிடிப்பு என்பது தற்செயலான விபத்து. இமாலயத்தில் உள்ள தாவர இனங்கள், விலங்கினங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். அதில்தான் குரங்கினத்தைப் பற்றி தகவல் கிடைத்தது” என்றார் அறிவியல் ஆராய்ச்சியாளரான மருத்துவர் முகேஷ் தாக்கூர்.  இந்த ஆய்வுக்குழுவினர் அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மக்காவ் குரங்கினத்தையும், சிவப்பு பாண்டாவையும் தேடி வந்திருக்கின்றனர். ஆய்வில் கிடைத்த கழிவு, தோல் மாதிரிகளை ஆய்வகத்தில் டிஎன்ஏ சோதன