ஸிசோபெரெனியாவில் காதில் கேட்கும் குரலால் கொலை செய்தவர்கள்!
அமிஷ் எழுதிய சிவன் முத்தொகுதி நூலில் விகர்மா என்ற கருத்தை முன்வைக்கிறார். இதை தீண்டாமை என முற்போக்கு ஆட்கள் பொருள் கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. அதாவது, சமூகத்தில் முழுமையான செல்வங்களோடு ஊனப்படாமல், வாரிசுகளை இழக்காமல், கணவனை இழக்காமல் வாழ்பவர்கள் அரசின் பொது இடங்களில் புழங்கலாம். மேற்சொன்னபடி இல்லாமல் எதிர்மறையாக ஊனமானவர்கள், உறவுகளை இழந்த ஆதரவற்றவர்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோர் விகர்மா என அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் வெளியே செல்வதற்கான தனிப்பட்ட நேரத்தை அரசு குறிப்பிடும். அப்போது மட்டுமே அவர்கள் வெளியே புழங்கலாம். மற்ற நேரங்களில் மூடப்பட்ட அறைகளில் தனியாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அரசு மானிய உதவிகளை வழங்கும். சிவன் இதை ஏன் என கேள்வி கேட்கும்போது, சமூக வாழ்க்கையை வாழ முடியாதவர்கள், உறவுகளை இழந்தவர்கள், குழந்தை இல்லாதவர்கள் ஆகியோர் மனதில் வருத்தம், சோகம் ஆகிய உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள். இவர்களை பொது இடத்தில் புழங்கவிட்டால் ஆபத்துகளை ஏற்படுத்துவார்கள். பிறரின் மகிழ்ச்சியை குலைப்பார்கள் என அரசர் காரணம் சொல்லுவார். சிவன் எதற்கு இந்த சமூகத்தீமைக்காக இந்தளவு பொங்குகிறார் என்றால