இடுகைகள்

நேர்காணல்- சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"மக்களின் ரத்தநாளங்களில் வெறுப்பு விஷம்போல ஏற்றப்படுகிறது" - ஹர்ஷ் மந்தர்

படம்
முத்தாரம் நேர்காணல் ஹர்ஷ் மந்தர் , கர்வான் இ மொகபத் இயக்க தலைவர் தமிழில் : ச . அன்பரசு முன்னாள் அரசு அதிகாரியும் , சமூக செயல்பாட்டாளருமான ஹர்ஷ் மந்தர் , வெறுப்பு அரசியல் குற்றங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாக்க கர்வான் இ மொகபத் அமைப்பைத் தொடங்கியுள்ளார் . கர்வான் இ மொகபத்தின் நோக்கமென்ன ? முஸ்லீம் தாய்கள் தங்கள் மகனிடம் சலாம் அலைக்கும் என்று பொது இடங்களில் கூறாதே என்று எச்சரிக்கும் அளவுக்கு இன்று முஸ்லீம்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் . தலித்துகள் , கிறிஸ்தவர்கள் , முஸ்லீம்கள் தனியாக இல்லை . அவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்று கூறும் ஒற்றுமையான முயற்சி மற்றும் செயல்பாடுதான் இந்த இயக்கம் . அநீதிக்கு எதிரான மக்களின் மௌனம் பற்றி ..? நான் தலித்துமல்ல ; முஸ்லீமுமல்ல எனும்போது எதற்கு கவலைப்படவேண்டும் என்ற எண்ணமும் , பயமும் , கூடுதலாக பிற இனத்தவருக்கு எதிரான இனவெறுப்பும் இதற்கு முக்கியக்காரணம் . கத்துவா நிகழ்விற்கான நீதி முயற்சி சிறிது நம்பிக்