இடுகைகள்

முரடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை திகிலில் உறைய வைத்த கொலைகாரர்

படம்
 புத்திசாலியான குற்றவாளி முடிஞ்சா என்னைப் பிடி என சொல்லிவிட்டு குற்றங்களை செய்து விட்டு ஓடுபவர்களைத்தான் புத்திசாலி என காவல்துறை ஏற்கும். இதில் டாக்டர் ஹெச் ஹெச் ஹோல்ம்ஸ் என்பவரை இப்படிக் கூறலாம். இவர் ஸ்வீனி டாட் என்பவரை தனது ரோல்மாடலாக வரித்துக்கொண்டு வேலை செய்தார்.  ஸ்வீனி டாட் என்பவர் நாவிதராக வேலை செய்து வந்தார். அவரைப் பொறுத்தவரை முடிவெட்டுவது, ஷேவிங், அண்டர் ஷேவிங் என்பதெல்லாம் ஹாபி. முழுநேர வேலை, சேரில் உட்கார்ந்தவர்கள் அப்படியே கீழேயுள்ள அறைக்கு லிவரைத் தள்ளி கொண்டுபோய் சேர்த்து கொல்வதுதான். பிறகு அவர்களின் பணத்தை திருடிக்கொண்டு உடலை அழித்துவிடுவது.  இவரைப் பற்றிய செய்தியைப் படித்த ஹோல்ம்ஸ் உடனே தனது வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார். இவர், வேடிக்கை மற்றும் லாபத்திற்காக கொலைகளை செய்யத் தொடங்கினார். ஹோட்டல் ஒன்றைக் கட்டி அதில் தான் கூட்டி வரும் இரைகளை சித்திரவதை செய்வதற்கான அறைகளை அமைத்தார். அலறல் கேட்காத சவுண்ட் ப்ரூப்  வசதி, சித்திரவதை அறைகள்,  உடலை வேக வைக்கும் ஸ்டவ் என வேற லெவலில் அமைத்தார். தனது காதலிகள், மனைவிகள், வணிக பங்காளிகள், குழந்தைகள் என ஏராளமானோரை தடயமே இல்லாமல் கொன்