இடுகைகள்

மின்சாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தண்டனை கொடுப்பதால் குழந்தைகளின் குணங்களை மாற்றிவிட முடியாது - பி எஃப் ஸ்கின்னர்

படம்
  உளவியலாளர்கள் வாட்சன், பாவ்லோவ் ஆகியோரது ஆய்வுகளை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டவர் பி எப் ஸ்கின்னர். குணநலன் ஆய்வுத்துறையில் முக்கியமான ஆய்வாளர். முன்னோடிகளின் ஆய்வுகளை மேலும் ஆழமாக்கிய பெருமைக்குரியவர். தனது ஆராய்ச்சி பற்றி புகழ்ந்து பேசி தன்னை புகழ் வெளிச்சத்தில் வைத்திருக்க முயன்றார். ரேடிகல் பிஹேவியரிசம் என்ற கொள்கையை உருவாக்கிய ஆய்வாளர். தொடக்கத்தில் கொள்கை பற்றி ஆர்வம் கொண்டு அதை எழுதவே நினைத்தார். ஆனால் பிறகுதான் ஆய்வுகள் பக்கம் ஆர்வம் கனிந்தது.  1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தார். நோக்கம் எழுத்தாளர் ஆவதுதான். ஆனால் படிப்பை முடித்தபோது எழுத்தாளர் ஆவதன் மேல் ஆர்வம் முழுக்க வற்றிவிட்டது. இவான் பாவ்லோவ், ஜான் பி வாட்சன் ஆகிய உளவியல் ஆய்வாளர்களின் படைப்புகளை படைத்து அவர்களை முன்மாதிரிகளாக கொண்டார். 1931ஆம் ஆண்டு ஹார்வர்டில் உளவியல் படிப்பில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1936ஆம் ஆண்டு மின்னசோட்டா பல்கலையில் பாடம் நடத்த தொடங்கினார். பிறகு 1946-47 ஆண்டுகளில் இந்தியா பல்கலையில் உளவியல் துறையை நிர்வாகம் செய்தார். 1948ஆம் ஆண்டு

வெறுப்பேற்றினால் கொலை செய்ய ரெடியாகும் நாயகி! ஜோல்ட் - கேட் பெகின்சோல்

படம்
  ஜோல்ட் 2021 - கேட் பெகின்சோல்  ஜோல்ட் ஆங்கிலம் யூட்யூப் விஆர் ஃபிலிம்ஸ் ஒரு குழந்தைக்கு இயல்பாகவே மூளையில் கார்டிசோல் என்ற வேதிப்பொருள் அதிகம் சுரக்கிறது. இதனால், அவளுக்கு யாராவது வெறுப்பேற்றுவது போல தோன்றினால், சீண்டினால் அவர்களை அடித்து உதைக்க தொடங்குகிறாள். சமூகமே ஏராளமான முட்டாள்களை கொண்டதுதான் என்பதால், அவளை வார்த்தையால், உடலால் சீண்டுபவர்களை விட்டுவைப்பதில்லை. அடித்து கை கால்களை முறிக்கிறாள். இதனால் அவளை மருத்துவர்கள் சோதித்து ஆய்வக எலி போல பாதுகாக்கிறார்கள். மனிதர்கள் இப்படியான வன்முறை எண்ணம் கொண்டிருந்தால், யார் வருகிறார்களோ இல்லையோ   சிஐஏ வந்துவிடும். அவர்கள்தான் நாயகி கேட் பெகின்சோலுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பணத்தை கொடுத்து வருகிறார்கள். கண்காணிக்கிறார்கள். அவளை தங்களது திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். இந்த நேரத்தில் நாயகி, அவர்களிடமிருந்து விலகிப் போகிறாள். தனக்கான வாழ்க்கையை தானே தேடுகிறாள். அந்த முயற்சியில் ஜஸ்டின் என்பவன் டேட்டிங் காதலனாக கிடைக்கிறான். அவனுடன் அவளுக்கு சிக்கல் ஏற்படாததால் உடலுறவு கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் பார்த்தா

பொருட்களை திரும்ப பயன்படுத்தும் வட்டப் பொருளாதாரம்!

படம்
  வட்ட பொருளாதாரம் ஒரு பொருளைப் பயன்படுத்திவிட்டு அதை அப்படியே பயன்பாடு முடிந்ததும் தூக்கிப்போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவது சூழல் பிரச்னையை தீவிரமாக்குகிறது. இதற்கு எதிரானது, வட்டப் பொருளாதாரம். அதாவது சர்குலர் எகனாமி. இக்கருத்துப்படி, மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து அதைப் பயன்படுத்துவது, பிறகு அந்தப் பொருளை மீண்டும் மறுசுழற்சி செய்வது ஆகியவை உள்ளது. இதனால், கழிவுகள் உருவாவது குறைக்கப்படும். இதன்மூலம் இயற்கை சூழல் கெடுவது பெருமளவு குறைக்கப்படுகிறது. லீனியர் எகனாமி முறையில் பொருட்கள் பயன்பாடு முடிந்ததும் நேரடியாக குப்பைக்கு சென்றுவிடுகிறது. அதில் பயன்பாடு ஏதுமில்லை. அந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதும் கடினம். இந்த முறையில்தான் பல நூற்றாண்டுகளாக தொழில் உற்பத்தி நடைபெற்று வந்தது. நன்னீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது தொடங்கப்பட வேண்டும். அல்லது நீர்த்தேவையைக் குறைத்து சிக்கனமாக செயல்படுவது முக்கியம். பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்காத வகையில் வாகனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

புதுமையான சிந்தனையால் சாதித்த நிறுவனங்கள் - டைம் வார இதழ்

படம்
  புதிய கண்டுபிடிப்புகள் - சாதித்த நம்பிக்கை தரும் நிறுவனங்கள் கியா அமெரிக்கா புதுமையான மின்வாகனங்கள் தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கியமான பிராண்டுகளில் ஒன்று.   இந்த கார் உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவில் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக விலை குறைந்த மின்வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை பெற்றுள்ளது.   2022ஆம் ஆண்டு பேட்டரியில் இயங்கும் இவி 6 என்ற கார் வர்த்தக ரீதியான நல்ல வரவேற்பும் விற்பனையும் பெற்றுள்ளது. இதன்மூலம் அமெரிக்க சந்தையில் டெஸ்லாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது கியா. 2027ஆம் ஆண்டுக்குள் பதினைந்து மின்வாகனங்களை தயாரித்து விற்க கியா திட்டமிட்டுள்ளது. இந்த பிராண்டை வாங்குபவர்களில் அறுபது சதவீதம் பேர், புதியவர்களே என்பது அதன் பெரும் பலம். கியா காருக்குள் புதிதாக நுழைந்து அதை பார்ப்பவர்கள், முந்தைய கியா காருக்கும் அதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்வார்கள் என கியா நிறுவனத்தின் அமெரிக்க இயக்குநர் சியூங்கியூ யூன் கூறினார். டாஸோ லிப்டன் டீ பிரிவு வணிகம் கடந்த மனிதநேயம் தேயிலை விற்கும் நிறுவனம்தான். ஆனால் அதை செய்யும் வழிவகையில் வேளாண்மை, இயற்கைக்கு

குப்பையிலிருந்து மின்சாரம் - கேரளாவின் முயற்சி வெல்ல வாய்ப்புண்டா?

படம்
  திடக்கழிவு மேலாண்மை  குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் லாபம், சவால்கள் என்னென்ன? கேரளா மாநில அரசு, கோழிக்கோட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.   இரண்டு ஆண்டுகளில் ஆறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நாட்டில் நூற்றுக்கும் மேலான குப்பையிலிருந்து மின்சாரம் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றில் இன்றும் செயல்பாட்டில் இருப்பவை மிகச்சிலதான். என்ன பயன்? மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மையைச் செய்வதோடு, மாநில மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள திடக்கழிவுகளில் 60 சதவீத கழிவுகள் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடியவை. அதாவது தானாகவே மட்க கூடியவை. 30 சதவீத கழிவுகள் உலர் கழிவுகளாக நிலத்தில் தேங்குகின்றன. 3 சதவீத கழிவுகளான கடினமான பிளாஸ்டிக், உலோகம், இ கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யமுடியும். மீதமுள்ள பிளாஸ்டிக், துணிகள் எல்லாமே மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளவை. இந்த கழிவுகளைப் பயன்படுத்தி

16. நிலக்கரி மதிப்பை உயர்த்திக்காட்டி, மின்கட்டணத்தை ஏற்றிய அதானி - மோசடி மன்னன் அதானி

படம்
  மின் நிறுவனங்களின்கொண்டாட்டம்  அரசும், அதானி குழுமமும் விசாரணையின்போது அரசு... அதானி குழுமம் மீது போடப்பட்ட வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் வழக்கு விசாரணை, அந்த அமைப்பின் அதிகாரிகளாலேயே நிறுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணையில் கிடைத்த உண்மையான ஆதாரங்களை புறக்கணித்து அதானி குழுமத்தின் மின் உற்பத்தி சார்ந்த பொருட்களை வாங்கியதில் எந்த மோசடியுமில்லை என கூறப்பட்டது. முழுமையான ஆதாரம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறினர். ‘’இஐஎஃப், ஏபிஆர்எல் ஆகிய நிறுவனங்கள் வினோத் அதானிக்கு தொடர்புடையவை என்றாலும் அதன் மதிப்பு, விலை என்பது பாதிக்கப்படவில்லை. பொருட்களின் விலை மதிப்பு ஏற்றம் பற்றிய குற்றச்சாட்டு எழுந்தாலும் அது உண்மையல்ல’’ (ப.278) என்று தீர்ப்பில் கூறப்பட்டது. வழக்கில் தொடர்புடைய, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். (ப.279) வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் மற்றொரு பிரிவு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். ஆனால் மேல்முறையீடு அமைப்பான செஸ்டாட், அதானி குழுமத்திற்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று தீர்மானமாக கூறிவிட்டது. (ப.87)  

15.அதிக மின்கட்டணத்தை மக்களிடம் வாங்க ஆடிய ஆட்டம்! - மோசடி மன்னன் அதானி

படம்
  தேசத்திற்காக அதானி உழைத்தபோது.. ஊழலைப் பற்றிய விசாரணை... ஊழலைப்பற்றிய காவல்துறை விசாரணை   விசாரணைக்காலம் 2006-2010 2011ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் குறைகேள் அதிகாரி, 466 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சுரங்க தொழிலை செய்பவர்கள் எப்படி பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி முறைகேடாக இரும்புத்தாதுவை கடத்துகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. (ப.12) மாநில அரசில் முறைகேடான ஆட்சி நிர்வாகம், ஊழல் ஆகியவற்றை விசாரிப்பதே குறைகேள் அதிகாரியின் வேலை. அவர் தயாரித்த அறிக்கையில், பெலகிரி அருகே உள்ள துறைமுகத்தை வாடகைக்கு எடுத்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனமும், கூடவே இன்னொரு நிறுவனமும் சட்டவிரோதமாக இரும்புத்தாதுவை அகழ்ந்து எடுத்து விற்பனை செய்ததாக கூறப்பட்டிருந்தது. பெலகிரி துறைமுகம், ஊழலுக்கான மைய இடத்தைப் பிடித்தது. மோசடியின் மதிப்பு அக்காலகட்டத்தில் 12 பில்லியன் டாலர்களாக இருந்தது. அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்துள்ளதோடு, முறையான ஆதாய உரிமைத்தொகைகளையும் வழங்கவில்லை. இதுபற்றி சுரங்க நிறுவனங்கள் எப்படி நுட்பமாக ஏமாற்றினார்கள் என்பதை த

அரசு உதவியின் மக்களே அமைக்கும் காற்றாலை!

படம்
  மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை! இங்கிலாந்தின் பிரிஸ்டல் அருகில் உள்ள மக்கள் குழுவினர், தாங்களே நிதி திரட்டி காற்றாலை அமைக்க முயன்றுவருகின்றனர். லாரன்ஸ் வெஸ்டன் என்ற பகுதியிலுள்ள மக்கள்தான் தாங்களே நிதி திரட்டி 150 மீட்டரில் காற்றாலையை அமைக்க முடிவெடுத்துள்ளனர். காற்றாலைக்கு  அரசின் எந்த உதவியும் பெறவில்லை.  4.2 மெகாவாட் திறனில் காற்றாலையை அமைக்கவுள்ளனர். இதில் 3 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். மிஞ்சும் மின்சாரத்தை பிறருக்கு விற்க முடிவெடுத்துள்ளனர்.  “மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை திட்டம் இது. இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது மக்களின் கரிம எரிபொருட்களால் ஏற்படும் வறுமை அளவு குறையும். ” என்றார்  லாரன்ஸ் வெஸ்டன் பகுதியில் வாழ்பவரான மார்க் பெப்பர்.  இப்பகுதி மக்கள் இப்படி தூய ஆற்றல் தரும் காற்றாலை திட்டத்தை உருவாக்க அரசை அணுகியுள்ளனர். ஆனால் பல்வேறு அனுமதி பெறுவது என திட்டம் நடைமுறைக்கு வருவது காலதாமதமாகிவந்திருக்கிறது. எனவே, மக்களே நிதி திரட்டி செய்துவிடலாம் என களமிறங்கிவிட்டனர். வணிகரீதியாக அமைக்கப்படும் காற்றாலைகளை விட மக்கள் குழுவாக இணைந்து நிறுவும் காற்றாலை  அதிக பயன்

நவீன மின் உடலியங்கியல் துறையை உருவாக்கியவர்! எமில் டு பாய்ல் ரேமண்ட்

படம்
எமில் டு பாய்ஸ் ரேமண்ட் ( Emil Du Bois-Reymond 1818 -1896) ஜெர்மனியின் பெர்லினில் எமில் பிறந்தார். அங்குள்ள பிரெஞ்சு கல்லூரியில் படித்தவர், மருத்துவக்கல்வியை பெர்லின் பல்கலைக்கழகத்தில் கற்றார். மருத்துவம், உடற்கூறியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். மருத்துவத்துறை பேராசிரியர் ஜோகன்னஸ் பீட்டர் தனது இளம் உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.  பேராசிரியர் ஜோகன்னஸ், உயிரினங்களில் உள்ள மின்னாற்றல் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்தார். எனவே, அவரைப் பின்பற்றி எமில் பட்ட ஆய்வுக்காக மின்சார ஆற்றல் உள்ள மீன்களை எடுத்துக்கொண்டார். 1858ஆம் ஆண்டு பெர்லினில் மருத்துவத்துறை பேராசிரியரானார்.  1867இல் பெர்லின் அறிவியல் அகாடமியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். நவீன மின் உடலியங்கியல் துறைக்கு உருவாக்கியவர். ஜெர்மன் பேரரசர், எமிலுக்காக மருத்துவக் கழகம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தார். 1877, நவ.6 ஆம் தேதி மருத்துவக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது.  1859-1877 காலகட்டத்தில் முல்லர்ஸ் ஆர்ச்சீவ் (Müllers Archiv)இதழில்  இணை ஆசிரியராக செயல்பட்டார்.  பிறகு காலமாகும்வரை,  ஆர்ச்சீவ் ஃபர் பிசியாலஜி (Archiv für Physiologie.)

பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா?

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட சுரங்கத்திலிருந்து மின்சாரம்!

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

இந்திய அரசின் தூய ஆற்றல் திட்டம்!

படம்
  தூய ஆற்றலை நோக்கி நகரும் இந்திய அரசு! இந்தியாவின் மின்சாரத் தேவை, 2020ஆம் ஆண்டிலிருந்து இருமடங்காகி உள்ளதாக உலக ஆற்றல் முகமை (IEA) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா, இன்றுவரையும் கூட மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நிலக்கரியின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. பெருந்தொற்று காரணமாக முடங்கிய நிலக்கரி சுரங்கப்பணிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. தொழில்துறையினரும் முழுவீச்சில்  இயங்கத் தொடங்கிவிட்டனர்.  இதனால் மின்னாற்றலின் தேவை அதிகரித்துள்ளது. 2040ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை, 5 சதவீதமாக உயரும் என உலக ஆற்றல் முகமை மதிப்பிட்டுள்ளது.  பிற ஆற்றல் ஆதாரங்களை விட நிலக்கரி சுரங்கங்களை அமைக்க குறைந்த முதலீடு போதுமானது.  தூய ஆற்றல் ஆதாரங்களான சோலார், நீர், அணுசக்தி ஆகியவை அதிக நிர்மாண முதலீடுகளைக் கொண்டவை. எனவே, மலிவான நிலக்கரித் தொழிலில் தொழிலதிபர்களின் முதலீடுகளும் அதிகம்.   மத்திய அரசு, 2021-22 காலகட்டத்தில் 3,793 கோடி ரூபாயை (மார்ச் 14 ) தூய ஆற்றல் ஆதாரங்களை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது. 2029 -30 காலகட்டத்தில் இந்தியாவின் தூய ஆற்றல்  பங்களிப்பு 40 சதவீதமாக இருக்கும் என மத்திய மின்துறை ஆணையத்