இடுகைகள்

அகிம்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீண்டத்தகாதவர்கள் பிறப்பும், வாழ்வும், இறப்பும் என்றும் மாறாதவை!

படம்
  நடைமுறையில் அகிம்சை இந்துக்களின் அகிம்சை முறை எனும் கருத்தில் வெளிநாட்டினர் எளிதாக ஏமாந்துபோய்விடுகிறார்கள். உலகிலுள்ள கொடூரமான வன்முறை கொண்ட சமூகம் இந்துக்கள்தான். இவர்கள்தான் அகிம்சையை உடைத்து எறிபவர்களாக இருக்கிறார்கள். ஒரு உயிரைக் கொல்வது, காயப்படுத்துவது தவறு, அதை செய்யக்கூடாது என்று தொடக்க கால உபநிஷத்தில் கூறப்படவில்லை. விலங்குகளை காயப்படுத்தக்கூடாது என பார்ப்பனர்களில் ஒரு பிரிவு கூறுகிறார்கள். ஆனால், அப்படி கூறுவதன் அர்த்தம் அந்த செயலை எதிர்ப்பதால் அல்ல. அவற்றை தேவையில்லை என்று கருதும் மனப்பான்மையால் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி ஆல்பெர்ட் ஸ்வெய்ட்சர் கூறினார். இந்துமதம், சகிப்புத்தன்மை, அகிம்சை ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது என கூறுவது கருப்பு பொய் ஆகும். இந்துக்களின் சகிப்பற்ற தன்மையே தீண்டாமையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. வரலாற்று ரீதியான ஆவணங்களில் இந்து மன்னர்கள், பௌத்தர்களை, சமணர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று உயர்சாதி இந்துவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியருமான ரோமிலா தாப்பர் கூறினார். வரலாற்று அடிப்படையில், அகிம்சை, சகிப்புத்...

இந்தியர்களுக்கு உண்மையை விட சாதியே பெரிது!

படம்
 இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினராக உள்ள பத்து சதவீதம் பேர் மீதியுள்ள பெரும்பாலான மக்களை வறுமையிலும், நோயிலும், அவலத்திலும் உழலுமாறு மாற்றியுள்ளதை வெளிப்படுத்தும் கட்டாயம் நமக்குள்ளது. வெளியே உள்ள உலகம், இங்குள்ள மூன்றாயிரம் ஆண்டு தீண்டாமை என்ற பிரச்னையை பற்றி அறியமாட்டார்கள். இதுபற்றிய உண்மைகளை நீங்கள் அறிய நேர்ந்தால், உங்களுக்கு கண்ணீர் வரக்கூடும். தடுக்காமல், அதை இனிமேல் சிந்தலாம். இந்தியாவின் மீது இரக்கம் கொண்டுள்ள வெளிநாட்டினர், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் உள்ளனர். தொன்மை குடியேற்ற நாடு என பெருமை கொண்ட இந்தியா எப்படி உலக நாடுகளிடையே நோயாளியாக உள்ளது என அவர்களும் புரிந்துகொள்ள உதவும்.   இந்திய அதிகார வர்க்கத்தில் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், கலாசார, மதவாத தலைவர்கள், சாமியார்கள், இந்துமத தலைவர்கள், நிதித்துறை நபர்கள், காந்தியின் அகிம்சையைப் போற்றுபவர்கள், உண்மை, சகிப்புத்தன்மை, நீதி, சுதந்திரம்,சமத்துவம் பற்றி பேசுபவர்கள் உள்ளடங்குவார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் உலகிலேயே சரியாக இயங்குவது எந்த நாட்டில் என்றால் இந்தியாவை ச...

சர்வாதிகார அரசுக்கு எதிரான போராட்டம்!

படம்
      மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள், வன்முறையை கையாளக்கூடியதாக கருதுகின்றன. போராட்டத்தில் அதுவும் ஒருவகை பாணி. மற்றபடி யாராவது தனிநபர்களை படுகொலை செய்வதோ, காவல்துறையை தாக்கி வீழ்த்துவதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை. பெருநிறுவனங்களை தாக்குவது கூட முதலாளித்துவத்தை எதிர்க்கும் கருத்தை வெளிப்படுத்த மட்டுமே. அதிலுள்ள ஊழியர்களை, தாக்குவதோ கொல்வதோ நோக்கமல்ல. மேலாதிக்கம் கொண்ட அரசுகள், தங்களை விமர்சிக்கும் தனிநபர்கள் அல்லது பத்திரிகை நிறுவனங்களை தாக்குவது, நெருப்பிட்டு எரிப்பது, இணைய இணைப்பை தடுப்பது என பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலை விடுக்கின்றன. ஆந்திரத்தில் ஆட்சிக்கு வந்த முன்னாள் நடிகர் தொடங்கிய கட்சி, தனது கட்சியை விமர்சித்த ஆங்கிலப் பத்திரிகையை குண்டர்கள் விட்டு தாக்கியது. அச்சு எந்திரங்களை அடித்து உடைத்தது. மேலதிகமாக, அங்குள்ள பெண் பணியாளர்களை மானபங்கம் செய்ய முயன்றது. இதுபோன்ற ஆட்களிடம் நீங்கள் அகிம்சை போராட்டம் சாத்தியம் என நினைக்கிறீர்களா என்ன? இதனால்தான் ரௌடிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பேசுவோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். இதில் வெளிப்படும் செய்தி பற்றி சொல்பவருக்...

மேலாதிக்கத்தை எதிர்க்கும் மக்கள் அதிகாரம்!

      தொழிலாளர் சங்கம் என்பது அடிப்படையில், அதிலுள்ள உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுதான் அதன் இயல்பான கடமையும் கூட. சிலர் சங்கத்தில் சேராமல் இருப்பார்கள். அதற்கு ஆலையின் மிரட்டல் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சங்கத்தின் தலைவர்கள் செய்யும் ஊழல், துரோகம், சங்க செயல்பாட்டில் நேர்மையின்மையே முக்கியமான சிக்கல்கள். போராட்டம் குறிப்பிட்ட துறையில் நடைபெற்றால், அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அப்பகுதி மட்டுமல்ல நாடு முழுக்கவே ஆதரவு தெரிவித்து இயங்கவேண்டும். அதாவது,அவர்களும் வேலைநிறுத்தம் செய்யவேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் வெற்றி பெறும். அரசியல் அதிகாரத்தை முற்றாக ஒருங்கிணைத்து ஒழித்தால்தான் நாம் எதிர்பார்த்த பயன்களைப் பெற முடியும். சர்வாதிகாரம், அடக்குமுறை, அதிகாரம் ஆகியவற்றை இங்கு இப்படிக் குறிப்பிடலாம். சொத்துக்களை உருவாக்குபவர்கள் தொழிலாளர்கள், அவர்கள் கையில் உள்ள பேரளவு பலத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். பியர் ஜோசப் புரவுட்தோன் என்பவர், நவீன மக்கள் அதிகார கருத்தை உருவாக்கியவர். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் உருவான தத்துவங்கள...

அகிம்சை வழியில் பிறருடன் கலந்துரையாட உதவும் நூல் - நான் வயலன்ட் கம்யூனிகேஷன்

படம்
          நான் வயலன்ட் கம்யூனிகேஷன்  ரோசன்பர்க் இந்த நூல், படிக்கும் வாசகர்களுக்கு வன்முறையில்லாத வகையில் எப்படி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. ஒருவரின் பேச்சு என்பது முன்முடிவுகள், தீர்ப்புகள், புகார் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை கூறவேண்டும் என கூறி அதற்கான எடுத்துக்காட்டுகளை விளக்குகிறது. இதில் முக்கியமான விஷயம் தனது தேவைகளை பிறரை புகார் கூறும் வடிவில் கூறுகிறோம் என பேசுபவருக்கும் தெரியாது. கேட்பவருக்கும் தெரியாது. இப்படியான சூழலில் நிறைய கருத்து முரண்பாடுகள், வன்முறை உருவாகிறது. அதை எப்படி தவிர்க்கலாம் என நூல் பல்வேறு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்குகிறது. பரிசு, தண்டனை என்ற வகையில் ஒருவரை வேலையை செய்ய வைப்பது எப்படி தவறாக முடியும் என்பதை நூல் விளக்கியுள்ளது முக்கியமான அம்சம். உளவியல் ரீதியாக பரிசு, தண்டனை விலங்குகளை பழக்கப்படுத்துவதற்கு உதவக்கூடும். ஆனால்  மனிதர்களுக்கு பெரிய பலன் அளிக்காது. சாதாரண பேச்சு, ஓரிடத்தில் சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டுகிறது. இன்னொரு இடத்தில் அனைவருக்குமான வளர்ச்சி என்ற கருத்தை வித்திடு...

பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை!

படம்
           அகிம்சை மொழி 3 பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை! புகழ்பெற்ற கோவிலில் லட்டு, மாட்டு கொழுப்பில் செய்யப்பட்டுள்ளது என கோவில் தலைவர் கூறுகிறார். இந்த வாசகத்தைப் பார்த்தால் அவர் என்ன எதிர்பார்க்கிறார், என்ன வேண்டுகிறார் என்றே தெரியாது. நெய், தாவர நெய்யில் செய்யப்படவேண்டுமா?, மாட்டுக் கொழுப்பில் செய்ததற்காக யாரையாவது தண்டிக்க வேண்டுமா என நிறைய கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆனால், எதற்கும் எந்த பதிலும் இல்லை. இவற்றை இழிவான மலிந்த அரசியல் நோக்கங்களை மையமாக கொண்டு கூறப்படும் குற்றச்சாட்டு என கூறலாம். பொதுவாக ஒன்றைக் கூறுவது என எதையும் கூற முடியாது. ஒருவர் ரயில் மெதுவாக போகிறது என சலிப்புடன் கூறுகிறார். அவருடன் அருகில் உள்ள மனைவி அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அதே வாக்கியத்தை மூன்று முறை உரக்க கூறுகிறார். உடனே மனைவி, இப்போது நான் என்ன செய்யட்டும்? கீழே இறங்கி தள்ளனுமா என்று கேட்டால், அந்த உரையாடலில் பிழை உள்ளது என்று அர்த்தமாகிறது. கணவர், ரயில் தாமதமாக சென்றால், விமானத்தை பிடிக்க நேரமாகிவிடும் என்பதைக் கூற நினைத்திருக்கலாம். ஆனால், அதை மன...

உணர்வு ரீதியாக பிறருக்கு அடிமையாக இருப்பது சுதந்திரத்தை தொலைத்துவிடும்!

      பிறரின் மகிழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளாதீர்கள்! லின்சிஸ்தான் என்ற நாட்டில் சமூக வலைதளத்திற்கு புதிய விதி நடைமுறைக்கு வந்தது. நீங்கள் பதிவிடும் கருத்தால் யாராவது ஒருவருக்கு மனம் புண்பட்டால் அபராதம், சிறைதண்டனை உண்டு என அரசு கூறியது. உண்மையில் நமது கருத்து அனைவருக்கும் மகிழ்ச்சியை தர முடியுமா, அதற்கு வாய்ப்புள்ளதா? நிச்சயம் இல்லை. முன்னமே கூறியபடி தண்டனையை கூறி, ஒருவரை மிரட்டி வழிக்கு கொண்டு வருவதில் இதுபோன்ற அறிவிப்புகள் வரும். நீங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிலேயே, நீங்கள் எடுக்கும் முடிவுகள், கூறும் கருத்துகளுக்கு பலரும் ஆமோதிப்பை வெளிப்படுத்த மாட்டார்கள். எதிர்ப்பார்கள். அப்படி சொல்லக்கூடாது. பேசக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் காழ்ப்பும் வெறுப்பும் கொண்ட சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்துகளுக்கு பூமாலை மட்டுமே கிடைக்குமா என்ன? மாட்டுச்சாணியைக்கூட அள்ளி வீசுவார்கள். அப்படியானால் என்ன செய்வது? விதிக்குட்பட்டு அரசின் விளம்பரம், பிரசார திரைப்படங்கள், அரசு ஆதரவு ஆட்கள் மட்டுமே சமூக வலைத்தளத்தில் இயங்க முடியும் என்பதே விதிகள் மூலம் அரசு மறைமுகமாக கூ...

உரையாடலில் தேவையை, உணர்வுகளை வெளிப்படுத்த கற்கவேண்டும்!

      நம் உணர்வுகளை வெளிப்படுத்த கற்க வேண்டும்! ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் இருக்கும். மனைவிக்கு கணவர் தான் பேசினால் அதற்கு பெரியளவில் எதிர்வினையோ, கருத்து கூறுதலோ செய்வதில்லை என வருத்தம். கோபத்தில் அவர், நீங்கள் எதையும் பேசாமல் சுவர் போல இருக்கிறீர்கள் என கூறிவிடுகிறார். இப்போது அங்கே என்ன விதமான உரையாடல் நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். பெரிதாக ஏதும் நடக்காது. கணவர் சுவர் என்ற விமர்சனத்தால் பாதிக்கப்பட்டு முன்னைவிட மயான அமைதியை கடைபிடிப்பார். மனைவிக்கு கணவரோடு உரையாடுவது இஷ்டம். அதை அவர் தனது உணர்வுநிலை இப்படி இருக்கிறது என கூறலாம். நீங்க என்னிடம் பேசினால் சந்தோஷமா இருக்கும் என கூறினால், அங்கு உரையாடல் நடக்கலாம். இந்த வாக்கியத்தை கவனித்தால், இதில் அவர் தனக்கு என்ன தேவை என்று கூறியிருக்கிறார். கணவர் மீதான விமர்சனம் ஏதுமில்லை. முன்முடிவுகள் இல்லை. மனைவி அவரது மனநிலையைக் கூட குறிப்பிடலாம். தவறில்லை. தேவையை வெளிப்படையாக கூறுவதில் தவறேதும் இல்லை. ஒரு நாடு இருக்கிறது. அங்கு மக்களுக்கான புதிய திட்டங்களை சிந்தனையாளர்கள் குழு உருவாக்குகிறது. அதை அ...

விழிப்புணர்வோடு உரையாடலுக்கான மொழியைத் தேர்ந்தெடுத்து பேச கற்க வேண்டும்

படம்
                We are dangerous when we are not conscious of our responsibility for how we behave, think, and feel.non violent communication பிறரிடம் பழகும்விதம், சிந்திப்பது, உணர்வது ஆகியவற்றில் விழிப்புணர்வு இல்லாத நிலையில், அபாயகரமானவர்களாக மாறுகிறோம். We can replace language that implies lack of choice with language that acknowledges choice.-non violent communication வாய்ப்புகள் பற்றாக்குறையாக உள்ள மொழியைத் தேர்ந்தெடுப்பதை விடுத்து, வாய்ப்புகளைக் கொண்ட மொழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் Our language obscures awareness of personal responsibility.-non violent communication தனிப்பட்ட பொறுப்புணர்வைக் கொண்ட அதை வெளிக்காட்டும் உரையாடல் மொழியைப் பேச பழக வேண்டும் நவீன காலத்தில் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டால் வருகிற நேரடி பதில் போல யாரும் எந்த பதில்களையும் கூறுவதில்லை. தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் கூட அதை ஏற்று பதில் கூற மறுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரது பள்ளிக்கு மாணவர்கள் குறைவாகவே வருகிறார்கள். அவர்களை அவராகவ...

மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது

படம்
              அகிம்சை வழி மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது பொதுவாக நாம் அனைவரும் வணிக திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். அதில் படம் முடியும் இறுதியில் நாயகர்கள், சிலரை அடித்து உதைக்கிறார்கள். அல்லது கொன்றுவிடுகிறார்கள். அடித்து உதைக்கப்படுபவர்கள், கொல்லப்படுபவர்கள் மோசமானவர்கள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என திரைப்படம் சித்திரிக்கிறது. பெரும்பாலான படங்களில் இதுவேதான் இறுதிக்காட்சியாக இருந்த காலமுண்டு. இதைப் பார்க்கும் பார்வையாளர்கள், நாயகர்கள் செய்யும் வன்முறையை, கொலையை நன்மைக்காகத்தான், நன்மையைக் காக்க இப்படித்தான் செய்தாக வேண்டும் என ஒருவாறு ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இப்படியான மனநிலை சமூகத்தில் வன்முறையை இயல்பான ஒன்றாக கருத வைக்கிறது. பேச்சாக, உளவியல் ரீதியாக, குடும்ப உறுப்பினர்கள் மூலமாக, இனக்குழுக்கள் இடையே, நாடுகள் இடையே மாறுபட்ட கருத்துகள், செயல்கள் வழியாக வன்முறை உருவாகிறது. வன்முறையை பாராட்டி ஏற்றுக்கொண்ட சமூகத்தில் முரண்பாடுகள் வழியாக எளிதாக வன்முறை உருவாகி வளர்கிறது. இதில் பயம்,...

வன்முறை வழியாக அகிம்சையைத் தேடும் கல்லூரி பேராசிரியர்!

படம்
       மனிதா மனிதா இயக்கம் பி கோபால் டாக்டர் ஆர் ராஜசேகர், நக்மா இசை ஏஆர்ஆர் இரண்டு ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் கல்லூரி பேராசிரியரான நாயகன் இறங்குகிறார். அது சாத்தியமானதா என்பதே கதை. படத்தில் ஒரே நல்ல விஷயம், ரஹ்மானின் இசைதான். வேறெந்த விஷயமும் சரியாக இல்லை. இயக்குநர் பி கோபாலைப் பொறுத்தவரை வணிக வெற்றிப்படங்களை சிரஞ்சீவி, பாலைய்யா ஆகியோருக்கு கொடுத்திருக்கிறார். விமர்சன ரீதியாக பார்த்தால் பெண்களை கவர்ச்சிப்பொருளாக, பாதுகாக்க வேண்டியவர்களாக, பிள்ளை பெறும் எந்திரங்களாக பார்க்கும் பார்வையை உருவாக்குகிற காட்சிகளை வசனங்களைக் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார். கல்லூரியில் பேராசிரியராக உள்ள நாயகனுக்கு, அப்பகுதியில் உள்ள ரவுடியிடமிருந்து சந்திக்க அழைப்பு வருகிறது. அதை மறுக்கிறார். இதனால், கல்லூரியில் அடிதடி தொடங்குகிறது. அந்த ரவுடியின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவளைக் கொல்ல மற்றொரு ரவுடி முயல்கிறான். அதற்கு நிறைய முன்கதைகள் உள்ளன. இதை அறியாத நாயகன் இருவரையும் சமாதானப்படுத்தி சமூகத்தில் அமைதியை ஏற்படுத்த நினைக்கிறான். ஆனால், அ...

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாகிரக நெருப்புப் பொறி! - 131 ஆண்டுகள்

படம்
          131 ஆண்டுகள் - சத்தியாகிரக நெருப்பு பொறி! தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம், இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், வரலாற்று நிஜம் அப்படித்தான் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையம். அங்குள்ள ரயிலின் முதல் வகுப்பு வெள்ளையர்களுக்கானது. முறையாக முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அமர்ந்த இளம் வழக்குரைஞர், வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டார். அவர் பெயரை தனியாக நான் கூறவேண்டியதில்லை. அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆம் தேசத்தந்தையான மகாத்மா காந்திதான். அந்த சம்பவமே காந்தியை சட்டமறுப்பு அதாவது சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுக்க வைத்தது. அப்போராட்டம் தொடங்கி இந்த ஆண்டோடு 131 ஆண்டுகள் ஆகிறது. 1893ஆம் ஆண்டு, ஜூன் ஏழாம் தேதி மகாத்மா காந்தி ரயிலில் டர்பனிலிருந்து பிரிடோரியா சென்றுகொண்டிருந்தார். அப்போதுதான், ரயில் நிலைய அதிகாரி அவரிடம் தகராறு செய்தார். காந்தி, முதல் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்புக்கு செல்லவேண்டும் என மிரட்டினார். காந்தி மறுக்கவே காவலர் ஒர...

பசுமைக்கட்சியின் எழுச்சி

படம்
ஐரோப்பாவில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியில் வலுவான அரசியல்கட்சியாக பசுமைக்கட்சி உள்ளது. அறுபது எழுபதுகளில் மாணவர்கள் போராட்டம், அணுசக்தி போராட்டம் ஆகியவற்றின் அடையாளமாகவே பசுமைக்கட்சியின் எழுச்சி அமைந்தது. வலதுசாரி கட்சிகளின் தாராளவாச, அணுக்க முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக, பாப்புலிச கொள்கைகளுக்கு எதிராக பசுமைக்கட்சி நிற்கிறது. இன்றுள்ள நிலையில் யாருமே சூழலைப் பற்றிய கவலையின்றி வாழ முடியாது. அரசியல்கட்சிகளும் அதை தங்களது தேர்தல் அறிக்கையில் புறக்கணிக்க முடியாது. அகிம்சை, சூழல் கவனம், பசுமைக் கொள்கைகள், தூய ஆற்றல் ஆகியவற்றை பசுமைக்கட்சி அடிப்படையாக கொண்டுள்ளது. பசுமைக் கட்சி கூட்டமைப்பில் மொத்தம் எண்பது பசுமைக் கட்சிகள் இணைந்ததுள்ளன. இவற்றின் கொள்கைகள் குறிப்பிட்ட வரையறையில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. நிலப்பரப்பு சார்ந்து பல்வேறு கொள்கைகள், லட்சியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் அடிப்படையான கொள்கைகளைப் பார்ப்போம். சூழலைப் பாதிக்காதவாறு வாழ்க்கை அடிப்படையான ஜனநாயகத்தன்மை சமூக நீதி அகிம்சை ஆதரவு என்றால் எதிர்ப்பும் இருக்கத்தானே வேண்டும்? ஆயுத தொ...

பசுமைக் கட்சியின் தொடக்கம், தேவை என்ன?

படம்
அரசியலில் சூழல் கொள்கைகளை பெரும்பாலான கட்சிகள் பேசுவதில்லை. இதற்கு காரணம், அப்படியெல்லாம் பேசினால் கட்சிக்கு நிதி, நன்கொடை கிடைக்காது. குறிப்பாக அந்நிய முதலீடு சுத்தமாக வராது. ஆனாலும் கூட உலகளவில் க்ரீன்ஸ் என்ற பசுமைக் கட்சி தனது சூழல் கருத்துகளை சொல்லி அரசில் பங்கு வகித்து தனது அதிகாரத்தை செல்வாக்க வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுக்க பசுமைக்கட்சி இயங்கி வருகிறது. இந்தியாவில் கூட பசுமைக்கட்சி உள்ளது. ஆனால், அதிகளவு பிரபலம் ஆகவில்லை. எனவே, வட இந்தியாவில் அந்த கட்சியை இப்படியொரு கட்சி உள்ளதா என்ற அளவில் மட்டும் பார்த்து வருகிறார்கள். சாதி, மதம் பார்த்து வாக்களிக்கும் பின்தங்கிய இந்தியா போன்ற நாட்டில் சூழல் கொள்கைகளை கருத்தில் கொண்டு அதற்கு வாக்களிக்க அதிக காலம் தேவை. கட்சியாக தன்னை பிரபலப்படுத்தவே பசுமைக்கட்சி இன்னும் மெனக்கெட வேண்டும். சூழல் என்று சொன்னால், பெருநிறுவனங்கள் அருகில் வரமாட்டார்கள். தேர்தல் நிதி கொடுக்கமாட்டார்கள். பொதுவாக வணிக நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைக்கும்? ஏனெனில் எந்த அளவுக்கு இயற்கை வளத்தை சுரண்ட முடியுமோ அப்படி செய்தால்தான் ஜிண்டால், டாடா, ரிலையன்ஸ் ஆக...

காந்தியை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் ஆங்கில நூல் - காந்தி எ ஷார்ட் இன்ட்ரொடக்‌ஷன் - ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்

படம்
  காந்தி ஒரு சுருக்கமான அறிமுகம் ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்  நூல் மொத்தம் 152 பக்கங்களைக் கொண்டது. இதில் காந்தியைப் பற்றி நாம் என்னென்ன தேவையோ  அவற்றை சுருக்கமாக அறிந்துகொள்ள முடியும். காந்தி நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி வெறும் 150 பக்கங்களிலேயே அறிய முடியுமா என்ற அவநம்பிக்கையோடு படித்தாலும் இறுதியில் நாம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  நூலில் காந்தியன் அகிம்சை, சத்தியாகிரகம், அவரின் ஆன்மிக அனுபவம், நிர்வாண சோதனை, அரசுக்கு எதிரான போராட்டம், நேர்மை என நிறைய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அனைத்தும் சுருக்கமாக என்றாலும் சில இடங்களைப் படித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம்தான். அந்தளவு அவரின் கொள்கைகளை ஆங்கிலத்தில் சுருக்கியிருக்கிறார்கள்.  காந்தி ஒரு சுருக்கமாக அறிமுகம் என்பது தலைப்பிற்கு ஏற்றபடி காந்தியின் அடிப்படைகளை எளிமையாக தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் இதில் அவரின் ஆன்மிக அனுபவங்கள் பற்றிய பகுதி சற்று புரிந்துகொள்ள கடினமானவை. அதுதவிர மற்ற விஷயங்கள் சிறப்பாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.  கோமாளிமேடை டீம்  image pintere...

சத்யமேவ ஜெயதே மின்னூல் இப்போது கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில்.... வாசியுங்கள்!

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் இந்தியா எப்படி இருக்கிறது, காந்தியின் காலத்திற்கும் இன்றைக்கும் என்ன வேறுபாடுகளை நாடு அடைந்திருக்கிறது, இன்றும் விவாதிக்கப்படும் காந்தியின் கருத்துகள், பரிசோதனைகள் என்ன என்பதைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டுள்ள நூல் இது. பல்வேறு மதவாத சக்திகளும் காந்தியை தத்தெடுத்து தங்களின் கருத்துகளுக்கு ஏற்றபடி அவரை உருமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் காந்தியவாதிகள் எப்படி செயல்படவேண்டும் என்பதையும் நூல் கூறுகிறது. உண்மையே கடவுள் என்பதை ஒருவர் தன் வாழ்வு வழியாக எப்படி தேடி கண்டறிகிறார் என்பதற்கு காந்தியின் வாழ்க்கையே முக்கியமான சான்று. நூலில் காந்தி நல்லவர் என்று வாதிடவில்லை. அவர் பல்வேறு குறைகளைக் கொண்ட மனிதர்தான். மகத்தான மனிதராக மாற இடையறாது பல்வேறு பரிசோதனைகளை செய்துகொண்டிருந்தார். உண்மையை காந்தி கடவுளென கண்டுகொண்ட தருணம் முக்கியமானது. பல்வேறு அக, புற அழுத்தங்களுக்கு இடையில் இந்தியாவை ஒரே நாடாக கலாசார வேற்றுமைகளோடு கட்டமைக்க முயன்ற ஆளுமை காந்தி. நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான பல்வேறு திறன்கள்...

சத்யவே ஜெயதே - மின்னூல் வெளியீடு - விரைவில்....... நூல் அட்டை அறிமுகம்

படம்
  காந்தியைப் பற்றிய அவரது கொள்கைகளைப் பற்றி அறிய உதவும் சிறிய நூல். மொத்தம் 92 பக்கங்கள். காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டு கடந்து சென்றிருக்கிறது. தற்போது இந்தியாவின் நிலை என்ன, அதில் காந்தியின் தாக்கம் என்ன என்பதை அலசி ஆராயும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. இந்த நூல் விரைவில் கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த தளத்தின் விசேஷமாக நூலின் சில பக்கங்களை நீங்கள் வாசித்துவிட்டு நூலை வாங்க முடியும். அமேஸானில் இந்த வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வகையில் தற்போதைக்கு கூகுள் தளத்தில் இது சிறப்பானதுதான் என்று கூறலாம். 

காந்தியின் உருவத்தைப் பார்த்து நாம் பெறும் செய்தி!

படம்
  பொதுவாக காந்தியின் வழிமுறைகளாக கூறுவது என்ன ? அமைதி , அநீதிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு , எதிர்ப்பது , போராடுவது ஆகியவைதான் . இதைத் தாண்டி உணவு , உடை , குடிநீர் , மின்சாரம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவதை காந்தியின் பெயர் சொல்லித்தான் சொல்லுவார்கள் . உள்நாட்டு துணிவகைகளைப் பயன்படுத்துவது இதில் முக்கியமானது . காதியில் கிடைக்கும் காடாத்துணிகளை தைத்து உடைகளாக்கி போடுவது ஒரு காலத்தில் நாகரிகமாக இருந்தது . இன்று காதி , சர்வோதய சங்கத்தில் விற்கும் சட்டைகள் சற்று பெரிதாக வினோதமான வடிவமைப்பில் இருந்தாலும் , துணிகளை வாங்கி சாதுரியமாக தையல்காரரிடம் விருப்பம் போல தைத்துக்கொள்ளும் புத்திசாலிகளும் உண்டு . உடைகளை பழசாகிவிட்டால் தூக்கி எறிவதை காந்தி வெறுத்தார் . அதை கிழியும் வரையில் பயன்படுத்தலாம் . கிழிந்துவிட்டாலும் கூட அதை பயன்படுத்தும் வழிகள் உண்டு . இது நம்மை காசு செலவழிக்காத கருமியாக காட்டலாம் . ஆனால் அப்படி பயன்படுத்த கற்றால் உங்களுக்கு செலவுகள் குறையும் . பொருட்களால் வீட்டை நிறைக்க மாட்டீர்கள் . வாழ்க்கையும் எளிமையாக மாறும் . காந்தியின் சத்திய சோதனை நூலை ஒருவர் படிக்கும்போது அவர...