இடுகைகள்

கேரளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வின் இயல்போட்டத்தில் தன்னை அறிதல் - யதி - தத்துவத்தில் கனிதல்

படம்
  நித்ய சைதன்ய யதி யதி தத்துவத்தில் கனிதல் ஜெயமோகன், பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா தன்னறம் வெளியீடு   ஈழவ சமூகத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு. இவரின் சீடரான நடராஜ குருவின் மாணவர்தான் நித்ய சைதன்ய யதி. தத்துவம் சார்ந்த கல்வி கற்றுள்ளவரான இவர், இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். நூலில் யதி தன்னுடைய வாழ்பனுவங்களையும், தத்துவங்களையும் விளக்கி பேசுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகளை ஜெயமோகன், பாவண்ணன், எம், கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். யதி, தனது குருவான நடராஜரிடம் கற்ற கல்வி, அவருக்கும் தனக்குமான ஊடல் கொண்ட உறவு ஆகியவற்றைப் பற்றி சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ளார். சிறுவயதிலேயே ஏதோ நாளிதழில் வந்த நடராஜ குருவின் புகைப்படத்தை வெட்டி எடுத்து வைத்திருந்திருக்கிறார். பின்னாளில் யதி, நடராஜரின் மாணவராக இணைகிறார். இவரும் இன்னும் இரண்டு மாணவர்களும் சேர்ந்து நாராயண குருகுலத்தை மேம்படுத்துகின்றனர். குருவின் கொள்கைகளை உலகம் முழுக்க பரப்ப இதழ் நடத்தியதோடு, பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளனர். யதி, மலை

பஷீர் -தனிவழியிலோர் ஞானி! வாழ்க்கை முழுவதும் கனிவும் முரட்டுத்தனமுமாக வாழ்ந்த எழுத்தாளனின் கதை - யூமா வாசுகி

படம்
  வைக்கம் முகமது பஷீர் தனி வழியிலொரு ஞானி - வைக்கம் முகமது பஷீர் ஸாநு மாஸ்டர் தமிழில் - யூமா வாசுகி பாரதி புத்தகாலயம்  தலையோலபரம்பில் பஷீராக பிறந்தவர், எப்படி புகழ்பெற்ற வைக்கம் முகமது பஷீராக மாறினார் என்பதைச் சொல்லும் சுயசரிதை நூல்தான் தனி வழியிலொரு ஞானி. பஷீர் எழுதியதை விட அவரைப் பற்றிய இட்டுக்கட்டிய கதைகள் கொண்ட நூல்கள் அதிகம் என கூறப்படுகிறது. அந்தக் கூற்றை இந்த நூலின் இறுதிப்பகுதியிலும் கூறுகிறார்கள். அவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும் தனி வழியிலொரு ஞானி நூல் அதன் எழுத்து சிறப்புக்காக முக்கியத்துவம் பெறுகிறது.  தொடக்கத்தில் நூல் பஷீரைப் பற்றிய தகவல்களை அவரது சிறுகதைகள், நாவல்களிலிருந்து திரட்டுவது சற்று சோர்வு அளிப்பது உண்மை. ஆனால் அவையெல்லாம் பஷீரின் பிறந்த நாள் எது என்பதைக் கண்டுபிடிக்கும் வேகம்தான். அதைத் தாண்டி விட்டால் பஷீர் என்ற மனிதரின் பிம்பத்தை நாம் பிரமாண்டமான வடிவில் காண்கிறோம்.  இந்த நூல் படைப்பு சார்ந்து பஷீரின் சிறப்புகளைக் கூறுவதோடு அவருக்கு ஏற்பட்ட மனநோய் அதன் பாதிப்புகளையும் வெளிப்படையாக விவரிக்கிறது. இதனால் நூல் எழுத்தாளரை புனிதப்படுத்தி, படைப்புகளை உயர்வாக பேசுவது

மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட உடல் வலியை விட நண்பர்களால் ஏற்பட்ட உள வலி பெரிது! - டிஜே ஜோசப்

படம்
  டிஜே ஜோசப்  எழுத்தாளர் 2010ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.ஜே. ஜோசப் தேர்வுத்தாள் ஒன்றை தயாரித்தார். அதில் அவர் தேர்ந்தெடுத்த கேள்வி அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இதற்காக அவரை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தது. அந்த அமைப்பின் தொண்டர்கள் ஜோசப்பின் மணிக்கட்டை வெட்டி எறிந்தனர். அண்மையில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதனை ந ந்தகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலில் தனது மனைவி, வேலை, மணிக்கட்டை இழந்தது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார்.  உங்களது சுயசரிதை பிரசுரமானது தொடங்கி பரபரப்பாக விற்று வருகிறது. மலையாளத்தில் இந்த நூல் 2020ஆம் ஆண்டு வெளியானது.  இப்போது அதன் மொழிபெயர்ப்பு எ தவுசண்ட் கட்ஸ் ஏன் இன்னோசன்ட் கொசின்ஸ் அண்ட் டெட்லி ஆன்ஸ்ர்ஸ் வெளியாகயுள்ளது. என்ன தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறீர்கள்? மத அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவைதான் என்மீது பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட காரணம். இன்று அதே தன்மை இயல்பானதாக பார்க்கப்படுகிறது.  என்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் ஒருவர் தீவிரவாதம் பற்றிய கருத்தை இரண்டாவத

மதவாத குழுக்களுக்கு கேரளத்தில் எந்த வரவேற்பும் கிடைக்காது! கேரள முதல்வர் பினராயி விஜயன்

படம்
          பினராயி விஜயன் கேரள முதல்வர் உங்கள் இடதுசாரி அரசை மோசமாக காட்சிபடுத்துவதோடு , அதனை பலவீனப்படுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறிவருகிறீர்கள் . ஏன் அப்படி கூறுகிறீர்கள் ? எங்கள் அரசு மீதான தாக்குதல் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது . அப்போது பஞ்சாயத்து தேர்தலில் இடதுசாரி அரசு வெற்றி பெற்றிருந்தது . ஊடகங்களை விலைக்கு வாங்கிய பாஜக தலைவர்கள் அரசு மீது குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கினர் . மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தி மாநில அரசின்போது பல்வேறு வழக்குகளைத் தொடுத்தனர் . என்மீது புகார் கொடுத்தவர் தற்போது அதனை மறுத்துவருகிறார் . அவரின் பெயரை நான் கூற விரும்பவில்லை .    தங்க கடத்தல் வழக்கு பற்றி முன்னதாகவே பிரதமருக்கு எழுதியிருக்கிறேன் என்று சொன்னீர்கள் . வழக்கு விசாரணை எங்கு தவறாகிப்போனதுழ பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்மைதான் . தங்கத்தை சட்டவிரோதமாக கடத்துவது என்பது பொருளாதாரத்திற்கு ஆபத்தானது . விசாரணை தொடங்குவதற்கு ஆதரவாக நின்றேன் . ஆனால் மெல்ல மத்திய அரசின் விசாரணை எங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக திரும்பிவிட்டது . நீங்கள் முன்னர் காங்

300 நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்த தன்னார்வ உளவியல் மருத்துவர்! - கேரளத்தில் அர்ப்பணிப்பான மருத்துவர்

படம்
                  மனநலன் காத்த மருத்துவர் ! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த உளவியல் மருத்துவர் ஏ . எஃப் . நிதின் . இவர் அரசு பொதுமருத்துவமனையில் முந்நூறு நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி மருத்துவர் ஆவார் . நெய்யாண்டிக்கரையிலுள்ள பெரியான்டிவிலாவைச் சேர்ந்தவர் , கோவிட் -19 நோய்த்தொற்றின்போது மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார் . கொரோனா பரவத்தொடங்கிய போது , இந்திய மாநிலங்கள் பலவற்றில் பிசிஆர் சோதனை முறை நடைமுறையில் இருந்தது . இதில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தபிறகு மூன்று நாட்கள் கழித்துதான் ஒருவருக்கு நோய்த்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரியவரும் . இதனால் தனக்கு கொரோனா உள்ளதா என்று தெரியாதவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள் . இவர்களுக்கு நிதின் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 வரை ஆலோசனைகளை வழங்கி வந்தார் . பெரும்பாலும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட பல்வேறு ஆலோசனைகள் தேவைப்பட்டுள்ளன . காரணம் , நோய் பற்றி தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவிவந்தன . நோயுற்றோரின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்தன . இதனால் ந

இறந்துபோன அப்பாவை நினைவுகூரும் நான்கு மகன்களின் நினைவுக்குறிப்புகள்! - இறுதி யாத்திரை - எம்.டி. வாசுதேவன் நாயர்

படம்
                  இறுதியாத்திரை எம் . டி . வாசுதேவன் நாயர் கேரளத்தில் சிறிய கிராமத்தில் வேலை செய்து வரும் ஒருவர் , திருமணம் முடிக்கிறார் . தனது வியாபாரம் சார்ந்து இலங்கை வரை செல்கிறார் . அங்கும் சென்று தொழில் செய்து முன்னேறுகிறார் . அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறக்கின்றனர் . அதோடு அவருக்கு இலங்கையிலும் மனைவி , மகள் உண்டு . இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுகிறார் . அவரது பிள்ளைகளுக்கு இறப்புச்செய்தி சொல்லப்பட்டு விட நால்வரும் அப்பா பற்றிய நினைவுகளுடன் கிராமத்திற்கு வந்து சேர்கின்றனர் . இதில் அப்பு , குட்டேட்டன் , ராஜேட்டன் , உண்ணி ஆகியோர் தங்கள் தந்தை பற்றிய நினைவுகூர்தலே 130 பக்க நாவல் . தந்தை பற்றிய தகவல்கள் அனைத்துமே மகன்களின் நினைவுப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது . எதுவுமே நேரடியாக கூறப்படுவதில்லை என்பதுதான் நாவலின் முக்கியமான சிறப்பம்சம் . பல்வேறு நினைவுக்குறிப்புகளை நினைத்தால் அவர்களது தந்தை பற்றிய சித்திரம் உருவாகிறது . அம்மா இறந்துபோனதற்கு அவர் ஏன் அழவில்லை . மகனுக்கு இலங்கையில் ஏன் வேலை வாங்கித்தரவில்லை , ஒரு ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் போல பிறருக

மத்திய அரசு உதவாவிட்டாலும் மாநில அரசு மக்களுக்கு உதவும்! - பினராயி விஜயன்

படம்
toi நேர்காணல் பினராயி விஜயன், கேரள முதல்வர் கேரள மாநிலம் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டபோது, இழப்பீட்டுத் தொகை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னதாகவே திட்டங்களை அறிவித்து அனைத்து நாடுகளின் பாராட்டுக்களையும பெற்றார் பினராயி விஜயன். அவரிடம் வேகமாக இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு அவரின்நோய்தடுப்பு திட்டம் பற்றி பேசினோம். கேரள மாநிலம் தங்களின் முன்னோடியான திட்டங்களால் பலரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. எப்படி இந்த சாதனைகள் சாத்தியமானது? எங்களது மாநிலம் முன்னரே அடிப்படையான பொதுசுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு ஆகியவற்றில் முன்னோடியாக விளங்குகிறது. நோய் பாதிப்பு பற்றிய விவகாரத்தில் அரசு அமைப்புகளோடு ஏராளமான தன்னார்வ நிறுவனங்களும் கைகோத்து இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் சீனாவில் கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் இதுபற்றி கவனமாக இருக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டோம். இந்த முன்னெச்சரிக்கைக்கு காரணம் உண்டு. நாங்கள் இதற்கு முன்பு நிபா வைரஸ் பாதிப்பை சமாளித்த அனுபவமும் இதற்கு உதவியது. கிராமத்தில் உள்ள

இந்த வாரத்தில் நடைபெறும் விழாக்கள்!

படம்
இந்த வார விழாக்கள்! தாஜ் மகோத்சவ் பிப்.18 – -27 உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா. இந்தியக் கலாசாரம், கைவினைப் பொருட்கள், உணவுத் திருவிழா, ஒட்டகச் சவாரி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாட்டினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மாசாட்டு மாமங்கம் பிப்.20 கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் திருவானைக்காவு கோவிலில் நடைபெறும் விழா. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், குதிரகோலம் எனும் குதிரை பொம்மைகளை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள். மாலையில் இங்கு பாரம்பரிய யானைகளின் அணிவகுப்பு  முக்கிய அம்சமாகும். கஜூராகோ நடனத் திருவிழா  பிப்.20 – -26  1975ஆம் ஆண்டிலிருந்து கஜூராகோவிலுள்ள கோவில்களின்  பின்னணியில் நடைபெறும் நடனத் திருவிழா. மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராகோவின் விஸ்வநாத, சித்ரகுப்தா கோவில்களில் நடனங்கள் நடத்தப்படுகின்றன. அனுமதி இலவசம். மகா சிவராத்திரி பிப்.21 இந்தியாவிலுள்ள சிவபக்தர்கள் கொண்டாடும் விழா. சூரிய உதயத்தில் எழுந்து, விரதமிருந்து கங்கை ஆற்றில் குளித்துவிட்டு சிவனின் கோவில்களுக்குச் செல்வார்கள்.

பாலின பேதம் அகற்றும் உடைகள்! - புதிய முயற்சி!

படம்
பள்ளிகளில் வெள்ளைச்சட்டை காக்கி ட்ராயர் அணிந்து வந்தது காமராசர் காலத்தில். காரணம், ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் மனதைப் பாதிக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. இன்று ஏற்றத்தாழ்வுகளை உடை கூறுவதில்லை. பிற பொருட்களை அதற்கேற்ப தயார் படுத்திவிட்டார்கள். பயன்படுத்தும் பொருட்கள், உணவு முதற்கொண்டு மாறுபடுகிறது. ஆனால் மாணவர்களை பார்க்கும்போது வேறுபாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரச்னை காலப்போக்கில் முளைவிட்டது. அது ஆண், பெண் பாலின பேதம். பெண்ணுக்கு ஒருவிதம், ஆணுக்கு ஒருவிதமான உடை என்பது வகுப்பிலேயே அவர்களை பிரிப்பது போல என மேற்கத்திய நாடுகளில் உடை சீர்த்திருத்தங்கள் தொடங்கியுள்ளன. சமூகத்தில் வேலைத்திறன் என்பதைப் பார்க்காமல் பெண் செய்தால் குறைந்த கூலி, ஆண் செய்தால் அதிக கூலி என்ற பிரச்னை உருவாகி வருகிறது. இதனை பள்ளியிலேயே ஏன் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உடை சீர்த்திருத்தங்களுக்கு முக்கியக்காரணம். எர்ணாக்குளத்தைச் சேர்ந்த வலையச்சிருங்காரா தொடக்கப்பள்ளி பாலின பேதமற்ற ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஸ்கர்டுகளை அணிந்த மாணவிகளுக்கு அந்த உடை விளையாட்டுக்கு உதவியாக இல