இடுகைகள்

தாராள ஒப்பந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் பங்கேற்காதது பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமே! - ஷியாம் சரண்

படம்
              சியாம் சரண் , முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேர இன்னும் கூட கதவு திறந்திருக்கிறத . இதனை எப்படி பார்க்கிறீர்கள் . இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணையவேண்டிய தன்மையைப் புரிந்துகொள்ள இந்த அம்சத்தை முக்கியமானதாக கருதலாம் . இதனை வெறும் வணிக ஒப்பந்தம் என்று மட்டும் புரிந்துகொள்ளமுடியாது . முக்கியமான அரசியல் நிலைப்பாடு எனவும் கொள்ளலாம் . இதில் இந்தியா இணையவில்லை என்பது சரியான பார்வை அரசுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது . இதில் உள்ள தவறுகளை போதாமைகளை வெளியில் இருந்து கொண்டு கூறுவதை விட உள்ளே சென்று கூறுவது சரியாக இருக்கும் . உலகளவில் நடைபெறும் வணிகத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது . இந்த வணிகம் முக்கியமான வணிக ஒப்பந்தங்கள் அடிப்படையில் நடைபெறுகிறது . நாம் இதுபோன்றவற்றில் அங்கம் வகிக்காதபோது , நமது சந்தையின் பங்கு விரிவடையாது . இது பிரச்னைக்குரியது . இந்தியா ஜப்பான் மற்றும் ஆசியான் அமைப்பிலுள்ள பிற நாடுகளிடையே வியாபார ஒப்பந்தங்களை செய்துள்ளதே ? அப்புறமென்ன ? பிராந்திய ஒப்பந்தம் என்பதோடு இதனை நீங்கள் ஒப்பிடமு