இடுகைகள்

கட்டுப்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதற்றக் குறைபாடுகளுக்கான சிகிச்சை முறையை உருவாக்கிய பால் சால்கோவ்ஸ்கிஸ்!

படம்
  இருபதாம் நூற்றாண்டின் அரைபகுதியில் மருத்துவ உளவியலில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று, மனநல குறைபாடுகளுக்கு அதுவரை பயன்படுத்திய தெரபி முறைகளை மாற்றத் தொடங்கினர். 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலுள்ள பல்வேறு உளவியலாளர்கள் ஃப்ராய்டிய முறையை மாற்றி உளவியலாளர் ஆரோன் பெக் கண்டறிந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினர். பின்னாளில், காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி சிபிடி என்று அழைக்கப்பட்ட சிகிச்சை முறையை பால் சால்கோவ்கிஸ் என்பவர் கண்டறிந்தார்.  இதை ஆண்டுக்கு ஆண்டு உளவியலாளர்கள் மாற்றி மேம்படுத்தி வந்தனர். சிபிடியைப் பயன்படுத்தி அப்செசிவ் கம்பல்சிவ் டிசார்டர் குறைபாட்டிற்கு சிகிச்சை செய்தனர். ஆனால் இப்படி ஒரு குறைபாடு தோன்றுவதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்று தெரியாமல் தவித்தனர்.  எதிர்காலத்தில் அப்படி நடக்குமோ, இப்படி நடந்துவிடுமோ என்று மனதி்ல் எழுதும் கருத்துகள் வலிமையாகும்போது அப்செசிவ் குறைபாடு உருவாகிறது என பால் கண்டறிந்தார். இப்படியான மனக்கருத்துகளுக்கு எந்த அடிப்படையும் இருக்காது. அவருக்கு ஏதாவது துக்கம் அல்லது நோய் வந்திருக்கும். ஆனால் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில்

பெருநிறுவனங்களின் அதீத வணிகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் உலக நாடுகள்!

படம்
  பெருநிறுவனங்களின் வணிக வெறி பெரு நிறுவனங்களை உலக நாடுகள் எதிர்க்க காரணம்! குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள வணிக நிறுவனங்கள் காலப்போக்கில் வலிமை கொண்டதாக மாறுகின்றன. இதன் விளைவாக, பல்வேறு சமூக, பொருளாதார கொள்கைகளை கூட இயற்றுவதற்கு அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பிரமாண்டமாக வளர்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு, இப்படி வளரும் பெரு நிறுவனங்களால் வரி வருவாய் கிடைத்தாலும். அவை அதன் அதிகாரத்திற்கு அச்சறுத்தலாக மாறுகின்றன. குறிப்பாக, எண்ணெய், பருப்பு ஆகியவற்றின் விலையை அரசு குறைக்க நினைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதால், அதை குறைக்கச் செய்யும் நடவடிக்கை என கொள்ளலாம். மேற்சொன்ன இரு பொருட்களையும் நாட்டின் சிக்கலான நிலையைக் கருதி, விலையை குறைத்துக்கொள்ள வியாபாரிகள் தயாராக இருக்கலாம். ஆனால், பெருநிறுவனங்கள் அந்த நேரத்தில் கிடைக்கும் அதிக லாபத்தை விட்டுவிட தயாராக இருப்பதில்லை. இதனால, நாட்டில் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டாலும் அரசு அதை தடுக்க முடியாது. காரணம் பெருநிறுவனங்களின் பொருள் விநியோக கடைகள் அ

மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் - உணவை ஐம்புலன்களால் உள்வாங்கி உண்ணும் முறை!

படம்
    கவனம் ஒருமித்த உணவு உண்ணும் முறை – மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு உண்கிறோம். ஆனால் உணவை எந்தளவு கவனித்து உண்கிறோம் என்பதில்தான் சிக்கல் எழுகிறது. இதனால், ஒரு வாரத்தில் என்னென்ன வகையான உணவுகளை எப்போது, எந்தளவில் சாப்பிட்டோம் என்று தாளில் எழுதச்சொன்னால் நினைவுபடுத்த முடியாமல் தவித்துப்போய்விடுவோம். இதற்கு காரணம், சாப்பிடும்போது டிவி அல்லது ஓடிடியில் படம் பார்ப்பது, ஸ்பாடிபையில் பாடலை ஒலிக்கவிட்டு சாப்பிடுவது, நூல்களை படித்துக்கொண்டே சாப்பிடுவது   என நிறைய கவனத்தை சிதைக்கும் விஷயங்கள் உள்ளன.   இதன் விளைவாக, உணவு உண்ணும் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, உணவின் அளவு கூடி, நாளடையில் உடல்பருமன் ஏற்படுகிறது. இதன் விளைவாக, நீரிழிவு நோய், இதயநோய் பிரச்னைகள் எழுகின்றன. கவனம் ஒருமித்த உணவுமுறையில் உணவை எப்படி சாப்பிடுவது?, தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு அதன் வாசனையை முகர்ந்து பார்ந்து மிக நிதானமாக அதை உண்ணவேண்டும். இந்த நேரத்தில் ஒருவர் உணவைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். ஐம்புலன்களாலும் உணவை உணர்ந்து சாப்பிட்டால்,

மனமுதிர்ச்சி அடைந்தவர்களால் குற்றங்களைச் செய்யமுடியாது!

படம்
  குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவர் பிறருக்கு தெரியாதபடி குற்றங்களை செய்து வரலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர் வேறு வாழ்க்கையை வாழலாம். அவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கலாம். விடுமுறை என்றால் காரை எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்கு போகலாம். புனித தலங்களுக்கு செல்லலாம். ஆனால் தான் செய்யும் குற்றச்செயல்கள் என்பது பாதிக்கப்படாதபடி தனியாக வைத்துக்கொண்டு இயங்குபவர்களாக இருப்பார்கள். வெளியில் உள்ள பல்வேறு அழுத்தங்களுக்கு பணிந்துவிடாதபடி குற்றவாளிகளின் செயல்பாடு இருக்கும். இவர்கள் தங்களின் இரக்கமில்லாத இயல்பு, கொலை செய்யும் பண்பு ஆகியவற்றை மறைத்து தனிப்பட்ட ஒழுக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கு மூளையில் அவர்களுக்கென தனி கட்டுப்பாடு இருக்கிறது என விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை 1966ஆம் ஆண்டு ரோட்டர் என்ற உளவியலாளர் லோகஸ் ஆஃப் கன்ட்ரோல் என்ற வார்த்தை மூலம் குறிப்பிட்டு வரையறை செய்தார். வெளி உலகத்தில் ஏற்படும் தாக்கத்திலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதில் குற்றவாளிகள் திறமையாக செயல்பட்டனர் என்பது உண்மை. குற்றவாளிகள், குற்றவாளிகள் அல்லாதோரை விட உள்மன ஆற்ற

பயிர்களை அழிக்கும் அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்! ஃபார்ம் சென்ஸ்

படம்
  அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பம்! இயற்கைச்சூழலில் பூச்சிகளின் பங்கு முக்கியவை. விவசாயப் பயிர்களை தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமானதாக மாறிவருகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரோமோன் வேதிப்பொருள் கொண்ட பசை அட்டைகளை விவசாயிகள் பயன்படுத்தினர். ஆனால் இதன் மூலம் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையை, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஃபார்ம்சென்ஸ் (Farmsense) நிறுவனம் மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் பூச்சிகளை கண்காணிக்கும் சென்சார் கருவிகளை உருவாக்கி வருகிறது.   2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபார்ம்சென்ஸ் நிறுவனம், பூச்சிகளைக் கண்காணித்து அதற்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை வகுக்க உதவுகிறது. இந்த நிறுவனத்தின்,  ஃபிளைட்சென்சார் கருவி, 2020ஆம் ஆண்டு முதலாக வயல்வெளிகளில் நிறுவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்தக்கருவி, பூச்சியை கவர்ந்து இழுக்கும் கொல்லும்பொறி அல்ல. அந்திபூச்சிகளின் வடிவம், இறக்கை எழுப்பும் ஒலி என பல்வேறு அம்சங்களை பதிவு செய்து உரிமையாளருக்கு தானியங்கியாக அனுப்பிவிடும்.  கருவி தரும் தகவல்களின் அடிப்படையில், பூச்

நீர்நிலைகளை அழிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்!

படம்
  மைக்ரோபிளாஸ்டிக்கிற்கு எதிரான போர்! நிலம், நீர்நிலைகளில் அதிகரிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் பற்றிய செய்தி புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.   உலகளவில் ஆண்டுதோறும்  400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாகிறது. இவை கடலில் மைக்ரோ அளவிலான துகள்களாக உடைந்து நீரை மாசுபடுத்துகிறது.  2004ஆம் ஆண்டு மைக்ரோ பிளாஸ்டிக் என்ற வார்த்தையை சூழலியலாளர் ரிச்சர்ட் தாம்சன் (richard thompson) அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தின், கடற்புரங்களில் செய்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்களை கண்டுபிடித்து, உலகிற்கு சொன்னார். 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட பிளாஸ்டிக் துகள்களை மைக்ரோ பிளாஸ்டிக் என அறிவியலாளர்கள் வரையறுக்கின்றனர். இவை ஆழ்கடலில், ஆர்க்டிக்  பனியில் ஏன் நமது உடலிலும் கூட உள்ளன.  2019ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதழில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மனிதர்கள் தினசரி 1 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக கண்டறியப்பட்டது. மனித உடல் உறுப்புகளை, திசுக்களை பிளாஸ்டிக் சேர்மானங்களிலுள்ள வேதிப்பொ

ஒவ்வாமையை கட்டுப்படுத்துவது எப்படி? சில வழிமுறைகளை அறிவோம் - ஒவ்வாமை நூலிலிருந்து...

படம்
                ஒவ்வாமைக்கு காப்பு! என்னதான் அதிநவீன பூட்டு என்றாலும் அதனை உடைக்கும் நுட்பமான புத்தி கொண்ட திருடனும் இருப்பான்தானே? நோய்க்கும் இது பொருந்தும். என்னதான் ஒவ்வாமை நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும் மருந்தை விட உணவு மூலமே நிறைய மாற்றங்களை செய்யலாம்., சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தாலே உடல் நலமாகி தேறும். இப்போது உடல்நலம் காக்கும் சில சத்துகள், மருந்துகளைப் பார்ப்போம். கால்சியம் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உடலுக்கு முக்கியம். இவை தசைகளில் சேருவது அவசியம். தசைகளின் இறுக்கம், நெகிழ்வு ஆகிய இரண்டுக்கும் இந்த சத்துக்கள் தேவை. ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்கள் இந்த சத்துகள் கொண்ட பொருட்களை சாப்பிடலாம். அப்படியல்லாதபோது 250 கிராம் கால்சியம், மெக்னீசியம் ஆகிய இரண்டையும் நான்கு முறை தினசரி எடுத்துக்கொண்டால் உடல் நலமாகும். இதில் ஆண்கள், பெண்களுக்கு சாப்பிடும் அளவு மாறும். எனவே மருத்துவரின் பரிந்துரை அவசியம் தேவை. ஆப்பிள், வெங்காயத்தில் உள்ள குயிர்செடின் என்ற வேதிப்பொருள்  உடலுக்கு முக்கியமானது. இது ஆன்டி ஆக்சிடன்டாக உடலில் ஒவ்வாமை பாதிப்பை கட்டுப்படுத்துகிறது. இதனை பைடோநியூட்ரியன்ட் என்று அ

உத்தரப்பிரதேசத்தில் மக்கள்தொகை கொள்கை 2021-2030 ஏற்படுத்தும் விளைவுகள்!

படம்
 உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் பழைய ஜெயில் ரோட்டில் சட்ட கமிஷன் அலுவலகம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.மிட்டல் தலைமையிலான மூன்று பேர் மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையை உருவாக்கியுள்ளனர். இதனை இணையத்தில் மாநில அரசு வெளியிட்டுள்ளது.  மாநில அரசின் புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டப்படி, அரசின் கொள்கையை மீறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்காது. உள்ளூர் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாது. அரசு வேலைக்குக் கூட மூன்று குழந்தைகள் கொண்டவர்களை தடுக்கிறது புதிய சட்டம்.  மாற்றுத்திறனாளிகளை வைத்துள்ள பெற்றோர், ட்வின்ஸ்களுக்கு புதிய சட்டத்தில் சலுகைகள் உண்டு.  தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அரசின் கொள்கைகளை கடைப்பிடித்தால் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றில் கட்டண சலுகை உண்டு. பி.எப் விஷயத்திலும் கூட உபகாரம் உண்டு.  அரசு ஊழியர்கள் அரசின் குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டை கடைபிடிக்காதபோது பதவி உயர்வு, பிஎஃப் ஆகிய விஷயங்கள் கிடைக்காது. அரசின் வீடுகள் ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்படும்.  குடும்ப அட்டையில் நான்கு பேருக்கு மட்டுமே இடமுண்டு.  மக்கள் தொகை கட்டுப்பாடு என யோகி கூறியபோதே உ.பியில் வா

சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா? -

படம்
                சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா ? ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ இதழில் மூன்று வல்லுநர்கள் சமூக வலைத்தளங்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குமுறைபடுத்திக் கொள்ளவேண்டுமென கூறியுள்ளனர் . அமெரிக்காவில் கேபிடல் ஹில் தாக்குதலுக்கு சமூக வலைத்தளங்களே காரணமாக இருந்தன . இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை பிரதமர் மோடி உருவாக்கினார் . இதற்கு வாட்ஸ்அப் , ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளன . இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம் . உலகிலுள்ள 33 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடுகளுடன் இயங்க வலியுறுத்தியுள்ளன . மூன்றில் ஒரு நாடு சமூக வலைத்தளங்களை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தியுள்ளது . உலகில் 13 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடுத்துள்ளன . வட அமெரிக்காவில் கட்டுப்பாட்டு சட்டங்கள் கிடையாது . ஆனால் தென் அமெரிக்காவில் சட்டங்கள் உள்ளன . 2015 ஆம் ஆண்டு தொடங்கி முப்பது நாடுகளில் நான்கு நாடுகள் சமூக வலைத்தளங்களை தடுக்கத் தொடங்கியுள்ளன . 54 நாடுகளில் 29 நா

மேல் முறையீட்டிற்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என சொல்லும் மத்திய அரசின் புதிய சீர்திருத்தம்! - ட்ரிப்பியூனல் அமைப்பு கலைக்கப்படுகிறது

படம்
                காணாமல் போகும் ட்ரிப்யூனல் மத்திய அரசு , தற்போது புதிய சீர்திருத்தமாக திரைப்படங்களை மேல் முறையீட்டிற்கு அனுப்பும் ட்ரிப்பியூனலை கலைத்துள்ளது . இதனால் சர்ச்சைக்குரிய மையப்பொருளைக் கொண்ட படங்கள் உயர்நீதிமன்றத்தில் தங்கள் படங்களை திரையிடுவதற்கான அனுமதியை பெற வேண்டியிருக்கும் . 1983 ஆம் ஆண்டு திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952 படி ட்ரிப்பியூனல் அமைக்கப்பட்டது . இதில் தலைவர் உட்பட ஐந்து பேர் இருப்பார்கள் . இவர்களை உறுப்பினர்களாக கருதலாம் . கூடுதலாக ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலரும் இருப்பார் . மத்திய தணிக்கை வாரியத்தின் கருத்திற்கு எதிராக திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் ட்ரிப்பியூனில் தங்கள் படங்களின் திருத்தங்களுக்கு எதிராக முறையிட்டு நீதி பெறலாம் . மத்திய தணிக்கை வாரியத்தில் தலைவர் தவிர்த்து 23 உறுப்பினர்கள் இருப்பார்கள் . இவர்கள் படங்களைப் பார்த்து திருத்தங்களை கூறி அதற்கான பல்வேறு சான்றிதழ்களை வழங்குவார்கள் . யு , யு / ஏ , ஏ என பல்வேறு வித சான்றிதழ்களை வழங்குவார்கள் . ஏ சான்றிதழ் பெற்ற படங்களை டிவியில் ஒளிபரப்புவது கடினம் . பொதுமக்களின் பார்வையிடலுக்கு வரு

நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்! - கூ ஆப் துணை நிறுவனர் மயங்க்

படம்
          மயங்க் பைடாவட்கா கூ , சமூக வலைத்தளம் , துணை நிறுவனர் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிகளை எப்படி பார்க்கிறீர்கள் ? இன்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிடுபவர்கள் முக்மூடிகளை அணிந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள் . இவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளியிட முன்வருவதில்லை . இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன . போலிசெய்திகள் , வதந்திகள் அதிகம் வருகின்றன . இதனை தீர்க்க அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது . இதன்மூலம் யார் செய்தியை உருவாக்குகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கமுடியும் .. அரசு இந்த வகையில் வெறுப்பு பேச்சு , போலிச்செய்திகளை கட்டுப்படுத்த முடியும் என்ற வகையில் அரசின் கட்டுப்பாடுகளை நான் ஆதரிக்கிறேன் . உள்நாட்டு ஆப்கள் மூலம் வெளிநாட்டு சமூகவலைத்தள ஆப்களை சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா ? இந்தியாவில் இதுபோன்ற ஆப்களுக்கான சந்தை உள்ளது . அதனைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் சிறிதே முயன்றால் போதுமானது . ரெட்பஸ் என்ற நிறுவனம் இந்திய நிறுவனம்தான் , இணைய வழியில் பஸ்களை புக் செய்யும் பெரும் நிறுவ

வீட்டுப்பூனைகளால் காட்டுயிர்கள் அழிந்து வரும் அவலம்!- மேற்கு நாடுகளில் மக்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் வலுக்கும் மோதல்!

படம்
              காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்போல இரு