இடுகைகள்

பசுவதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோஷம் போட்டால் இந்தியாவில் வாழ முடியாது - நிதின்கட்கரி

படம்
அவுட்லுக் பாஜகவின் மனசாட்சியாக பேசுவது நிதின் கட்கரியின் பாணி. ஆர்எஸ்எஸ் சேவகராக இருப்பது முதல் பாஜகவின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக தொடர்வது வரையில் எதைக்கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கிறது நிதின் கட்கரியிடம். பதில் கிடைத்தால் விடுவோமா? காங்கிரசின் நியாய் திட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நபர் ஒருவருக்கு பனிரெண்டாயிரம் என்பது சாத்தியம் கிடையாது. உங்களது மாத வருமானம் ஒன்பதாயிரம் என்றால் மூவாயிரம் ரூபாய் அரசு வழங்கும். இது தேர்தல் காலம் என்பதால், ஒவ்வொரு கட்சியும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். நாங்கள் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்கி உள்ளோம். வறுமை, விவசாய விலைகள் குறைவு என்பது உங்களுக்கு பிரச்னையாக தெரியவில்லையா? நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் இன்று விளைபொருட்களுக்கான விலைகளை நிர்ணயிப்பது இந்தியா அல்ல. வணிக கழகத்தில் இடம்பெற்றுள்ள நாடுகள். எனவே, விளைவித்த பொருட்களுக்கான விலை கிடைக்காதது, இந்தியாவிற்கு மட்டுமல்ல இது உலகளாவிய பிரச்னை. உபரியாக கிடைக்கும் தானியங்களிலிருந்து எத்தனால், எரிவாயு