தனது நட்சத்திரங்களை நமது வானத்திற்கும் இடமாற்றும் கவிதைகள் - யூமா வாசுகி கவிதைகள் - யூமா வாசுகி
யூமா வாசுகி யூமா வாசுகி கவிதைகள் தன்னறம் வெளியீடு விலை 300 யூமா வாசுகியின் கவிதைகள் ஆறு நூல்களிலிருந்து பெறப்பட்டு தொகுத்து தனி நூலாக்கப்பட்டிருக்கிறது. நூலின் அட்டைப்படம் வினோத் பாலுச்சாமியின் ஒளிப்படக்கலை மூலம் கண்ணைக் கவருகிறது. ஆலமரத்தின் கீழ் கவிஞர் யூமா வாசுகி நிற்கிறார். வேலைவாய்ப்பின்மை, இயலாமை , பசி, மரணம், நோய் பற்றியெல்லாம் எழுதும்போது கவிதைகளில் தனிக்கூர்மை தெரிகிறது. இதெல்லாம் கவிஞரை கடுமையாக பாதித்திருக்கிறதா என்று தெரியவில்லை. தனது மனதில் உள்ள வருத்தங்களை தமிழ்மொழியில் சாணை பிடித்து எழுதியிருக்கிறார். படிக்க படிக்க மனங்களில் ரத்தம் தெறிக்கிறது. வழிகிறது. இந்த நூல் தொகுப்பில் முக்கியமானது என நினைப்பது குழந்தைகள் பற்றிய கவிதைகள்தான். முயலை வீட்டில் வளர்ப்பதாக பொய் சொல்வது, பெண்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் இருந்து மகளைப் பெற்றவுடன் கடவுளாக மாறுவது, குழந்தையை ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றும்போதுகூட பயந்துவிடாதே என்று ஆறுதல் கூறுவது, ஓவியங்களை தீட்டும் குழந்தைகளை மலர்க்கூட்டம் என வர்ணிப்பது, பேருந்தில் கையில் கிடைக்கும் குழந்தையை ஆசிர்வாதமாக நி