இடுகைகள்

மூளை ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோ கொலைகாரர்கள் அசுரர்களா?

படம்
dahmeraesthetics\pinterest குழந்தைகளை கற்பழித்துக் கொன்று, உடலையும் எரித்துவிட்டு எந்த குற்றவுணர்வும் இல்லாமல் ஒருவரால் இருக்க முடிகிறது. பின்னர் போலீஸ் அவரை கைது செய்துவிட, பெயிலில் வந்தவர் அவர் செய்த குற்றத்தைப் பற்றி பேச கோபம் வருகிறது. அம்மாவையும் அடித்தே கொல்கிறார். இந்த செய்தியை நாளிதழில் படித்திருப்பீர்கள். இப்போது உங்கள்மனதுக்குள் என்ன விஷயம் ஓடுகிறது? இவன் மனிதனே அல்ல, மிருகம். என்பதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சைக்கோ கொலைகாரர்களின் சிக்னேச்சர் கொலைமுறைகள் கூட மனதில் ஓடலாம். ஆனால் இவர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என யோசித்தால்,  உங்கள் ஐக்யூவிற்கு வாழ்த்துகள் சொல்லலாம். 49 சைக்கோ கைதிகளின் மூளை செயல்படும் விதத்தை அறிய மருத்துவர், ஜோஸ்வா பக்ஹோல்ட்ஸ் முயற்சித்தார். நாம் சைக்கோ கொலைகாரர்கள், உடலிலும் உள்ளத்திலும் உணர்ச்சிகளே அதிர்வுகளே இல்லாதவர்கள் என நினைக்கிறோம் . அது தவறு என்று தில்லாக அறிவித்தே ஆராய்ச்சியைத் தொடங்கினார். டெமோ இதுதான். கைதிகளுக்கு, சிறியளவு பணத்தைக் கொடுத்து  அதை எப்படி செலவு செய்ய முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் சோதனை. இ