இடுகைகள்

விலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கிக் கணக்கும், உப்பு வழக்கும்!

படம்
  1 ஒரு வங்கிக்கணக்கை மூடுவது எப்படி? இதை நீங்கள் எளிதாக மின்னஞ்சல் அனுப்பி செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு எளிதாகவெல்லாம் காரியம் நடக்காது. கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள வங்கியில் எனக்கு கணக்குள்ளது. அந்த கணக்கை மூட விரும்பினேன். இணையத்தில் அதற்கான வழியைத் தேடினால், நேரடியான வழிகள் ஏதுமில்லை. ஏஐ உதவியாளரிடம் கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைக்கிறது. அதாவது, வங்கி வழங்கிய ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இதோடு கணக்கை மூடிவிடுங்கள் என கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி கணக்கு வைத்துள்ள கிளைக்கு கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கணக்கு மூட முடியும்.  கும்பகோணம் வங்கியின் கொள்கைப்படி வங்கிக்கணக்கில் ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே குறையக்கூடாது. குறைந்தால் அபராதம் உண்டு. மற்றபடி காசு நிறைய கணக்கில் இருக்கும்வரை பெரிய சிக்கல் ஏதுமில்லை. அட்டை, வங்கியின் ஆப் என அனைத்துமே சிறப்பாகவே இயங்குகிறது. கணக்கு தொடங்கியபோது போனில் வீடியோ கால் செய்து அதன்வழியாக தொடங்க நிர்பந்தம் செய்தனர். என்னுடைய ஊரில் உள்ள இணைய வேகத்திற்கு கூகுள் தேடல் பக்கமே பத்து நிமிடம் ஆகும் திறப்ப...

சர்க்கரையும் சந்தை நிலவரமும் எப்போதும் கலவரம்தான்!

படம்
            மதிப்பிற்குரிய பொன்னி சர்க்கரை விநியோக குழுவினருக்கு, வணக்கம். நான் தங்களுடைய பொன்னி சர்க்கரையை, கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். பொடி போல இல்லாமல் சர்க்கரை பெரிதாக தரமாக இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு கிலோ பாக்கெட் சற்று அளவில் பெரிதாக இருந்தது. பிறகு, பாக்கெட் சற்று கச்சிதமாக்கப்பட்டது நல்ல முயற்சி. பொன்னி சர்க்கரை விலை அதிகபட்ச வரி உட்பட ரூ.55 என அச்சிடப்பட்டுள்ளது. கடையில் விநியோகம் செய்யும்போது என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.45க்கு விற்ற சர்க்கரை, பத்து நாட்கள் இடைவெளியில் ரூ.48 என விலை கூடிவிட்டது.  இந்த ரீதியில் சென்றால், விரைவில் நீங்கள் பாக்கெட்டில் அச்சிட்ட விலையை மூன்று மாதங்களில் அடைந்துவிடலாம். தரம் சிறப்பாக உள்ளது. எனவே, விலை நிர்ணயத்தில் நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் பொன்னி சர்க்கரை, வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிராமப்புறம் சார்ந்த கடைகளில் சர்க்கரையை மூட்டையாக வாங்கி எடுத்து வந்து விற்கிறார்கள். அதன் தரம் அந்தளவு சிறப்பாக இல்லை. ஏற...

பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும்

  பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும் மதவாத கட்சிக்கு வாக்களித்துவிட்டு சிறுபான்மையினரின் வீடு கோவில்களை புல்டோசர் இடிப்பதை சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பது போன்றதல்ல. ஒருவர், குறிப்பிட்ட பொருளை கடையில் வாங்கிவிட்டு அதன் மதிப்பை அதிகமாக கருதிக்கொள்வதுண்டு. சிலர் ஒருவர் வைத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொடுப்பதாக சொன்னாலும் சம்பந்தப்பட்டவர் அதெப்படி இதை நீ வெலைக்கு கேட்கலாம். எனக்கு பிடிச்ச பொருள். விற்கமாட்டேன் என்று கூறுவதுண்டு. சூதாட்டம் விளையாடுவதைக் கூட மனிதர்களின் முடிவு தொடர்புடையதாக சொல்லலாம். இன்று ஆன்லைன் ரம்மியை ஒன்றிய, மாநில அரசுகளே ஊக்குவிக்கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி குலுக்கல் நடைமுறையில் உள்ளது. இதில் எல்லாம் வெல்வது அரிதிலும் அரிதாக நடைபெறுவது. இதன் அர்த்தம் பெரும்பாலும் நடக்காது என்பதுதான். வானிலை ஆய்வு மையம், பகல் வெயில் பளிச்சென அடிக்கும் என்று அறிக்கை வெளியிடும் அன்றைக்கு அடைமழை பெய்வது போல்தான். எதையும் கணிக்க முடியாது. சந்தையில் பங்குகள் ஓகோவென உயரத்திற்கு செல்லும் என்று வணிக டிவி சேனல்கள் ஒப்பாரி வைக்கும். அந்த சமயம் பார்த்து ரூபாயின் ம...

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

படம்
        3 பாயும் பொருளாதாரம் விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி! பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம். சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என...

பொருட்களின் விலையே அதன் விற்பனையை தீர்மானிக்கும் காரணி - பாயும் பொருளாதாரம்

படம்
  பாயும் பொருளாதாரம் ஆதிகாலத்தில் மனிதர்களுக்குத் தேவையாக இருந்தது உணவு, உடை, இருப்பிடம். இன்றும் கூட அதே தேவைக்காகவே பெரும்பாலான மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கிறார்கள்தான். ஆனால், அதன் பயன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. முதலாளித்துவ தத்துவத்தில், அரசு பெரும் சக்தியாக இருந்து மக்களிடமிருந்து பணத்தை வரியாக பிடு்ங்கி பெரு நிறுவனங்களுக்கு கடனாக வழங்கிவிடுகிறது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி என ஏதேதோ பிதற்றல்கள்... மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் இன்றுவரை அப்படியே உள்ளன. கூடுதலாக, அவை பின்வரும் தலைமுறையினருக்காகவும் சேர்த்துவைக்கத் தொடங்கியுள்ளனர். நீர், காடு, வன விலங்குகள், பாறைகள்,மரம் செடி கொடிகள், மணல், எண்ணெய், தாது, எரிவாயு என அனைத்துமே தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். அவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை மழை பெய்யும்போது குட்டைகள், ஏரிகளை தூர்வாரி வைத்து சேமித்தால் நிலத்தடி நீர் உயரும். இதன்விளைவாக குடிநீர் பற்றாக்குறை தீரும். அப்படி இல்லையெனில், பற்றாக்குறை உருவாகும். பட்டினி, பஞ்சம் எல்லாமே இப்படி உருவானவைதான். நடப்பு காலத்தில் வணிகர்கள் செயற்கையாக பொருட்கள் தட்டுப்பாட்டை உருவா...

நிலம் எனும் நல்லாள்!

படம்
         நிலம் எனும் நல்லாள்  சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளாகியும் நிலக்கிழார்த்தனத்தை ஏன் கைவிடக்கூடாது?  அண்மையில், மத்திய கிழக்கு மும்பையில் வடாலாவில் உள்ள ஆறு ஏக்கர் நிலமானது விற்கப்பட்டது, வானியல் கணக்கு போல ஒரு பெரிய தொகைக்கு..... வடாலா வளர்ந்துவருகிற பகுதி என்றாலும் குறிப்பாக நவநாகரீக பகுதி என்று கூறிவிடமுடியாது. அதிர வைக்கும் தொகை சாத்தியமானது ப்ளோர் ஸ்பேஸ் இன்டக்ஸ்(FSI) பட்டியல் மூலகாரணம். நிலத்தின் சொந்தக்காரர் அந்த பகுதியின் நிலமதிப்புக்கு கூடுதலாக இருபது மடங்கு அதிக விலைக்கு நிலத்தை விற்றுள்ளார். ஆகஸ்ட் 2010, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் பல கூடுதல் படிகள், ஓய்வூதியம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட, அவர்களின் சம்பளம் ரூ. 10,000 லிருந்து மாதத்திற்கு ரூ. 50,000 எனும் அளவிலும், பல்வேறு படிகள் எனுமளவில் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டன. இந்திய எம்.பிகளுக்கு உலகளவிலுள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் குறைவான தொகையே வழங்கப்பட்டு வந்தது  (அ) திறமை தேவைப்படும் புத்திசாலித்தனம், தலைமைத்துவ தனித்துவம், குடிமைச்சேவை அதிகாரிகளின் சீரிய பணியினால் இவர்க...

over tourism!?

படம்
        சுற்றுலா வளர்வதை நிறைய நாடுகள் வரவேற்கின்றன. அதற்கென நிதியளித்து அதை ஊக்குவிக்கின்றன. ஆனால், இவ்விவகாரத்தில்  உள்நாட்டு மக்களின் கருத்துகளை அறிவதில்லை. அம்மக்களோ, வெளிநாட்டினரை வரவேற்காமல் இங்கு வராதீர்கள் என கூறி வருகிறார்கள். ஏதென்ஸ், ஸ்பெயின் நாட்டிலுள்ள உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மீது தண்ணீர் துப்பாக்கி மூலம் தெளித்து இங்கு வராதீர்கள் என்று  சுற்றுலாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர். ஜப்பான் அரசு ப்யூஜி மலையைக் காக்க கம்பி வேலை அமைத்துள்ளது. சியோலில் சுற்றுலா தளங்களை பார்க்க குறிப்பிட்ட நேரம் தடை விதிக்கும் ஏற்பாட்டையும் கொரிய அரசு யோசித்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு, சுற்றுலா வணிகம் பழையபடி வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 1.5 பில்லியன் மக்கள் சுற்றுலாவுக்கு வந்து சென்றுள்ளதாக யுன் டூரிசம் என்ற அமைப்பு தகவல் கூறியுள்ளது. சுற்றுலாக கூட்டிச்செல்லும் நிறுவனங்களும் பழையபடி விளம்பரங்களை இணையத்தில் செய்யத் தொடங்கியுள்ளன. கிரீஸ், போர்ச்சுக்கலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்து வருகிறார்கள். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு இடங்களிலும் கூட்டம் அல...

மனித பலத்தில் மூளைக்கும் சற்று பகிர்வு தேவை! - யாவரும் ஏமாளி அனுபவம்

படம்
              மதிப்பிற்குரிய அன்னை உணவுப்பொருட்கள் தயாரிப்புக் குழுமத்திற்கு, வணக்கம். கடந்த 21.6.2024 வெள்ளிக்கிழமை அன்று தாராபுரம் செல்லவேண்டிய பணி. அங்கு சென்று பணியை முடித்துவிட்டு, மாலை நேரத்தில் ஶ்ரீ கண்ணன் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு சில பொருட்களை வாங்கச் சென்றேன். அன்னை பிராண்ட் பேரீச்சம்பழம் நூறு கிராம் பாக்கெட் வாங்கினேன். விலை ரூ.51 என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அதை கணினியில் பில் போடும்போது 100 கிராம் ரூ.54 என்று காட்டியது. பில் போட்டவர், விலை அதிகமாக காட்டுகிறது. வேறு பிராண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் என பரிந்துரைத்தார். அதற்கு பதிலாக இருந்தது லயன் என்ற பிராண்ட். அந்த பாக்கெட்டின் விலை நூறு ரூபாய்க்கும் மேல். அன்னை பிராண்ட் நூறு கிராம் பாக்கெட்டின் விலை ரூ.54தான். வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் என விற்பனையாளர் நெருக்கடி கொடுத்தார். எனவே, வேறுவழியின்றி அன்னை பிராண்ட் வேண்டாம் என்று சொல்லி பாக்கெட்டை செல்ஃபிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். உண்மையில், அன்னை நூறு கிராம் பேரீச்சைப்பழம் பாக்கெட்டில் வரி உள்பட அதிகபட்ச விலை அச்சிடப்...

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி ...

ஜிடிபி பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம் வாங்க! - எது உண்மை, எது பொய்?

படம்
  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன? ஒரு நாட்டின் எல்லைக்குள், குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருள், வழங்கப்படும் சேவைகளின் பண மதிப்பு அல்லது சந்தை மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி எனலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாட்டின் பொருளாதார நலத்தைப் புரிந்துகொள்ள உதவும் மதிப்பெண் அட்டை போல…. பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுதோறும் அல்லது காலாண்டு அடிப்படையிலும் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், காலாண்டு அடிப்படையில் ஆண்டு முழுக்கவுமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகிறார்கள். இப்படி பெறும் தகவல்களில் பணவீக்கத்திற்கு ஏற்ப பொருட்களின் விலைகளில் சற்று மாறுதல்கள் செய்யப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் புரிந்துகொள்வது எப்படி? அரசு செய்யும் செலவுகள், முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், செலுத்தப்பட்டுவிட்ட கட்டுமானச் செலவுகள், தனியார் நிறுவனங்களின் சரக்குகள், மக்களின் நுகர்வு, ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படும். இறக்குமதி  செய்த பொருட்களின் மதிப்...