ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் உதவ காங்கிரஸ் தவிர்த்தும் ஏராளமான கூட்டணி கட்சிகள் உள்ளன! - அகா மெக்தி
அகா சையத் ருஹூல்லா மெக்தி ஶ்ரீநகர் நாடாளுமன்ற உறுப்பினர் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் பற்றி காங்கிரஸ் கட்சி மௌனம் காக்கிறதே? அச்சட்டப்பிரிவை திரும்ப கொண்டுவருவதாக காங்கிரஸ் கூறிவிட்டதே போதுமானது. அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு நாடு முழுக்க ஆதரவான மனநிலை இல்லை என்பதால், அதைபற்றி அதிகம் பேசவில்லை என நினைக்கிறேன். மதவாத சக்திகளுக்கு எதிராக நாடு முழுக்க போராடி வருகிறோம். அந்த சமயத்தில் காங்கிரஸ் 370ஆவது பிரிவு பற்றி பேசவில்லையென்றால் பார்த்துக்கொள்ளலாம். காங்கிரஸ் கடந்து திமுக, திரிணாமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளிடம் பேசி வருகிறோம். கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்த அக்கட்சிகள் ஆதரவு தந்துள்ளன. எனவே, கூட்டாட்சி முறையை ஆதரிக்கும் நிறைய கட்சிகள் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவாக உள்ளன. பிடிபி ஏன் உங்களோடு இணையவில்லை? பாஜகவிற்கு எதிராக நிற்க பிடிபியை அழைத்தும் அவர்கள் வரவில்லை. பழைய விவகாரங்களை மனதில் வைத்துக்கொண்டு எங்களை வசைபாடத்தொடங்கியது. மெக்பூபா முஹ்தியின் மகள் , என்சி கட்சியை, கடுமையான விமர்சித்தார். முன்னாள் பிரதமரான ஷேக் அப்துல்லாவையும் விட்டு வைக்காமல் வசைப...