ஆய்வகத்தில் தயாரிக்கலாம் பாலை....
பால் மற்றும் முட்டை ஆகிய உணவுப்பொருட்களை ஆய்வகத்தில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவிலுள்ள பர்ஃபெக்ட் டே என்ற நிறுவனத்தைத் தொடங்கிய உயிரி பொறியாளர் ரியான் பாண்டியா, சோயாவிலிருந்து பால் பொருட்களைத் தயாரித்து வருகிறார். இந்த பாலில் எதிர்பார்க்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இப்போது வரை க்ரீம் சீஸை தயாரிக்க முடியாவிட்டாலும் ஐஸ்க்ரீமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த வகையில் விலங்குகளுக்கு மாற்றாக தாவரங்களின் புரதங்களிலிருந்து உணவுப்பொருட்களைத் தயாரிப்பது புதிதல்ல. ரியானின் நிறுவனத்தைப் போலவே அங்கு வேறு பல நிறுவனங்களும் பால் பொருட்களைத் தயாரித்து வருகின்றன. இதில் புதுமையான விஷயம்,நொதிக்க வைக்கும் முறையில் நுண்ணுயிரிகளிடமிருந்து குறிப்பிட்ட வேதிப்பொருளை பெற்று அதிலிருந்து பால் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சிதான். இதனை புதிய முறை என்று கூறமுடியாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரொட்டி, யோகர்ட், சீஸ், மதுபானங்கள் நொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(F