இடுகைகள்

சுதீர் பாபு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளர்த்த அப்பாவைக் காப்பாற்ற, பெற்றெடுத்த அப்பாவிடம் பணத்தை கொள்ளையடிக்கும் மகன்!

படம்
 மா நானா சூப்பர் ஹீரோ சுதீர்பாபு, சாயாஜி ஷிண்டே தெலுங்கு எப்போதுமே ஜிம் பாய் போல உலாவும் சுதீர்பாபு, இம்முறை சண்டைக் காட்சிகளே இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், படத்தில் நெகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியும் இல்லை. அனைத்துமே மிக மேலோட்டமாக உள்ளது. ஒரு தந்தை கையில் காசு இல்லை என்பதால் பிள்ளையை மதர்தெரசா என்ற அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். அந்த குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் வளர்ப்புதந்தை சாயாஜி ஷிண்டே. ஆனால் என்ன துரதிர்ஷ்டமோ, அவர் வாழ்க்கை குழந்தை வந்த பிறகு தலைகீழாகிறது. மனைவி இறக்கிறார். வேலை போகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சியடைய கடன்காரராகிறார். வளர்ப்பு பிள்ளை ஜானியை கரித்துக்கொட்டுகிறார். மகன்தான் அப்பா செய்யும் பித்தலாட்டங்களுக்கு கடன் வாங்கி காசு கட்டுகிறார். ஜானி மெக்கானிக் கடை ஒன்றை வைத்திருக்கிறார். அதை வைத்தே பிழைப்பு ஓடுகிறது. இந்த நிலையில் பெற்ற அப்பா, மகன் ஜானியைத் தேடி வருகிறார். அப்போது ஜானி, அவர் தனது அப்பா என தெரியாமலேயே அவருக்கு கார் ஓட்டுகிறார். சில நூறு மைல்கள் ஒன்றாக பயணிக்கிறார்கள். அந்த சமயம், வளர்த்த அப்பா சீன...

அக்காவின் சினிமா கனவை நிறைவேற்ற அப்பாவுடன் போராடும் மகள்! - ஆ அம்மாயி குறின்ஞ்சி மீக்கு செப்பாலி

படம்
  ஆ அம்மாயி குறின்ச்சி மீக்கு செப்பாலி இயக்கம் மோகன் கிருஷ்ணா இந்திரகாந்தி இசை விவேக் சாகர் கீர்த்தி ஷெட்டி, ஶ்ரீகாந்த் அய்யங்கார், வெண்ணிலா கிஷோர் சினிமாவுக்குள் சினிமா எடுக்கும் கதை. வணிகப் படங்கள் எடுக்கும் இயக்குநர், குப்பைத்தொட்டியில் கிடந்து பிலிம் ரோல் ஒன்றை எடுக்கிறார். அதை வீடியோ மாற்றும்போது அழகான பெண் ஒருவரைப் பார்க்கிறார். அந்த பெண்ணை அடுத்த படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார். ஆனால் அந்த பெண் நீங்கள் பார்த்த படத்தில் உள்ள பெண் நானல்ல, தனது அக்கா என்கிறார். அவரது அக்காவிற்கு என்ன ஆனது, பிலிம் ரோல் எதற்காக குப்பையில் வீசப்பட்டது என்பதை அறிந்துகொள்ளும் பயணம்தான் படத்தின் மையக் காட்சி. வணிக வெற்றிகளை பெறும் இயக்குநர், தனது மனம் சொல்லும்படி ஒரு படத்தை எடுக்க நினைக்கிறார். அதில் வரும் பெரிய தடை தனக்குப் பிடித்த பெண் நாயகியாக   வரவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அந்த பெண் ஒரு கண்மருத்துவர். அவள் மட்டுமல்ல அவளது குடுபத்தாருக்கே சினிமா என்றால் உடம்பில் அமிலம் தடவியது போல. அவ்வளவு எரிச்சல். அவர்கள் அப்படி எரிச்சல்படவும் கோபம் கொள்ளவும் காரணமான ஒரு சம்பவம் கடந்தகாலத...