இடுகைகள்

விண்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்கல் மோதும் கிராம மக்களின் நிலை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  18.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது. சூரியனைப் பார்க்கவே முடியவில்லை. டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை. அதற்கும் போட்டி போட்டு ர.ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள். சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்?  ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர். அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி. அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை. இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள், மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.  இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன். மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது. படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன. அவற்றையும் இனி படிக்க வேண்டும்.  துப்பறியும் சாம்பு - 2 200 பக்கங்களைத் தாண்டிவிட்டேன். தேவனுடைய

பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்துகள்!

படம்
பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்து! வாழ்க்கை  என்பது அழிவுக்குப் பிறகு மீண்டும் தொடங்கக் கூடியது. இப்படித்தான் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  பூமியில் உயிரினங்கள் உருவாகி வாழத் தொடங்கின என சொல்லுகிறார்கள் சில அறிவியலாளர்கள். இக்காலகட்டங்களில் விண்கல் மோதல், உயிரினங்களின் அழிவு, மீண்டும் உயிரினங்களின் தோற்றம் என மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இந்த சுழற்சி நிற்காமல் தொடர்கிறது. இப்போது முந்தைய காலத்தை விட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இனி வரும் ஆபத்துகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.  விண்கல் தாக்குதல் 6,600 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய பெரும் விண்கல் தாக்குதலால் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து போயின. எதிர்காலத்திலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? 10,000 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி பெரும் விண்கல் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுபற்றிய கட்டுரையொன்று நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், சூரிய மண்டலத்தில் உள்ள பல்லாஸ் (pallas), வெஸ்டா (vestas) இரு கோள்கள் பூமியைத் தாக்கினால் உயிரினங்