இடுகைகள்

உயிரி எரிபொருள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயிரி எரிபொருள்(பயோ ஃப்யூல்) - காட்டிலுள்ள உயிரினங்களை அழிக்கும் எரிபொருளாக மாறிய கதை!

படம்
கரிம எரிபொருட்களுக்கு மாற்றாக நிறைய நாடுகள் உயிரி எரிபொருட்களை பரிந்துரைக்கின்றன. அப்படி மாறினால் சூழலுக்கு ஆபத்து ஏற்படாது என பரப்புரை செய்யப்படுகிறது. உண்மையில் அது தவறான வாதம். உயிரி எரிபொருட்களை விளைவதற்கு பயன்படுத்தும் உரங்களுக்கு அடிப்படையானதே கரிம எரிபொருட்கள்தான். அவை இல்லாமல் எப்படி உயிரி எரிபொருட்களுக்கு அடிப்படையான பயிர்களை விளைவிக்க முடியும்? உணவுப்பயிர்களை விளைவிப்பது குறைந்துவரும் சூழலில் ஒருவர், உயிரி எரிபொருட்களுக்கான பயிர்களை விளைவித்தால் அங்கு சூழல் என்னாகும்? விரைவில் நாடு உணவு தானியங்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்பதே நடைமுறை உண்மை. உயிரி எரிபொருட்களில் முக்கியமானது, பனை எண்ணெய். அதாவது பாமாயில். இதை எப்படி விளைவிக்கிறார்கள்? இந்தோனேஷியா, மலேசியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் மழைக்காடுகளை வெட்டி எறிந்துவிட்டு அங்கு பனைமரக்கன்றுகளை நட்டு பனை எண்ணெய்யை உற்பத்தி செய்கிறார்கள். உணவு பயிர்களுக்கு மாற்றாக பணப்பயிர்களை விளைவிப்பது, ஒருகட்டத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தைக் கொண்டு வரும். மேலும், அமெரிக்காவில் வாகனங்களுக்கு எரிபொருளாக சோளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன...

தெரியுமா - உயிரி எரிபொருள்

படம்
  pixabay உயிரி எரிபொருள் உயிரி எரிபொருள்,  தாவரங்கள், பாசி, விலங்கின்  கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரிம எரிபொருட்களில் மாசுபாடு அதிகம். உயிரி எரிபொருட்களில் மாசுபாடு குறைவு என்பதோடு அதனை எளிதாக புதுப்பிக்க முடியும். உயிரி எரிபொருளைத் தயாரிக்க, பாசி  ஏற்ற இயற்கை ஆதாரம் என  சூழலியலாளர்கள் கூறுகின்றனர். சோளத்திலிருந்து எளிதாக உயிரி எரிபொருள் தயாரித்து வருகிறார்கள். இதற்கு, பயோ எத்தனால் என்று பெயர். அமெரிக்காவில் இம்முறையில்  உயிரி எரிபொருளைத் தயாரிக்கிறார்கள்.  உயிரி எரிபொருள் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம். சூரிய ஆற்றல், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாசி வளர்ச்சி பெறுகிறது. பாசியை அறுவடை செய்து அதிலிருந்து எரிபொருளை சுத்திகரித்து பெறுகிறார்கள். இதனை எரிவாயு,பெட்ரோல், டீசல் போல வாகனங்களில் பயன்படுத்தலாம். இதனை எரிக்கும்போது குறைந்தளவு கார்பன் டைஆக்சைடு வாயு வெளியேறும். இது சுழற்சியாக நடைபெறும்.  எரிபொருளின் தேவைக்காகவே பயிர்களை விளைவித்தால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார மற்றும் சூழலியலாளர்கள் ...