இடுகைகள்

கிருஷ்ணமூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சரியான கல்விமுறையே மனிதகுலத்திற்கான பேருதவி! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்களை மாறுபட்டவர்களாக்கும் கல்வி பிள்ளைகளை நீங்கள் கவனமாக பார்த்தால் விளையாடும்போது, படிக்கும்போது பார்த்தால் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளலாம். அவர்களின் மீது பெற்றோர்கள் தமது முன்முடிவுகளை, பயத்தை, ஆசைகளை, நிறைவேறாமல் போன கனவுகளை திணிக்க கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பிள்ளைகளிடம் திணித்து அவர்களை குறிப்பிட்ட வகையில் தீர்மானிக்க முயல்வது தவறு. பிள்ளைகளின் மீது வேலியைப் போட்டு உலகத்தோடு அவர்கள் கொண்டுள்ள உறவைத் தடுக்க கூடாது. நம்மில் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக பல்வேறு லட்சியங்களை அடைவதற்காக பயிற்சி கொடுத்து வளர்க்கிறார்கள். திருப்தி, சுகமான சூழ்நிலை ஆகியவற்றை உரிமை, ஆதிக்கம் செலுத்தும் குணங்களின் மூலம் பெற்றோர் அடைகின்றனர். பெற்றோர் பிள்ளைகளுடன் கொண்டுள்ள உறவு என்பது மெல்ல தண்டனையாக மாறுகிறது. ஆசை, ஆதிக்கம் என இரண்டையும் தெளிவாக புரிந்துகொள்வது குழப்பமான செயல்பாடாக உள்ளது. ஆசை, ஆதிக்கம் என இரண்டு செயல்பாடுகளுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. ஆதிக்கமாக உள்ளவருக்கு அடிமையாக சேவை செய்வது என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல

பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறதா?

படம்
பள்ளிசெல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது!  2018-19 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, இந்தியா. ஆனால், ஆய்வில் இந்திய மக்கள்தொகை எதிர்பார்த்த எண்ணிக்கையை விட குறையும் என பொருளாதார ஆய்வறிக்கை தகவல் கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளது.  அதேநேரம் 2030 ஆம் ஆண்டு அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கையையும் இந்திய அரசு சமாளிக்கவேண்டிய தேவை உள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டியது, பள்ளிக்குச்செல்லும் 5 முதல் 14 வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை குறைவைத்தான். தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும் அரசு பள்ளிகளை மூடி வருகின்றன. காரணம், போதிய மாணவர்கள் அங்கு இல்லாததுதான். மாநில அரசுகள் புதிய பள்ளிகளைத் தொடங்குவதை விட மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை இணைப்பது நல்லது என அறிவுறுத்தல்களையும் இந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை குறையும். இதனால் அர