இடுகைகள்

ஜிஎஸ்டி வரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடப்பதற்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பார்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை. மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன. சாப்பிட அறைக்கு வரும்போது, பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது. அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார். ஆச்சரியம்... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன்.  அடாத மழையிலும் என்னுடைய தேவை  உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது.  எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார். மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன். ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன். மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை பிரன்ட்லைனில் பார்த்தேன். படிக்கவேண்டும். நன்றி!  அன்பரசு