இடுகைகள்

மருத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்டவன் அளிப்பதல்ல; நாம் வாழும் மோசமான சூழலால் உருவாவதே நோய்!

படம்
  கிருமிகளின் ஆக்கிரமிப்பு உடலுக்குள் எப்போதும் நுண்ணுயிரிகள் உண்டு. இவற்றில் முக்கியமானது வைரஸ், பாக்டீரியா. இதில் வைரஸ் ஆபத்தானது. பாக்டீரியாவும் நோய்களை ஏற்படுத்துகிறது. ஆனால், வைரஸ் அளவுக்கு அல்ல.  உடல் நுண்ணுயிரிகளை எப்போதும் வெளியேற்றவே முனைகிறது. ஆனால், வைரஸ், பாக்டீரியா எப்படியேனும் உள்ளே வந்துவிடுகிறது.  உடலுக்கு நோய்க்கிருமி பற்றி பழக்கி, நோயைத் தடுக்க தடுப்பூசிகள் பயன்படுகின்றன. தடுப்பூசிகள் பல்லாண்டு காலம் பயன்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள், மருந்தின் செயல்பாடு ஆகியவை குறித்து வைக்கப்பட்டு பக்க விளைவுகளைக் கட்டுப்படுத்த கற்கிறார்கள். ஆனால் அவசரச் சூழலில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், அதைப் பயன்படுத்துபவர்களுககும் ஆபத்தாக மாறுகிறது.  சில போலி அறிவியல்வாதிகள் அரசியல் ஆதாயங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையில்லை என்பார்கள். தடுப்பூசியின் தொடக்க காலத்தில் பக்கவிளைவுகளை பெரிதுபடுத்தி பேசுவார்கள். இப்போது கூட தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு அரசு செலுத்திய தடுப்பூசி காரணமாக பலருக்கும் நீரிழிவுநோய் வந்துவிட்டது என வதந்தி பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. நீங்கள...

சுயநலம் கொண்ட பணக்கார குழுக்களால் ஏற்படும் பேராபத்து!

படம்
அமெரிக்கா, முன்பு போல வலிமையான நாடு கிடையாது. அங்கு 85 மில்லியன் மக்களுக்கு மருத்துவ காப்பீடு கிடையாது. அரசு பள்ளிகள் பலவீனமாகி வருகின்றன. அரசு தொழிலாளர் உரிமை காக்கும் அமைப்பு மூடப்பட்டு விட்டது. இனவெறி, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போலி வதந்திகள் உருவாக்கப்பட்டு பரவி வருகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவான அமெரிக்க அதிபர், பணக்காரர்களுக்கு சரக்கு வாகன ஓட்டுநர், செவிலியர் ஆகியோரை விட குறைந்த வரியை விதிக்கிறார். இதற்கு காரணம் என்ன, சர்வாதிகாரம் எப்படி பணக்கார தொழிலதிபர்களால் நடைமுறைப்படுத்தப் படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் விளக்கி எழுதியிருக்கிறார். வலதுசாரி இன மதவாதம் வளருவது பற்றி கவலை கொள்கிறீர்களா? இந்த நூல் உங்களுக்காகவே!

ஓமியோபதி மருத்துவ முறையை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் வரலாறு!

படம்
      மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை 1755ஆம் ஆண்டு, ஓமியோபதியை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் பிறந்தார். பிறந்த தேதி ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி. இவரது தந்தை பீங்கானில் பல்வேறு ஓவியங்களை தீட்டும் திறமை கொண்ட கலைஞர். புனித ஆஃப்ரா என்ற பள்ளியில் செவ்வியல், நவீன மொழிகளைக் கற்றார். ஆங்கில மருத்துவமுறையை உருவாக்கியவரான ஹிப்போகிரேடஸின் மருத்துவ விளக்க நூல்களை படித்தார். அவரின் மருத்துவ தத்துவத்தை வைத்தே ஓமியோபதியின் மருத்துவத்தை உருவாக்கினார். ஒத்தது ஒத்ததை குணமாக்கும் என்பதே கொள்கை, ஒத்தது அல்லது எதிரானது நோயைத் தீர்க்கும் என ஹிப்போகிரேடஸ் கூறினார். 1775ஆம் ஆண்டு சாமுவேல், மருத்துவப் படிப்பை படிக்கத் தொடங்கினார். அவருக்கு வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் பிளென்சிஸ் ஆதர்சமாக இருந்தார். அந்த காலத்தில் பிளென்சிஸ், மருத்துவத்தில் பல்வேறு சாதனைகளை செய்தவர். 1779ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம்தேதி, சாமுவேல் மருத்துவப்பட்டம் வென்றார். எர்லாங்கன் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டத்தை வழங்கியது. 1781ஆம் ஆண்டு சாமுவேல் மாவட்ட மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஹென்ரிட் என்ற பெண்ணை திருமணம...

மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள்

      மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹோமியோபதி மருத்துவம் புழக்கத்தில் உள்ளது. ஒப்புநோக்கில், தெற்கை விட வடக்கில் ஹோமியோ மருத்துவர்கள் அதிகம். இதற்கு காரணம், ஆங்கில மருத்துவர்கள் அங்கு குறைவு. அவர்களை ஏனோ அரசு சரியான சம்பளத்தில் நியமனம் செய்யவில்லை. அரசின் அடிப்படை நோக்கமே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதுதானே? மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவசியமா என்ன?  நாட்டின் ஆட்சித்தலைவரே போலி அறிவியலை மனமுவந்து ஊக்குவிக்கும்போது, அலோபதி பின்தங்குவதில் ஆச்சரியமென்ன? சமுதாய மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி குறைந்துவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு மட்டுமே நிதி கொடுத்து குறைந்த மருத்துவர்களை வைத்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கிறார்கள். அடிப்படை தேவைகளுக்கான நிதியை கோவில்களைகட்ட, சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களை இடிக்க, மதக்கலவரங்கள் செய்ய வடக்கு தேசம் பயன்படுத்துகிறது. அதேபோக்கு, தெற்கிலும் தொடங்க அச்சாரம் ஆந்திரத்தில் போடப்பட்டுள்ளது. அடிப்படையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டி...

கிராமம், பழங்குடிகள் வாழும் இடங்களுக்கு சென்று மருத்துவ மாணவர்கள் சிகிச்சையளிக்க முன்வரவேண்டும் - நேரு உரை

படம்
        மருத்துவத்தில் இந்தியா தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளது. நமக்கு முன்னும் பின்னும் ஏராளமான மருத்துவர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள் புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் தேவையும் சேவையும் இந்தியாவைக் கடந்தும் கூட இருந்துள்ளது. இன்று யோசிக்கும்போது தொன்மை மருத்துவர்கள், வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களை மக்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அவர்கள் திறமையான மருத்துவர்களாக இருந்ததோடு, காலத்தால் மேம்பட்ட சிகிச்சை முறையைக் கையாண்டனர். அவர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களையே நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். அதேசமயம், நாம் இன்னும் பழைமையான முறைகளை விட்டு நவீனமாக காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. மக்களுக்கு அதிகளவு உதவி தேவைப்படும் சமயத்தில் கூட அறிவை புத்துயிர்ப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது செயல்படவிருக்கும் மருத்துவ நிறுவனம், அறிவியலை அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். பழைமையான முறைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறவில்லை. அவை சரியானதாக இருந்து லாபம் கிடைக்க கூடியதாக இருந்தால் அதை பின்பற்றலாம். பழை...

மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும், தரமும் வேறுபடுவது எங்கு? - ஜவகர்லால் நேரு உரை

படம்
              எய்ம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராஜ்குமார் அம்ரித் கௌருக்கு அஞ்சலி செலுத்துவதில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன். என்னுடைய நினைவில் மருத்துவமனையையு்ம, தலைவரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அந்தளவு அவரின் பணி, மருத்துவமனையோடு ஒன்றிவிட்ட ஒன்று. மருத்துவமனையின் உருவாக்கம் தொடர்பாக கௌர், பல்வேறு விஷயங்களை என்னோடு விவாதித்திருக்கிறார். செயல்பாடுகளில் பிரச்னைகள் வரும்போது என்னைத் தேடி வந்திருக்கிறார். இன்று அவர் நம்முடன் இல்லை என்பது மனதளவில் வேதனை அளிப்பதாக உள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தபோது, சரி என இசைவு தெரிவித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனை அளவிலும் தரத்திலும் வாக்குறுதி அளித்த வகையில் சிறப்பாக மேம்பட்டுள்ளது. செயல்பாடுகளும் பாராட்டு்ம தரத்தில் உள்ளது. முதுகலை படிப்பு படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியான சிறந்த இடமாக இம்மருத்துவமனை உள்ளது. சிகிச்சையின் உயர்ந்த தரத்தை தொடர்ந்து பராமரிக்க பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்து வருகிறார்கள். எண்ண...

ப்ரீடெர்ம் (preterm) குழந்தைகள் இறப்பு!

படம்
                 மருத்துவம் ப்ரீடெர்ம் என்றால் என்ன? தாயின் வயிற்றிலுள்ள குழந்தை 37 வாரங்களுக்கு முன்பாகவே பிறப்பதை ப்ரீடெர்ம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் குழந்தைகள் உயிரோடு இருந்தாலும், அவர்களை பாதுகாப்பது நெடிய போராட்டமாகவே இருக்கும். குழந்தை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக பிறப்பது ஆபத்தானது. அதில் சில பிரிவுகள் உள்ளன. அதீதம் இருபத்தெட்டு வாரங்களுக்கு குறைவாக பிறப்பது அபாயம் இருபத்தெட்டு வாரங்களில் பிறப்பது. மத்திமம் முப்பத்தி இரண்டு அல்லது முப்பத்து ஏழு வாரங்களில் பிறப்பது இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கணக்குப்படி 13.4 மில்லியன் குழந்தைகள் முழுமையாக பிரசவகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே பிறந்துள்ளன. அதாவது பத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. 2019ஆம் ஆண்டு மட்டும் ஒன்பது லட்சம் குழந்தைகள் முன்கூட்டியே பிறந்து பிறப்பு சிக்கல்களால் இறந்து போயுள்ளன. காரணம் என்ன? அடுத்தடுத்த கர்ப்பங்கள், குழந்தை திருமண கர்ப்பம், நோய்த்தொற்று, நீரிழிவு, ரத்த அழுத்தம், மரபணு பிரச்னைகள், மோசமான ஊட்டச்சத்து நிலை

ஏஐ முன்னோடிகள்!

படம்
  ஏஐ முன்னோடிகள்  டைம் இதழில் வெளியான ஏஐ சிறப்பிதழில் இடம்பெற்ற பிரபலமான ஏஐ ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் இவை.  ஜேம்ஸ் மான்யிகா துணைத்தலைவர், ஆராய்ச்சி தொழில்நுட்ப சங்கம், கூகுள் james manyika google ஏஐ தொழில்நுட்பத்தை சந்தையில் பிறருடன் போட்டியிடுவதை விட அதை சரியான காரணத்திற்காக பயன்படுத்தவேண்டும் என ஜேம்ஸ் நினைக்கிறார். இதனால்தான், அவர் காலநிலை மாற்றம், ஆரோக்கியம், பொழுதுபோக்கு என பரந்துபட்ட துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை விரிவாக்க முயன்று வருகிறார். வெள்ள அபாயம் பற்றிய ஃப்ளுட் ஹப் என்ற தொழில்நுட்பம் எண்பது நாடுகளில் விரிவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலம் வெள்ள அபாயத்தை முன்னரே மக்கள் அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம்.  அதேசமயம் ஏஐ தவறானவர்கள் குறிப்பாக சர்வாதிகார அரசின் கைகளுக்கு சென்றால் ஏற்படும் அபாயம் பற்றியும் பிரசாரம் செய்கிறார். பேசுகிறார், எழுதி வருகிறார். ஆலோசனை அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறார். தொழில்நுட்பம் வேகமாக சந்தைக்கு வந்தால் வணிகம் சிறக்கும், ஆனால் ஜேம்ஸ் வேகத்தை விட விவேகம் முக்கியம் என நினைக்கிறார்....

வைத்தியரின் கல்லறையைத் திருடச்செல்லும் நல்லவர்களின் கூட்டம்!

படம்
  மெடிசின் கிங் காபின் சீன திரைப்படம்  ஒருமணிநேர படம்  நாயகன், சிறு மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அதற்கு ஒரு இளம்பெண் வருகிறாள். வந்தவள், தன்னுடைய மாமா, நாயகனின் அப்பாவுடன் மெடிசின் காபின் பள்ளத்தாக்குக்கு சென்றார். ஆனால் திரும்பவில்லை. உன்னுடைய அப்பா தான் வராதபோது மகன் உன்னை அழைத்துக்கொண்டு அதே இடத்திற்கு செல்லச்சொன்னார் என கடிதம் ஒன்றைக் காட்டுகிறாள். நாயகனின் உதவியாளர் அவளை கிண்டல் செய்து பேச, மருத்துவமனையில் சண்டை தொடங்குகிறது.  நாயகியின் இனக்குழுவில் 35 வயதுக்கு மேல் யாருமே வாழ்வதில்லை. ஆயுள் முடிந்துவிடும் சாபம் உள்ளது. அதை சரிசெய்யவே அவள், நாயகனை அழைத்துக்கொண்டு பள்ளத்தாக்குக்கு சென்று நோய்க்கு தீர்வறிய நினைக்கிறாள். கூடவே, வெளிநாட்டு மருத்துவர்களின் வற்புறுத்தலில் ரவுடி ஒருவரும் நாயகனை அதே இடத்திற்கு செல்லலாம் வா என்று அழைக்கிறார். நாயகனுக்கு அங்கு செல்வதில் பெரிய விருப்பமும் இல்லை. மறுப்பும் இல்லை. அவன் அங்கு சென்று எதையும் பெறவேண்டும் என நினைக்கவில்லை.  நாயகன், நாயகி, கூடவே மொட்டைத்தலை வெளிநாட்டுக்காரர்களின் கையாள் ஆகியோரோடு போகும்போது, சிறு கொள்...

நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை!

படம்
  நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை! கில் இட்  கொரிய டிராமா 12 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி  ரஷ்யாவில் இருந்து கொரியா வரும் கூலிக்கொலைகாரன், ஆதரவற்ற குழந்தைகளின் உறுப்புகளை திருடி பணக்காரர்களுக்கு  வழங்கி வரும் குழுவை அறிந்து அதை அழிக்க முயல்வதே கதை. இப்படி செய்வதில் அவனுடைய கடந்த கால வரலாறும், பறிகொடுத்த அன்புக்குரிய உயிர்களும் உள்ளன.  நாயகன் கிம் சோ ஹியூனுக்கு அதிக வசனங்கள் இல்லை. அவனுக்கும் சேர்த்து அவனுடைய தோழி ஹியூன் ஜின் பேசிவிடுகிறாள். அவள் பேசாதபோது கிம்மின் துரோக நண்பன் பிலிப் அதை செய்கிறான். எனவே வசனம் இல்லையே என கவலைப்படவேண்டியதில்லை. பிலிப் தனது நண்பன் கிம்முக்கு செய்யும் துரோகம் சாதாரணமானதில்லை. கிம் காக்க நினைக்கும் அவனது தங்கை போன்ற சிறுமியை காசுக்காக கொல்ல காட்டிக்கொடுக்கிறான். ரஷ்யாவில் இருந்து கொரியாவுக்கு நாயகன் கிம் வருவதற்கு, அவனது வளர்ப்பு அப்பா வாங்கிக்கொண்ட சத்தியமும், அவர் துப்பாக்கிக் காயம் பட்டு இறந்துபோவதுமே முக்கிய காரணம். அதோடு, அவனது கடந்த கால வரலாறுக்கும் கொரியாவிற்கும் சம்பந்தம் உள...

சீனாவின் தொன்மைக்காலத்திற்கு சென்று மருத்துவராகி சாதனை புரியும் நவீனகால மருத்துவ மாணவன்!

படம்
  இன்கார்னேடட் லெஜண்டரி சர்ஜன்  சீன காமிக்ஸ்  104 அத்தியாயங்கள்  நவீன உலகில் மருத்துவராக உள்ளவர், தொன்மையான சீனாவின் காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அதாவது அவரது ஆன்மா செல்கிறது. அங்கு குவா என்ற வாழ்ந்து கெட்ட குடும்ப கடைசிப்பிள்ளையின் உடலில் புகுகிறது.  குவாபு, வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றவர், ஊருக்கு வந்திருப்பார். அந்த நேரத்தில் கொள்ளையர்கள் அங்கு புகுந்து தாக்கி கிராமத்தினரை கொலை செய்து சென்றதில் குவாபு என்ற கடைசிப்பிள்ளையும் நெஞ்சில் வெட்டுபட்டு இறந்துபோயிருப்பார்.  படித்துவிட்டு வந்து அரசு தேர்வு எழுதினால் ஒரு வேலை கிடைக்கும் குவா குடும்பம் வறுமையில் வாடாது என்பதே அவர்களின் ஆசை.  வழி வழியாக அரசு அதிகாரிகளாக வாழ்ந்த குடும்பம், இப்போது வறுமையில் தத்தளிக்கிறது. சாப்பிட சோறே இல்லாத கொடுமை எல்லாம் கிடையாது. உணவில் இறைச்சி வாங்கி சேர்க்க முடியாத வறுமை. குவாபுக்கு இரண்டு அண்ணன்கள். ஒருவர், அரசு தேர்வை எழுதி லஞ்சம் கொடுத்து வேலைக்கு போகமாட்டேன் என உறுதியாக இருக்கிறார். அடுத்தவர், தற்காப்புக் கலை கற்று ராணுவத்தில் சேரவிருக்கிறார். மூன்றாவதாக உள்ள கு...

கருப்பினத்தவர்களுக்கு மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் மனிதர்கள்!

படம்
  லியாண்ட்ரிஸ் லிபுர்ட் leandris liburd கருப்பினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்க சிடிசி அமைப்பில் ஹெல்த் ஈகுவிட்டி என்ற அமைப்பின் இயக்குநராக இருந்து செயல்பட்டு வருகிறார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக பணியில் நிறம், இனம் கடந்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.  ஆரோக்கியம் என்றவுடன் உணவுமுறை, உடற்பயிற்சியுடன் பலரும் நின்றுவிடுவார்கள், லியாண்ட்ரிஸ், ஒருவர் மருத்துவரைச் சென்று பார்க்க போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பது வரையில் கவனிக்கிறார். அரசின் சக துறைகள், மக்களின் இனக்குழு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு செய்து வருகிறார். அலுவலக பணியில் உள்ளவருக்கு நோய் என்றால் கூட சம்பள வெட்டுடன் விடுமுறை கிடைக்கும். அதை லியாண்ட்ரிஸ் மாற்றி, சம்பளத்துடன் விடுப்பு என்பதை நடைமுறையாக்கியிருக்கிறார். நாம் நமக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்தால்தான் நோய்களை எளிதாக முன்னதாக கண்டறிந்து தடுக்கமுடியும் என்றார் லியாண்ட்ரிஸ்.  -அலைஸ் பார்க் டைம் வார இதழ்  இமானி எல்லிஸ்  imani...

அம்மா பாசம் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள், குறைபாடுகள்!

படம்
  1950ஆம் ஆண்டுகளில் குழந்தைகள் தாய் மீது காட்டும் பாசம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் பேசப்பட்டன. இதை கப்போர்ட் லவ் என்று குறிப்பிட்டனர். குழந்தைகள் அம்மாவைச் சார்ந்தே இருப்பார்கள். காரணம், உணவுத்தேவை. பிறந்தவுடன் குழந்தைகள் உடனே இயங்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று வயது வரை அவர்களை பாதுகாத்தால் மட்டுமே அவர்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதை விலங்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிறக்கும் குட்டிகள் கண்விழித்துப் பார்க்கும்போது எது அசையும் பொருளாக இருக்கிறதோ அதை தங்களது அம்மாவாக கருதுகின்றன. இந்த இடத்தில் குட்டியின் தாய் இருக்கும். விலங்குகளின் பாச ஒட்டுதல் பற்றிய ஆய்வை உளவியல் ஆய்வாளர் கான்ராட் லாரன்ஸ் செய்தார்.  ஜான் பௌல்பை என்ற ஆய்வாளரும் இதேபோன்ற ஆய்வை செய்து காரண காரியங்களைக் கண்டுபிடிக்க முயன்றார். அவருக்கு கிடைத்த ஆய்வு முடிவுகள், லாரன்ஸ் கூறிய கருத்துகளுக்கு மாற்றாக இருந்தன. குழந்தை, அம்மா தவிர வேறு பலரிடம் ஒட்டுதல் கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாவுடன் கொண்டுள்ள உறவு தனிப்பட்ட ஒன்று. குழந்தை தனது தேவைகளை சிரிப்பு, அழுகை, முனகல் என பல...

மனநல குறைபாடு கொண்ட தம்பியின் பெயரில் கொலைகளை செய்யும் போலீஸ் அதிகாரி அண்ணன்!

படம்
  ஹரே ராம் - கல்யாண் ராம், பிரியாமணி ஹரே ராம் கல்யாண்ராம் 1,2, பிரியாமணி இரு பிள்ளைகள். ஒருவன் மென்மையானவன். இன்னொருவன் பிறப்பாலே வன்முறை எண்ணம் கொண்டவன். வன்முறை என்பதற்காக சீரியல் கொலை செய்பவன் அல்ல. யாராவது அவனை தூண்டிவிட்டால் எரிச்சல் ஊட்டினால் அவர்களை சும்மா விடுவதில்லை. மாறுகை மாறுகால் வாங்கும் அளவுக்கு கோபம் கொண்டவனாக இருக்கிறான். மனநல குறைபாட்டை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். அதுதான் படத்தின் பெரும் குறை. ஹரி நிதானமானவன், ராம் வன்முறையான ஆள். அம்மாவுக்கு இரு பிள்ளைகளும் முக்கியம். எனவே, தனது இரட்டையர்களாக பிறந்தவர்களைக் காக்க தானே ராமைக் கூட்டிக்கொண்டு தனியாக செல்கிறாள். அவளது கணவர் ஹரியை வளர்க்கிறார். ராமை திட்டியதால் மனைவி பிரிந்துபோனாள் என மனம் கலங்கி உடல் நலம் கெட்டு இறக்கிறார்.   நகரில் ஹரி உதவி கமிஷனராக உள்ளார். அங்கு சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வரும் பத்திரிகையாளர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அதை முதலில் தற்கொலை என அனுமானித்தாலும் ஹரி அது கொலை என்று கூறி சந்தேகங்களை அடுக்கிறார். அடுத்து, அரசியல்வாதியின் மருத்துவர் தம்பி ஒருவர...

கனவில் வன்முறை செய்யும் மனிதர்கள் - பாராசோம்னியா ஆபத்து

படம்
  பாராசோம்னியா ஆபத்து   இன்சோம்னியா பிரச்னையே பலருக்கும் தீரவில்லை. ஆனால், இப்போது வந்திருப்பது பாராசோம்னியா. இன்சோம்னியா பிரச்னை   என்பது தூக்கமின்மை. தூங்காமல் ஏதோ ஒன்றை இரவிலும் செய்துகொண்டிருப்பார்கள். தூங்கும் நேரம் மிக குறைவாக இருக்கும். பாராசோம்னியாவில் வன்முறையான செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக குற்றவழக்குகளும் பதிவாகி வருகின்றன. குற்றவாளி கொலையை, திருட்டை செய்கிறார் என்றால் அதற்கென ஒரு காரணம் வேண்டும் அல்லவா? தூக்கத்தில் செய்யும் விஷயங்கள் ஒருவருக்கு நினைவிலேயே இல்லாதபோது அவரை நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்குதான் கிராமர் போர்னிமன் துணைக்கு வருகிறார். இவர், ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் என்ற அமைப்பில் வேலை செய்துவருகிறார். நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து என பறந்து சென்று பாராசோம்னியா பற்றி விளக்கம் கொடுத்து வருகிறார். நீதிபதிகளுக்கு, ஜூரிகளுக்கு தூக்கத்தில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்பது பற்றிய தெளிவும் அறிவும் கிடையாது. எனவே, கிராமர் அதை அவர்களுக்கு விளக்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் தொடங...
  ஓப்பன் மைண்ட்ஸ் 2023 விக்ரமாதித்ய மோட்வானே 46 இந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் உதவி இயக்குநர். 2010ஆம் ஆண்டு உடான், 2013ஆம் ஆண்டு லூட்டெரா ஆகிய மறக்க முடியாத திரைப்படங்களை உருவாக்கியவர். தனது சினிமா பயணத்தில் தொடக்க கால சினிமா செட்டில், மிக இளம் வயது கொண்ட நபராக இருந்து தற்போது செட்டில் அதிக வயதான நபராக மாறியிருக்கிறார். அப்போதும் இப்போதும் மாறாத காதலுடன் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். 1940ஆம் ஆண்டில் இந்தி சினிமா உருவாக்கப்பட்டதை ஜூப்ளி என்ற வெப் சீரியசாக எடுத்து வருகிறார். ‘’கதை சொல்லும் முறை, பாத்திரங்கள் என அனைத்துமே வேறுபட்டவை’’ என ஜூப்ளி வெப் சீரிஸ் பற்றி கூறுகிறார். இந்தி சினிமாவின் வெளியை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டு செல்லும் நவீன இயக்குநர்களில் மோட்வானே முக்கியமானவர். ஆபிரஹாம் வர்கீஸ் 68 மருத்துவர், எழுத்தாளர் ஒரு மருத்துவர் நூல் எழுதுவதாக இருந்தால் என்ன எழுதுவார்? அவரது அறுவை சிகிச்சைகள், திறன் வாய்ந்த நுட்பங்கள், காப்பாற்றிய மனிதர்கள் இப்படித்தானே? ஆனால் ஆபிரஹாம் எழுதிய நாவலான தி காவ்னன்ட் ஆஃப் வாட்டர், அதன் கதை அளவில் புகழ்பெற்ற...