இடுகைகள்

வாள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!

படம்
 ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி மாங்கா காமிக்ஸ் ஹரிமாங்கா இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.  அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முற...

வெப்டூனிலுள்ள இரண்டு சுவாரசியமான காமிக்ஸ் கதைகள்.....

படம்
     அப்சொல்யூட் ரெய்ன் வெப்டூன்.காம் காமிக்ஸ் பழங்களை விற்கும் வணிகரின் மகன்தான் நாயகன். இஞ்சியோன் ஜியோக். தொடக்க காட்சியிலேயே பரபரப்பை பற்ற வைக்கிறார்கள். ஒரு வணிகரின் கைகளை வெட்டிவிட்டு, அவரின் சொத்துக்களை கொள்ளையிட்டு போனவனை, ஒழித்துக்கட்ட சில ஆட்களை அனுப்புகிறார்கள். நாயகனை கொல்ல கூலிக்கொலைகாரன் வருகிறான். அவன் பல்வேறு இடங்களில் விசாரிக்க, அதன் வழியாக கதை நகர்கிறது. அவன் பெண்களை விரும்பும் லோபி, எளியோருக்கு இரங்குபவன், சூதாடி, குடிகாரன் என நிறைய விஷயங்கள் சொல்லப்ப்படுகிறது. இறுதியாக நாயகன் தங்கியுள்ள இடத்திற்கு கூலி கொலைகாரன் செல்லும்போது, அவனை மூன்று வீரர்கள் தாக்கி கொல்கிறார்கள். அவர்கள் மூவருமே மாபெரும் வீரர்கள். அவர் எதற்கு நாயகனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே கூலி கொலைகாரன் செத்துப்போகிறான். அடுத்து நாயகிக்கான அறிமுகம். வாள் இனக்குழுவின் தலைவராக இருப்பவரின் மகள், வாள் பயி்ற்சி செய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் முன்னேற முடியவில்லை. அவர்களது இனக்குழுவை விட வலிமையாக உள்ள இன்னொரு இனக்குழுவைச் சேர்ந்தவன். நாயகியை மணம் செய்துகொள்ள முயற்சிக்கிறான்...

குடும்பத்தால் ஏற்படும் இறந்தகால அவமானங்களுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு பழிவாங்கும் இளைஞன்!

படம்
    மார்சியல் மாஸ்டர் ஃபிரம் மார்சியல் லைப்ரரி மங்காகோ.காம் முரிம் கூட்டணியில் கூலிப்படையில் வேலை செய்யும் தற்காப்புக்கலை வீரரான இளைஞருக்கு வேலை ஒன்றை கொடுக்கிறார்கள். வேலைக்கு மறுக்க முடியாதபடி அதிக காசும் கொடுத்து துணைக்கு இரண்டு வலுவான வீரர்களையும் அனுப்பி வைக்கிறார்கள். நாயகன், ஒரு கற்பலகை ஒன்றை தேடி கொண்டு வந்து கொடுக்கவேண்டும். ஆனால், அதை அடையச் செல்லும் பாதை முழுக்க ஏராளமான பொறி அமைப்புகள். அதை உடைத்துக்கொண்டு போக முயன்றதில் நாயகனைத் தவிர்த்து அனைவருமே இறந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு கற்பலலை உள்ள இடத்தில் அம்பு, ஈட்டி, விஷம் என நிறைய பொறிகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். நாயகன் எப்படியோ தப்பி பிழைத்து சுரங்கம் போன்ற பாதை வழியாக ஊர்ந்து சென்று கற்பலகையை கண்டுபிடித்துவிடுகிறான். அதிலுள்ள வினோதமாக எழுத்துகளை தன் கையைக் கடித்து அந்த ரத்தம் மூலமாக எழுதிக்கொள்கிறான். கிரந்த எழுத்துக்கள் போல பார்க்க வினோதமாக படிக்க பொருளை அறியமுடியாதபடி இருக்கிறது கற்பலகையின் தொன்மை எழுத்துகள். அதை தொட்டு பார்க்கும்போது எதேச்சையாக விரலிலுள்ள ரத்தம் கல்லில் படுகிறது. உடனே கணினி உயிர் பெற்றதைப் ...

நாயகனுக்கும் உதவும் துணைப்பாத்திரம், இறுதியில் கதையின் நாயகனாக மாறினால்....

படம்
        ஐயம் போசஸ்டு ஸ்வார்ட் காட் மங்கா காமிக்ஸ் குன்மங்கா.காம் நகரில் உள்ள சிறுவன், காமிக்ஸ் ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறான். திடீரென அந்தக் கதையில் வரும் துணைப்பாத்திரமாக மாறி தொன்மைக் காலத்திற்குச் செல்கிறான். பத்தாண்டுகளுக்குள் தீயசக்தி இனக்குழுவோடு போர் நடக்கவிருப்பது அவனுக்கு முன்னமே தெரியும். அதாவது காமிக்ஸை படித்த காரணத்தால். அதற்கேற்ப நாயகனைக் கண்டுபிடித்து அவனுக்கு உதவி சண்டை போட வைப்பதுதான் கதை. நாயகன் மோ மோயங். நாம்கூங் குலத்தைச் சேர்ந்தவன். சரக்கு அடித்துவிட்டு பிறரை ஒரண்டு இழுப்பதுதான் அவனது வேலை. நகரில் உள்ள சிறுவனின் ஆவி, அவனது சுயநினைவு இல்லாத உடலில் புகுந்தபிறகு மாற்றம் ஏற்படுகிறது. அவனது காலை வெட்ட வந்த நாயகனிடம் மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்கிறான். அதேநேரம், அவனுக்கு உதவி நெருக்கமாகிறான். அதேநேரம், வாள் பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல வலிமை பெறத் தொடங்குகிறான். அவனைப் பற்றி பெற்றோருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. மாமா, மாமா பையன் என யாருக்குமே இவன் உருப்படுவான் என்ற எண்ணமில்லை. இந்த அவநம்பிக்கையை மோ முயோங் மெல்ல மாற்றி துணைப்பாத்திரத்தில் இருந்து மையப் பா...

பிழைத்திருப்பதே முக்கியம் என நம்பி வாழும் உளவாளியின் கதை!

          பிளட் டீமன் சீன காமிக்ஸ் தொடர் முரிம் கூட்டமைப்பில் உளவாளியாக உள்ள தீயசக்தி இனக்குழுவின் உளவாளி பிடிபட்டு கொல்லப்படுகிறான். சாகும் அவன் நான் இப்படி இறந்திருக்கக்கூடாது என நினைக்கிறான். அவனது ஆவி, பல பத்தாண்டுகளுக்கு முன்னர் செல்கிறது. தீயசக்தி இனக்குழுவால் பிடிபடுவதற்கு முன்னர், ஒரு விடுதியில் வாழ்கிறான். அவனுடன் இரட்டையர் இருவர் இருக்கிறார்கள். அங்கு, வரும் தீயசக்தி இனக்குழுவினர் குழந்தைகளை, இளைஞர்களை பிடித்துச் செல்கிறது. கடத்துகிறார்கள். நாயகன் தப்பியிருக்கலாம். ஆனால், அவனுக்கு பிரியமான சிறுவனைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி முன்னர் நடந்தது போலவே தீயசக்தி குழுவிடம் மாட்டிக்கொள்கிறான். ஆனால் இங்கு நடக்கும் விஷயங்கள் வேறு. இவன் அம்மாவின் பரிசாக வைத்திருக்கு்ம குறுங்கத்தி, அந்த கத்தியில் வாழும் தேவதை மூலமாக இருவரைக் கொல்கிறான். பிறகு பிடிபட்டு தீயசக்தி குழுவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். நாயகனுக்கு ஏற்கெனவே தீயசக்தி குழுவில் உளவாளியாக இருந்த அனுபவம்,பத்தாண்டு தகவல் சேகரிப்பு என கூடுதல் பலம் உள்ளது. அதை பயன்படுத்தி தன்னை தீயசக்தி இனக்குழுவினர் கொல்வ...

திட்டமிட்டு எதிரிகளை அழித்தொழித்து ரத்தக்களறியாடும் புரட்சித் தலைவன்!

படம்
  எதிரிகளை அழித்தொழிக்கும் புரட்சித் தலைவன்! ஹெவன்லி டீமன் நாட் லிவ் இன் நார்மல் லைஃப் சீன காமிக்ஸ் தொடர் 100+--- டிமிட்ரி குடும்பத்தின் மூத்தமகன் ரோமன். இவர் தற்கொலை செய்துகொள்ள அவரது உடலில் தொன்மை காலத்து தீயசக்தி இனக்குழுத் தலைவரின் ஆவி உள்ளே புக, நவீன காலத்தில் நடக்கும் அதிகார மேலாதிக்கம் உருவாகிறது. அதை பேசுகிற கதைதான் இது. டிமிட்ரி குடும்பம் சுரங்கத் தொழிலாளர்களாக இருந்து இரும்புத்தாதுவை தோண்டிஎடுத்து விற்று செல்வந்தர்களானவர்கள். அவர்களின் பின்புலத்தில் அரச குடும்பமோ, அல்லது வேறு சக்தி வாய்ந்த ஆட்களோ இல்லை. எனவே, அவர்களை வடகிழக்கு பகுதியில் செல்வந்தர்களாக மாறினாலும் கூட பிற குடும்பத்தினர் மதிப்பதில்லை. இதை ரோமன் கண்டுகொள்கிறான். வடக்கிழக்கிலுள்ள அத்தனை பேர்களையும் பலத்தைக் காட்டி மிரட்டி தனக்கு அடிபணியச் செய்கிறான். அதேநேரம், கைரோ நாடு நான்கு பிளவுபட்ட சக்திகளோடு போராடிக் கொண்டிருக்கிறது. இளைஞரான மன்னருக்கு முடிவெடுக்கக்கூட அதிகாரம் இல்லை. குரோனோ, அரிஸ்டோகிரேட், வல்கல்லா என மூன்று சக்திகளோடு சமரசம் செய்துதான் அரசரின் ஆட்சி நடக்கிறது. ரோமன் உடலுக்குள் தீயசக்தி இனக்குழுத் தலைவர...

பலவீனமான இளைஞனின் உடலுக்குள் புகுந்து துரோகிகளை பழிவாங்கத் தொடங்கும் தற்காப்புக்கலை மாஸ்டரின் ஆன்மா!

படம்
          டாமினேட்டர் ஆப் மார்சியல் காட்ஸ் எபிசோடு 29 சீன டிராமா குயின் சென்னுக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். குயின் குடும்பம், நாட்டின் ராணுவத்தில் உயர்பதவிகளைப் பெற்றுள்ளது. அத்தனைக்கும் குயின் சென்னின் தாத்தா, குறிப்பிட்ட எல்லைப்பிரிவுக்கு தலைவராக இருப்பதால் சாத்தியமானது. அவரது மகள் குயின் யூசெ, முகம் தெரியாத ஒருவரை காதலித்து மணம் செய்துகொள்கிறாள். குழந்தை பிறந்தபிறகு, தந்தையின் வீட்டுக்கு வருவதால் ஊர் அவர்களை ஏசுகிறது. இப்படி வளரும் குயின்சென்னுக்கு, ஆன்ம ஆற்றல் பெரிதாக வளரவில்லை. அந்த நேரத்தில் அவனது உடலுக்குள் சொர்க்கத்தில் உள்ள கடவுளின் ஆன்மா உள்ளே நுழைகிறது. அவருக்கு துரோகம் செய்த நண்பன், மோசம் செய்த காதலி ஆகிய இருவரை பழிவாங்கும் நோக்கம் உள்ளது. அதை குயின்சென்னின் பலவீனமான உடலைக் கொண்டு எப்படி செய்கிறார் என்பதே கதை. இப்படியான கதைகள், மாங்கா வடிவில் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. எனவே, கதையில் பெரிய ட்விஸ்டுகள் ஏதுமில்லை. பொதுவாக பார்வையாளர்கள் நினைக்கும்போது பாட்டு, காமெடி என போக்கிரி படத்தில் காட்சிகள் வருமே அதேபோல்தான் இங்கும் நடக்கிறது. முக்...

நாய் போல ஒடுங்கி வாழும் இளைஞன் வீர தீர சூரனாகி வாள் எடுக்கும் கதை!

படம்
  சோல் ஆஃப் பிளேட்ஸ் சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப் நாம்கூங் என்ற குடும்பம் வாள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரும்பாடுபட்டு வாள் ஒன்றைச் செய்கிறார். ஆனால் அப்படி செய்யும்போது மனதில் உருவாகும் ஆசை,வாளில் தீய ஆன்மாகவாக மாறுகிறது. எனவே, அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அந்த நேரம் பார்த்து புகழ்பெற்ற வாள்வீரர், அதை திருடிக்கொண்டு செல்கிறார். அவருக்கு அந்த வாளை வைத்து நிறைய விஷயங்களை சாதிக்க ஆசை. உண்மையில் அந்த வாளைத் தேடி ஏராளமானவர்கள் சுற்றி வருகிறார்கள். அந்த வாள் யாருக்கு கிடைத்தது என்பதே கதையின் இறுதிப்பகுதி.  படத்தில் நாயகனுக்கு பெயரே நாய்தான். மிஸ்டர் நாய் என அழைத்து தூற்றுகிறார்கள். அவனது இளமைக்காலம் கொடுமைகள் நிறைந்தது. ஒரு துண்டு இறைச்சிக்காக நாயுடன் சண்டையிட்டு வாழ்கிறான். அப்படியே வாழ்ந்து கோழைத்தனமும், உயிரைக் காப்பாற்றி்க்கொள்ளும் சாதுரியமும் வருகிறது. ஆனால் வீரம், தைரியம், நேர்மை வரவில்லை. இதை அவன் மெல்ல கற்றுக்கொண்டு வாளை எப்படி கையில் எடுத்து வாளின் ஆன்மா இருந்தாலும் இல்லையென்றாலும் வீரனாக இருக்கிறான் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார்கள்....

எட்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்ட இரண்டு வாள் வீரர்களின் பிள்ளைகள் போடும் பழிக்குப்பழி திட்டம்!

படம்
 தி ஹைடன் ஃபாக்ஸ்  சீன திரைப்படம்  ஒன்றரை மணி நேரம் ஐக்யூயி ஆப் இரண்டு சிறந்த வாள் வீரர்கள், எட்டு எதிரிகளால் நயவஞ்சகமாக வாளில் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களின் இறப்பிற்கு, அவர்களது பிள்ளைகள் பழிவாங்குவதுதான் கதை.  இந்த திரைப்படத்தின் பலமே சண்டைக்காட்சிகளும். திடீரென நடக்கும் பல்வேறு திருப்பங்களும்தான்.  ஒரே வரியில் மேலே கதையை சொன்னாலும் படத்தை பார்ப்பவர்களுக்கு நாயகன் யார், எதனால் இப்படி துரோகியாக மாறி நடந்துகொள்கிறான் என்பது புரியாது. அதற்கெல்லாம் இறுதியாகத்தான் பதில் சொல்கிறார்கள். திரைப்படம் எடுத்த வகையிலும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இறுதிக்காட்சி முழுக்க பனிபோர்த்திய இடத்தில் நடக்கிறது. அதுவே ஒரு  சொல்ல முடியாத திகிலை, பயத்தை மனதில் ஏற்படுத்துகிறது.  ஹூ யிடாவோ என்ற வாள் வீரர் ஒரு பொக்கிஷத்திற்கான சாவியை வைத்திருக்கிறார். அதற்கான வரைபடமும் இருக்கிறது. அதைப் பெறவே எட்டு வில்லன்கள் அவரையும், இன்னொரு எதிராளியையும் திட்டமிட்டு மோதவிட்டு விஷம் வைத்து கொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியாத விஷயம், அந்த பொக்கிஷத்தை அவ்வளவு எளிதாக பெற முடியாது....

பட்டுநூல் மாவீரனின் மறுபிறப்பு பழிவாங்கல் கதை!

படம்
  ஸ்வார்ட் டைனஸ்டி 23 எபிசோடுகள் - மொத்த எபிசோடுகள் 30க்கும் அதிகம சீன டிராமா ராக்குட்டன் விக்கி  பா எனும் வாள் பயிற்சி அகாடமி இருக்கிறது. அதன் தலைவர் ஹெங் என்ற அரசருக்கு போரில் உதவுகிறார். இதனால் அரசர மூன்று ராஜ்யங்களையும் வெற்றி கொள்கிறார். ஆனால் போரின் இறுதியில் வாள் பயிற்சி அகாடமி தலைவரின் பங்களிப்பு காரணமாகவே தான் வெற்றிபெற்றோம் என தாழ்வுணர்ச்சியால் தவிக்கிறார். இதிலிருந்து மீள துரோகம் செய்து வாள் பயிற்சி அகாடமி தலைவரைக் கொல்கிறார். இதில், அவருக்கு அகாடமி தலைவர் காதலியும் உதவுகிறார். இருவரும் சேர்ந்து அவரை விருந்து ஒன்றில் தாக்கி கொல்கிறார்கள். பிறகு அந்த காதலி மன்னரை மணந்துகொள்கிறாள். அந்த துரோகத்தை எதிர்கொள்ள முடியாத வாள்வீரர், தன்னைத்தானே அழித்துக்கொண்டு இறந்துபோகிறார். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை.  அகாடமி தலைவரிடம் பயிற்சி செய்த மாணவர்கள் சிலர், அவருக்காக பழிவாங்க காத்திருக்கிறார்கள். அதற்கெனவே உயிரை பத்திரமாக வைத்திருக்கிறார்கள். மற்றும் சிலரோ, ஹெங் அரசில் இணைந்து சுயநலமாக மாறி தங்கள் வாழ்க்கைக்கு என்ன கிடைக்கும் என பார்க்கிறார்கள். நிகழ்காலத்தில், ...

வாள் துறவியின் வாரிசாகும் புத்தகப்புழு!

படம்
  ஸ்வார்ட்ஸ்மேன் ஸ்காலர் மாங்கா காமிக்ஸ் நூலகமே கதி என கிடக்கும் கல்வியாளன், தற்காப்புகலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் வழியாக வாள்வீச்சு பற்றிய அறிவைப் பெற்று சாதனை செய்யும் கதை. சிறப்பான கதை. அதை மெல்ல கூறியவிதமும் அருமை. நாயகன் பெயர் வூன். தலையில் தொப்பி ஒன்றை வைத்துக்கொண்டு வருகிறான். அவனைப் பார்க்கும் யாருக்குமே அப்பாவியான நூல்களை மட்டுமே படிக்கும் ஆள் என்ற எண்ணமே வரும். ஆனால், தற்காப்புக்கலை பற்றிய கேள்விகள் வந்தால், அதில் பதில்களைக் கூறுவதோடு வீரரின் தவறுகளைக் கூறி அதை செய்துகாட்டி திருத்தவும் செய்கிறான். அங்குதான் பலரும் ஆணவத்தை விட்டு அவனை மாஸ்டர் என பணிந்து போகிறார்கள். மரியாதை கொடுக்கத் தொடங்குகிறார்கள்.  வூனுக்கு நிலையான மாத சம்பளம் என்பதே லட்சியம். வேறு எதையும் அவன் பெரிதாக யோசிப்பதில்லை. குழந்தைபோலவே கள்ளமின்மையோடு இருக்கிறான். ஆனால், அவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனை பயன்படுத்திக்கொள்ள ஏராளமான திட்டங்களை தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் அவனை சீண்டும்போது அவன் கொடுக்கும் பதிலடி நினைத்துப் பார்க்க முடியாத வலியைத் தருகிறது. தற்காப்புக்கலை பற்றிய ஆராய்ச்சியில...

உலக அனுபவத்திற்காக பேய்கிராமத்தை விட்டு வெளியேறும் வைத்திய வீரன்!

படம்
  மில்லினியம் அல்செமிஸ்ட் மாங்கா காமிக்ஸ் 100-- பேய்க்கிராமம் எனும் இடம் சபிக்கப்பட்ட இடம். அங்கு செல்பவர்கள், திரும்ப உலக வாழ்க்கைக்கு வரவே முடியாது. இங்கு, திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வாள் வீரர்கள் என பலரும் வந்து வாழ்கிறார்கள். இங்கு வீரர் ஒருவர் தனது முதலாளி குழந்தையை மரத்தில் கொண்டு வந்து விடுகிறார். அழும் குழந்தையின் வாயில் துணியை திணித்துவிட்டு  செல்கிறார். அது யார் வீட்டு குழந்தை, ஏன் அதை அழாமல் வாயில் துணி வைத்து பாதுகாக்கிறார்கள் என்பது கதையில் பின்னாடி வரும் என நம்பலாம்.  அந்த குழந்தைதான் நாயகன். அவன், குழந்தையாக இருக்கும்போது பேய் கிராமத்தில் வாழும் நான்கு முதியவர்கள் எடுத்து வளர்ப்பு தந்தைகள் போல கவனித்து வளர்க்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்டவர்கள். குழந்தைக்கு தங்களது இனக்குழுவின் பல்வேறு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். மருத்துவம், திருட்டு, வாள்வீச்சுக்கலை, பொறிகளை அமைப்பது, ஆயுதங்களை உருவாக்கும் கலை என அனைத்தையும் பல்லாண்டுகள் கற்கிறான். கதையில் நம்மை ஆச்சரியப்படுத்துவது, நாயகன் தனக்கென சா...