இடுகைகள்

பூப்புனித விழா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாணம்.... ஆஹா கல்யாணம்! - கடிதங்கள்

  கல்யாணம் ஆஹா கல்யாணம்!    வடக்குப்புதுப்பாளையம்                                                    அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நான் நேற்று பூப்புனித நீராட்டு விழா ஒன்றுக்கு சென்றேன் . பெரியம்மாவின் பேத்திக்கான விழா . அம்மாவைக் கூட்டிக்கொண்டு பூந்துறை மண்டபத்திற்கு சென்றேன் . நல்ல கூட்டம் . நான் அங்கு எதுவும் சாப்பிடவில்லை . அம்மா சாப்பிட்டுவிட்டு வந்தார் . எனக்கு சில உறவினர்களை அடையாளம் காட்டினார் . பலருக்கும் எனது சகோதரர் குமார் அளவுக்கு நான் பழக்கம் ஆகவில்லை . அதில் வருத்தம் ஏதுமில்லை . விழாவில் எனக்கு பாடம் எடுத்த கல்லூரி ஆசிரியர் ஒருவரைப் பார்த்தேன் . எப்போதுமே பதற்றமாகவே பாடம் எடுப்பவர் , இப்போது வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கல்யாணம் செய்து வைப்பதையும் வேலையாக செய்து வருகிறார் . திருமணம் பற்றி விசாரித்தார் . ஆனால் அதற்கு நான் பதில் சொல்லுவதை அவர் விரும்பவில்லை . அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்க நினைப்பதற்குள் அடைமழை பெய்வது போல அவரது திருமணம் செய்து வைக்கும் வேலைகளைப் பற்றி பேசிவிட்டு சென்றுவிட்டார் . கல்லூரியில் அவரது பாடம் நடத்தும் ப