இடுகைகள்

ஐஐடி குவகாத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காவிமயப்படுத்தலையும், ஊழல்களையும் எதிர்த்ததால் தேசவிரோதி ஆகிவிட்டேன்!

படம்
brijeshkumar/edexlive நீதிவெல்லும் என்ற நம்பிக்கை எனக்குண்டு ! பிரிஜேஷ் குமார் , உதவிப் பேராசிரியர் . பிரிஜேஷ்குமார் , ஐஐடி குவகாத்தியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் . 2011 ஆம் ஆண்டிலிருந்து மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பணி . இவர் கற்பித்தலுக்காக உலகிற்கு தெரியவரவில்லை . தனது மேலதிகாரிகள் ஐஐடியில் செய்த பல்வேறு ஊழல்கள் முறைகேடுகளை வெளியே சொல்லி உலகம் அறிய வைத்தார் . அதற்காகவே பிரிஜேஷ் பெயர் அனைவராலும் கூறப்பட்டது . உண்மையைப் பேசினால் சாதாரண மனிதருக்கு என்ன ஆகும் என்பதற்கு பிரிஜேஷ் மிகச்சிறந்த உதாரணம் . நிர்வாகத்திற்கு எதிராகவும் , அதில் செல்வாக்கு உள்ள மனிதர்களைப் பகைத்துக்கொண்டதால் அவர் தான் தங்கியுள்ள இடத்தை விட்டு உடனே காலி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார் . மேலும் அவரது பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இதற்கும் மேலாக அவருக்கு மன உளைச்சல் அளிக்கும்படியாக , அவர்மீது காவல்துறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . ஐஐடியில் பெருகும் ஊழல் , அங்கு அதிகரித்து வரும் இந்துத்துவ நடவடிக்கைகள் பற்றி பேசினோம் .