இடுகைகள்

ட்ரேஸி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாரகை - சிறையில் தள்ளியவர்களை பழிவாங்கும் இளம்பெண்ணின் துணிச்சல்- ரா.கி.ரங்கராஜன் நாவல்

படம்
தாரகை ரா.கி.ரங்கராஜன் அல்லயன்ஸ் 624 பக்கம் இந்த முறை ஆசிரியர் முழுக்க வெளிநாட்டில் கதையை நடத்திச் செல்கிறார். கதையின் நாயகி, ட்ரேசி. வங்கியில் வேலை செய்து வருகிறாள் ட்ரேசி. அவளது வாழ்க்கையில் அம்மா துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த சம்பவம் நடந்தபிறகுதான் ட்ரேசியின் வாழ்க்கை மாறுகிறது. அவளது பணக்கார காதலன், மெல்ல விலகிப்போகிறான். வேலையை விட்டு நீக்கப்படுகிறாள்.ரொமானோ என்ற குற்றவாளிதான் அவளது அம்மாவின் தற்கொலைக்கு காரணம். அதற்கு பழிவாங்கும் முயற்சியில், மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள். அதிலிருந்து விலகி வரும்போது வாழ்க்கை வெகுதூரம் தள்ளிப்போயிருக்கிறது. தனது வாழ்க்கையை, அவள் எப்படி மீட்கிறாள் என்பதுதான் கதை. மொத்தகதையும், பரபர வேகத்தில் செல்கிறது. ட்ரேசியின் வாழ்க்கையில் துயரமான சூழலில் தனக்கு உதவும் மனிதர்கள் யார், ஆறுதல் சொல்பவர்கள் யார் என தெரிந்துகொள்கிறாள். அப்படித்தான் அவளது வாழ்க்கையில் சிறுமி ஆமி, மார்சன், கந்தர், ஜெஃப் ஆகியோர் வருகின்றனர். சிறையில் நடக்கும் சம்பவங்களை வாசிக்கும் ஒருவரால் எளிதாக கடப்பது கடினம். வல்லுறவு செய்யப்பட்ட